Thursday, December 27, 2007

இங்கேயும் ஒரு வாழ்த்து (தலைவிக்கு)

"கச்சேரிக்கு பாட்டு ரெடியா?"

"ரெடி மேடம்!"

"சேம்பலுக்கு ரெண்டு பாட்டு எடுத்து விடு.. கேட்போம்.."

"கல்யாணம் கச்சேரி கால்கட்டு என்னாச்சு.. ரயிலேறி போயாச்சுடா"

"போச்சு போச்சு!!! எல்லாமே இன்னைக்கு ரயிலேறிதான் போகப்போகுது! நான் பிறந்தநாள் கச்சேரிக்கு பாட்டு கேட்டா, நீ கல்யாணத்துக்கு பாட்டு ரெடி பண்ணிட்டிருக்கே?"

"ஏம்மா, இன்னைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்ன்னா நாளைக்கு கல்யாண கச்சேரிதானே! அதான் எல்லாம் கலந்த கலவையா ரெடி பண்ணியிருக்கோம்ல.."

"உனக்கு குசும்பு ஜாஸ்தியாயிருச்சுலே.. என்னிக்காவது சொன்னதை சொன்னபடி செஞ்சிருக்கியா நீ?"

"கோச்சிக்காதம்மே.."

"சரி, அழகா ஒரு பிறந்த நாள் வாழ்த்து பாடு"

"ஹேப்பி பர்த்டே டூ யூ..
யூ ஆர் போர்ன் இன் ட ஜூ
லைக் அ மங்கீ எண்ட் கங்கரூ..
ஹேப்பி பர்த்டே டூ யு.."


"அடே அடே.. இது என்ன பிறந்த நாள் வாழ்த்து பாட்டா? ஒருத்தியை வாழ்த்தி பாட சொன்னா, நீ என்ன மங்கீ, கங்காருன்னு எல்லாம் பாடுற?"

"சாரி சாரி... இன்னொரு சான்ஸ் கொடுங்க.... வேற பாட்டு பாடுறேன்.."

"ம்ம்.. சரி.. பாடு"

"எல்லோரும் கொண்டாஆஆஆஆடுவோம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..."

"ஏன் இந்த இழுவை.. இது ஒரே ஒரு பொண்ணுக்கு பர்த்டே.. எல்லாரும் கொண்டாடுறதுக்கு இது என்ன ஊர் திருவிழாவா?"

"நீங்க ரொம்ப மோசம்.. நான் பாடுற எல்லாத்துக்கும் நீங்க எதிராவே பதில் சொல்றீங்க.. எவ்வளவுதான் நான் தாங்குறது? அவ்வ்வ்..."

"ஒழுங்கா பாடினா யார் தப்பா சொல்ல போறா.. சரி, கடைசியா ஒரு சான்ஸ்.. பாடுறீயா?"

"பாடுறேன் பாருங்க.. நீங்களே அசந்து போக போறீங்க.. அஹெம்"
குரலை சரி செய்கிறார்..

"தல போல வருமா.. ஹேய்.. தல போல வருமா?
நடையில் உடையில் படையில் கொடையில்
தொடை தட்டி அடிப்பதில்
தலை வெட்டி முடிப்பதில்
தலை போல வருமா..."

"ம்ம்.. சூப்பர் சாங்... இதுவே வாழ்த்து பாடலா பாடிடுவோம்.. ஆரம்பிக்கலாமா?"

"தல போல வருமா... தல போல வருமா?
நெஞ்சில் பட்டதை சொல்வாளே...
இவளுக்கு இரவிலும் வெயில்தானே..
அட்டகாசத்தில் புயல்தானே.
நீல வானத்தை மடியில் கட்டுவாள்..
நிலவின் முதுகிலே முரசு கொட்டுவாள்..."

"ஹேய்.. நிறுத்து.. நிறுத்து... நைட் எல்லாம் வெயில் படம் பார்த்தா வெயிலாகிடுமா? சரி, நீல வானத்தை மடியில் ஏன் கட்டணும்.. எனக்கு இப்பவே காரணம் தெரிஞ்சாகணும்.. சொல்லு சொல்லு"

"பாட்டு பாடுனா, கேட்கணும்.. ஆராய கூடாது... கச்சேரிக்கு லேட்டாச்சு.. ஹ்ம்ம்.. கிளம்புங்க.. (நானும் அப்படியே அப்பீட்டு ஆகிக்கிறேன்.. தாங்கலைடா இவங்க பாடு)"

அடுத்து என்ன... தாரை தப்பட்டை முழங்க பேக்கிரவுண்டுல தல போல வருமா பாட்டோடு ஒரு வாழ்த்து செய்தியும் சொல்லியாகணும்ல.. கோவை நகரத்து கொள்கை புயல், பயமறியா பாவையரின் தலைவலி.. ச்சீ.. ச்சீ.. தலைவி.. எங்கத் தங்கத் தல (எத்தனை கேரட்ன்னு எல்லாம் கேக்கப்படாது) அனுசுயா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இன்று போல் என்றும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போமாக..


Thursday, December 6, 2007

விருது வழங்கும் விழா

வந்தவங்களுக்கு எல்லாம் வாங்க வாங்கன்னு சொல்லியே சொல்லியே வாய் வலிச்சிருச்சு. அம்புட்டு கூட்டம் அள்ளி தள்ளிருச்சுல்ல நம்ம சங்கத்து போட்டிக்கான பரிசு வழங்கும் விழாவுல. எல்லாரும் காத்திருக்க சரியா மாலை 6 மணிக்கு விழா துவக்கம். குத்துவிளக்கேத்தி நம்ம விழாவ துவக்கி வெச்சது யாருன்னு உங்களுகு தெரியாதில்ல. கீழ படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க.



த்ரிஷா மேடமே தான். அவங்க குத்துவிளக்கு ஏத்தி முடிச்சதும் நம்ம சங்கத்து தலைவி அனு சங்கத்த பத்தியும் சங்கத்து தங்கங்களான எங்கள பத்தியும் கொஞ்சம் அறிமுகம் செஞ்சாங்க. அதுக்கப்புறம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு சும்மா மேடையே அதிருச்சுல்ல.. உங்களுக்காக சில படங்கள் இங்கே





எல்லாம் முடிஞ்சு பரிச அறிவிக்கற தருணமும் வந்துது. எல்லாரும் ஆர்வமாய் எதிர்பார்த்த நகைச்சுவை திலக பரிசை வாங்கப்போறது யாருன்னு எதிர்பார்க்க இதுக்கு மேல காக்க வெச்சா நல்லா இருக்காதுன்னு வெற்றியாளர அறிவிக்க நம்ம ஷ்ரேயா கோஷல் மேடைக்கு வந்தாங்க.



அவங்க கொஞ்சும் குரல்ல "பரிசை பெறுபவர் திரு.குசும்பன்" னு சொல்ல நம்ம கேமராவ அப்படியே திருப்பி குசும்பன பாத்தா ஷ்ரேயா கோஷலின் திருவுருவம் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமேன்ற ரேஞ்ச்ல ஜொள்ளூ விட்டுட்டிருக்காரு.. அப்புறம் அவர உலுக்கி எழுப்பி மேடைக்கு கூட்டிட்டு போனா இவர பாருங்க பரிச வாங்காம ஷ்ரேயா கோஷலையே லுக்கு விட்டுட்டு இருக்காரு. :((



இப்படியாக அவர் விட்ட ஜொள்ளுல மயங்கிய ஷ்ரேயா கோஷல் அவருக்குன்னு ஸ்பெஷலா ஒரு பாட்டு பாடினாங்க.



அவருக்கு குடுக்க செஞ்ச அவார்டு இன்னும் ஷ்ரேயா கோஷல் கிட்டயே இருக்கறதா கேள்வி. அவரும் என் நினைவா அது அவங்க கிட்டயே இருக்கட்டும்னு பெருந்தன்மையா சொல்லிட்டாரு.



பரிசு பெற்ற குசும்பருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கு இன்னொரு பரிசா எங்கள் சங்கத்தில் ஜனவரி மாதம் சிறப்பு பதிவுகள் போட பெருமையுடன் அழைக்கின்றோம்.

Saturday, December 1, 2007

போட்டியில கலந்து கொண்டவங்களுக்கு நன்றி




நாங்க ரெடி நீங்க ரெடியா? போட்டிக்கான தேதி முடிஞ்சாச்சுங்க. இந்த (நவம்பர்) மாத ஆரம்பத்துல ஆரம்பிச்சு என்ன கொடுமை சார்னு தலைப்பு வெச்சு எழுத சொல்லி இருந்தோம் அதுக்கு நம்ம சக நண்பர்களின் படைப்புகள் பல வந்துச்சு.

ஆனா பாருங்க படம் போட்டு இன்னொரு தலைப்பு வெச்சோம் அதுக்கு மட்டும் ஒரு படைப்பு கூட வரல என்ன கொடுமை சார் இது? :)

கற்பனை பத்தலையா இல்ல படம் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சானு தெரியல. எப்டியோ போட்டி நல்லபடியா நடந்து முடிஞ்சுது.

போட்டிக்கு வந்த படைப்புகளில் பரிசு பெற்றவங்கள தேர்ந்‍தெடுத்து இன்னும் ரெண்டு நாள்ள அறிவிப்பு வெளியிடறோம். அதுக்கு முன்னாடி இந்த போட்டில கலந்துகிட்ட எல்லாருக்கும் எங்க பயமறியா பாவையர் சங்கத்து சார்புல நன்றி நன்றி நன்றி :)

Monday, November 26, 2007

சாவடிக்கிறாங்களே என்னைய!!!!!

எத்தனை நகைச்சுவை வந்தாலும் இதுக்கு ஈடாகுமா?

சொல்லுங்க.. இதுக்கு ஈடாகுமா?



“மெதுவா மெதுவா.. சுவருக்கு வலிக்குமுல்ல.”

“சாவடிக்கிறாங்களே என்னைய!”

மறக்க முடியுற டயலோக்கா இது! எத்தனை தடவை இந்த டயலோக் வச்சி சுத்தி உள்ளவங்களை காமெடியனா ஆக்கியிருக்கோம் நாங்க..

ம்ம்.. அதெல்லாம் ஒரு கனாக்காலம்.. போதும் நிறுத்துங்க.. உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் நிறுத்துங்க.. இந்த டயலோக் கேட்டதும் எனக்கு வயசாயிடுச்சோன்னு நீங்க நினைக்க ஆரம்பிச்சிருப்பீங்களே.. அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடக்கூடாது..
நம்ம கவிதாயினியே எனக்கு பாட்டின்னா நான் சின்ன குழந்தைன்னு உங்களுக்கு சொல்லியா தெரியணும்?

தெரியுமே! உடனே ஆரம்பிச்சிடுவீங்களே அடுத்த டயலோக்கை??

ன் கொடுமை சார் து!!!!

அதானே?


கரேக்ட்.. நானும் அதான் சொல்ல வர்றேன்.. போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. வந்து பட்டையை கிளப்பலாம்.. உங்க எண்ட்ரியை பதிவு பண்ணியாச்சா??

Sunday, November 25, 2007

என்ன கொடுமை சார் இது??

தீபாவளிக்கு ஒரு குஷில ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு ஓடியாச்சு. தம்பியும் வந்து ஆஜர் ஆயிட்டான். நம்ம கைலதான் ஒரு கேமரா மாட்டிக்கிச்சு இல்ல ;) சும்மா ப்ரொஃபஷனல் கொரியர் ரேஞ்சுக்கு... ச்சே... ப்ரொஃபஷனல ஃபோட்டோக்ராபர் ரேஞ்சுக்கு வளைச்சுக் கட்டி ஃபோட்டோவா எடுத்து தள்ளினேன். எங்க பாட்டி ஆச்சர்யமா அந்த டிஜிகேமயே பாத்துட்டு இருந்துச்சு. இதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்ததும் இப்படி யாருமே காட்டினதில்லனு வேற ஒரே ஃபீலிங்கா விட்டுட்டு நான்தான் அதுகிட்ட காட்டறேன்னு என் மேல ஒரு பாசப் பார்வைய வீசுச்சு.

"அய்யோ ஆயா... அவங்க இதுவரைக்கும் வச்சிருந்தது வேற கேமரா. இது இப்போதான் புதுசா வந்திருக்கு" னு நான் சொல்லவும்

"எவ்வளவு கண்ணு இது"-ன்னு கேட்டுச்சு. நானும் அப்படியே பந்தா விடலாம்னு

"இருபதாயிரம்"-னு சொன்னதும் அப்படியானு எதும் சொல்லாம ஆ-னு நாங்க ஃபோட்டோ எடுக்கறதையே பாத்துட்டு இருந்துச்சு. நானும் என் தம்பியும் ஓடி போயி எடுத்த ஃபோட்டொஸ் எல்லாத்தையும் சிஸ்டத்துல காப்பி பண்ணினோம். எங்கம்மாவும் எங்களோட வந்து உக்காந்துக்கிட்டாங்க. எல்லாத்தையும் ஓபன் பண்ணி பாத்துட்டு இருந்தப்போ ஒரு ஃபோட்டோ டிம்மா இருக்குனு நான் ஃபீல் பண்ணவும் என் தம்பி உடனே அதை ஃபோட்டோஷாப்ல போட்டு ப்ரைட்டாக்கினான். என் தம்பி சாஃப்ட்வேர் இஞ்சினியர் கிடையாது. எங்க வீட்டோட ஒரே சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் அடியேன்தான். அதனால அவன் இந்த வேலை பண்ணவும் எங்கம்மா ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க. அப்படியே பெருமை தாங்கலை. எனக்குனா ஒரே எரிச்சல். சரி நாம எதாவது பண்ணி நாமளும் ஒண்ணும் சளைச்ச ஆளில்லைனு காட்டனும்னு ஒரு விபரீத முடிவ எடுத்தேன். முடிவ எடுத்ததுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு. அய்யகோ! இந்த இத்து போன ஃபோட்டோஷாப்ப கத்துக்காம போனியேடி செல்லக்குட்டி-னு என்னை நானே நொந்துகிட்டு சரி எதாவது எடுத்து நம்ம MS-Paint அறிவ வச்சு சமாளிச்சடலாம்னு, எங்கம்மா ஃபோட்டோவ எடுத்து இதை பாருங்கம்மா கல்யாண ஆல்பத்துல எல்லாம் போடற மாதிரி பேக்ரவுண்ட் எப்படி மாத்தி தரேனு சொல்லிட்டு களத்துல இறங்கிட்டேன். அட ராமா! உள்ள ஒரு எழவும் புரியலை. நானும் வச்சுக்கிட்டு ஒரு கால் மணி நேரமா திரு தி்ருனு முழிச்சுட்டே உக்காந்திருந்தேன். அட புள்ளையே! சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டயே-னு உள்ளுக்குள்ள ஒரு பரிதாப குரல். எங்கம்மாவும் புள்ள எதாவது பண்ணும் பண்ணும்னு என்னையும் சிஸ்டத்தையும் மாறி மாறி பாத்துட்டே இருந்தாங்க.

என் உடன்பிறப்பு அதுக்கு மேல பொறுக்க முடியாம இங்க குடுக்கானு என் கைல இருந்து மவுஸ வாங்கி கசமுச கசமுசனு ஏதேதோ சித்து வேலையெல்லாம் பண்ணி ஃபோட்டோவ நான் சொன்ன மாதிரி சூப்பரா மாத்தி குடுத்தான். எனக்கு அவமானம் தாங்க முடியலை. எங்கயாவது ஃபேன் ஆஃப் பண்ணியிருக்குதானு பாத்தேன். வேற எதுக்கு???? :(((

எங்கம்மா என்னைய பாத்து கேவலமா ஒரு லுக் விட்டு "உன்னை போயி இவ்ளோ செலவு பண்ணி கம்ப்யூட்டர் படிக்க வச்சா ஒழுங்கா படிக்காம இப்படிதான் ஒண்ணுந்தெரியாம இருப்பியா? அவன் வேற படிச்சாலும் எப்படி சூப்பரா எல்லாம் பண்றான். இப்பயாவது அவன்ட்ட கத்துக்கோ"-னு சொல்லிட்டு எழுந்து போயிட்டாங்க. முருகா! ஏன் என்னை சோதிக்கற?!! ஃபோட்டோஷாப் தெரியாததால நான் சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் இல்லைன்ற அவப் பெயரா???? என்ன கொடுமை சார் இது?????

---------------------------------------
போட்டி நாள் முடிய இன்னும் ஐந்தே நாட்கள்தான் இருக்கு.. கலந்துக்க நினைப்பவர்கள் சீக்கிரமே உங்க பதிவுகளை அனுப்புங்க..

Monday, November 12, 2007

மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா

என்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப் போறீங்களா இல்லையா..?

ஏன்.. என்னாச்சு சாந்தி..?

நம்ம குழந்தையைப் பார்த்து "சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி"ன்னு பாடுறா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?

என்ன முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அமைச்சர் வீட்டுக்கு எதுக்கு கவர்னர் வந்துட்டு போறாரு..?

புது வேலைக்காரிக்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செஞ்சு வைக்க வந்தாராம்...!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நம்ப அய்யாவுக்கும் வேறொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு முனியம்மா..

நான் நம்ப மாட்டேன்மா.. நீங்க என்னை வெறுப்பேத்த இப்படியெல்லாம் சொல்றீங்க...!



Wednesday, November 7, 2007

தீப ஒளி வாழ்த்துக்கள்..

வாங்க மக்களே வாங்க..

அட எல்லாரும் தீபாவளி மூட்ல இருக்கீங்களா? சூப்பருங்க. வருஷத்துல ஒரு முறைதாங்க வருது தீபாவளி! 2-3 நரகாசுரன் இருந்திருந்தா வருஷத்துல 2-3 தடவை தீபாவளிங்கிற பேருல கொண்டாடி பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா காது செவுடாகிற மாதிரி வெடி கொளுத்தி போடலாம்தான்.. ஆனா பாருங்க.. நம்ம ஆதங்கத்தை கேட்கத்தான் ஆள் இருக்கா என்ன..

கவிதாயினி என்னடான்னா பொட்டு வெடி வெடிக்க போறேன்னு சொல்லிட்டு நீளமா குச்சி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க.. G3 ரெண்டு நாளைக்கு முன்னவே சங்கத்து பக்கம் ஆளை காணோம். கேட்டால் யார் யார் வீட்டுக்கு எப்பெப்போ போகணும், என்ன சமையல்ன்னு குறிப்பெடுத்துட்டு இருக்காங்க. ஹ்ம்ம்.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு!

இம்சை அரசி விகடன்ல வந்துட்டேன்னு ட்ரீட் தர்றேன்ன்னு சொன்னாங்க. குரல் மட்டும்தாங்க கேட்டுச்சு. அதுக்கப்புறம் அவங்களையும் சங்கத்து பக்கம் காணவே இல்லை. ஆமா.. காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டணும்ங்க. கண்மணியக்கா காணாமல் போயிட்டாங்க. எங்கேயாவது பார்த்தீங்கன்னா சங்கத்துல கொண்டு வந்து விடுங்க. இவருடைய அங்க அடையாளங்கள்: ரெண்டு கண்கள், அவைகளை மறைக்கிற மாதிரி பெரிய சோடா பொட்டி கண்ணாடி, ரெண்டு காதுகள். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. ஒரே ஒரு மூக்கு.. ஒரே ஒரு வாய்தான். கைகளும் கால்களும் ரெண்டுதான்னு நினைக்கிறேன்..

அனுசுயா இங்கேதான் எங்கேயோ இருந்தாங்களே!

“அனுசுயா.. அனுசுயா.. இருக்கீங்களா?”

ஹ்ம்ம்.. இவங்க மட்டும்தான் என்ன பண்ணுவாங்க. கோவை மாநகரமே இவங்களை நம்பிதானே இருக்கு..

என்ன கொடுமை சார் இது!!!!

சரிங்க.. ஒத்த ஆளா இங்கே நின்னாலும், பாப்பாக்களின் சார்பா எல்லாருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்... சே சே.. தீபாவளி வாழ்த்துக்கள்!

அப்படியே கீழே இந்த வாழ்த்து பொட்டியை பாருங்க..


என்னத்தான் வளர்ந்தாலும் நம் அடையாளத்தை, கலாச்சாரத்தை மறந்திட கூடாதுங்க. எல்லாரும் மனமகிழ்ச்சியுடன் சந்தோஷமாக இருக்க இறைவனை வணங்குவோமாக..

சரி, இப்போது இன்னொரு முக்கியமான மேட்டர்.. சங்கம் போட்டிக்கு உங்கள் படைப்பு ரெடியாச்சா? இன்னும் இல்லையா? என்ன கொடுமை சார் இது!! ஒரு சின்ன பையன் போட்டின்னு வந்துட்டா கலத்துல குதிக்காமல் விடுறதில்லைன்னு பட்டையை கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

இந்த தீபாவளி விழாவில் “என்ன கொடுமை சார் இது!” தலைப்புக்கு பொருத்தமா எதாவது இருந்தால் அதையும் எழுதலாமே!

ஆமா... தலை தீபாவளி கொண்டாடும் அண்ணாக்களும் அக்காக்களும் சந்தோஷமா இருக்கீங்களா? உங்களுக்கு படத்தை கொண்டு பதிவெழுதும் போட்டி பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க.

அனைவருக்கும் மீண்டும்
தீபாளி வாழ்த்துக்ள்!!!

Thursday, November 1, 2007

நாங்க ரெடி... நீங்க ரெடியா??



அடடா எதுக்கு ரெடினு மண்டைய பிச்சுக்காதீங்க. இதோ தீபாவளி வந்துடுச்சு. கைல வச்சுக்கற கர்ச்சீப்புல இருந்து மாவாட்டுற கல்லு வரைக்கும் எல்லாத்துக்கும் ஆஃபர் போடறாங்க. பட்டாம்பூச்சி புடவை தட்டாம்பூச்சி புடவைனு புதுசா புதுசா அறிமுகப்படுத்தறாங்க. அப்பப்பா.... எங்க பார்த்தாலும் ஒரே ஜவுளிக் கடை விளம்பரம்.... கடை விளம்பரம்... விளம்பரம்... (நல்லா எக்கோ அடிக்குதா???;))) )

சரி நாமளும் தீபாவளி ஸ்பெஷலா சங்கத்துல புதுசா எதுனாச்சும் பண்ணோனுமின்னு சங்கத்து மக்கா எல்லாரும் சேர்ந்து நம்ம சங்கத்து ஆபிஸ் ரிசப்ஷன்ல, மீட்டிங் ரூம்ல, ஸ்விம்மிங் பூல்கிட்ட, தோட்டத்துலனு ரவுண்டு கட்டி யோசிச்சோம். Cappucino, Hot chocalateனு குடிச்சு, choc-a-vloc, chicken burger, veg croizantனு சாப்பிட்டு சாப்பிட்டு ஏதோ எங்களுக்கு இருக்கற குருவி மூளைய கசக்கி கசக்கி தீபாவளிக்கு மட்டும் ஏன்? நியூ இயருக்கும் சேர்த்தே பண்ணிடலாம்னு இந்த முடிவ எடுத்திருக்கோம். ஏதோ விபரீதமான முடிவு எதுனாச்சும் எடுத்துட்டோமானு பயந்துக்காதீங்க... ஹி... ஹி... ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இனி மேட்டருக்கு போவோம்.

இதனால எல்லாருக்கும் அறிவிக்கறது என்னன்னா..............

நமது ப.பா.சங்கம் சிறந்த நகைச்சுவை திலகத்தை போட்டி வைத்து தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். கீழே உள்ள தலைப்பிற்கோ அல்லது படத்திற்கோ அல்லது இரண்டிற்குமோ பொருத்தமான நகைச்சுவை பதிவை எழுதி papaasangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடுவர் குழு தீர்மானிக்கும் சிறந்த நகைச்சுவைப் பதிவருக்கு "நகைச்சுவை திலகம்" என்ற பட்டத்துடன் ஜனவரி மாதம் சங்கத்தில் எழுத வாய்ப்பும் வழங்கப்படும்.

போட்டிக்கான தலைப்பு :
என்ன கொடுமை சார் இது!!!

போட்டிக்கான படம் :


விதிமுறைகள் :

1. எவ்வளவு பெரிய பதிவு வேண்டுமானாலும் எழுதலாம்

2. எந்த ஒரு Celebrity, சக ப்ளாக்கர், உறவினர், நண்பர் என்று யாரையும் தாக்கி எழுதக் கூடாது

3. எந்த ஒரு பொதுவான வலைதளத்தையோ, வலைப்பூவையோ தாக்கி எழுதக் கூடாது

4. உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கான கடைசி தேதி 30/11/2007

5. ஒருவர் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

அவ்ளோதானுங்க....... come on guys........ cheer up.......... Rush ur entries soon...........

Tuesday, October 16, 2007

லேடீஸ் ஹாஸ்டல் லூட்டீஸ்

அட அட அட... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியானதால அமைதியா இருந்துட்டேன் . இனிமேல் தொடர்ந்து வருவேனு நினைக்கறேன். சரி மேட்டருக்கு வருவோம். காலேஜ் லைஃப் லூட்டீஸ், ராகிங் காமெடி, காலேஜ் லவ் ஸ்டோரீஸ் இப்படி காலேஜ் வச்சு நிறைய எழுதியிருக்காங்க. ஒரு சேஞ்சுக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல நாங்க பண்ணின லூட்டீஸ் எல்லாம் எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ ஒரு சின்ன ட்ரை :)))

நான் UG படிச்ச காலேஜ் பயங்கர ஸ்ட்ரிக்ட். அதும் ஃபர்ஸ்ட் இயர்ல அப்போதான் ஸ்கூல் முடிச்சு வந்த பொண்ணுங்கன்றதால எல்லாம் வார்டனை பாத்தா ரொம்ப பயந்துப்பாங்க. நாமதான் எங்க போனாலும் விதிவிலக்குதானே. நமக்குனு ஒரு செட் வேற எங்க போனாலும் அமைஞ்சிடுது. ஹி... ஹி... போயி ஒரு மாசத்துல லூட்டிய ஆரம்பிச்சாச்சு. எங்க ரூம்ல இருக்கறது எல்லாமே பயங்கர அராத்து கேஸுங்க. எப்பவும் ரொம்ப ஜாலியா இருக்கும். அதனால வேற ரூம் பொண்ணூங்களும் எங்க ரூம்ல எப்போதும் இருப்பாங்க. எப்பவும் ஒரு பன்னெண்டு, பதிமூணு பேரு இருப்போம்.

தினமும் சாயந்திரம் 6 மணில இருந்து 8 மணி வரைக்கும் ஸ்டடி அவர். காலேஜ் வந்ததுக்கப்புறமும் படி படின்னா நல்லாவா இருக்கு??? கொஞ்சமாவது அவங்களுக்கு மேல் மாடி வேலை செய்யக்கூடாது??? ச்சே... ச்சே... என்ன ஆளுங்க இவங்கன்னு ஒரு மூச்சு ஃபீல் பண்ணிட்டு வழக்கம் போல எங்க அரட்டை கச்சேரிய ஆரம்பிச்சோம். அப்படியே குட்டி குட்டி வட்ட மேஜை மாநாடு போட்டு அப்படி அப்படியே ஜோதில ஐக்கியமாயிட்டோம்(ஒண்ணா போட்டா வார்டன் வரப்போ மாட்டிக்குவோம்னு ஒரு சேஃப்டிக்காக). நானும் இன்னும் ஒரு மூணு பேரும் சேர் போட்டு உக்காந்து மாநாடு நடத்திட்டு இருந்தப்பதான் எங்க கண்ணுல படற மாதிரி உக்காந்திருந்த ஒரு கேங் அப்படியே மெல்ல எழுந்து நின்னாங்க. நாங்க நாலு பேரும் அவங்களைப் பாத்து ஏன்டி நிக்கறீங்க அப்படி இப்படின்னு கேட்டு பயங்கரமா ஓட்டறோம் அவளுங்க வாயவே திறக்கவே இல்லை. என்னடா இதுனு மெல்ல திரும்பி பாத்தா கதவுகிட்ட வார்டன்........ ஓ மை காட்..........

அடுத்த அஞ்சு நிமிஷத்துல வார்டன் ரூம்ல நின்னுட்டு இருந்தோம் :'( எங்க வார்டன் ரூம்ல ரூமை ரெண்டா பிரிக்கிற மாதிரி ஸ்க்ரீன் போட்டிருப்பாங்க. ஸ்க்ரீன்க்கு ஒரு பக்கம் அவங்க பெட் இருக்கும். கதவுக்கு பக்கம் இருக்கற சைடுல டேபிள் போட்டு நிறைய கதை புக்ஸ் வச்சிருப்பாங்க. ஒரு ரெண்டு பேர் மட்டும் அவங்க கண்ணுல படற மாதிரி போயி நிப்போம்(இது டர்ன் பேசிஸ்). இந்த தடவை டர்ன்ல நான் மாட்டிட்டேன். நானும் இன்னொரு பொண்ணும் வார்டன் முன்னாடி நின்னோம். அவங்க பாட்டுக்கு வாயில வந்ததெல்லாம் சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தலைய குனிஞ்சு ஓரக்கண்ணுல ஸ்க்ரீன் அந்த பக்கம் இருந்த துரோகிங்களை பாத்துட்டு நின்னோம். பிசாசுங்க கொஞ்சமாவது நாங்க பாவம்னு நினைக்க வேணாம். எல்லாம் சிரிச்சு சிரிச்சு ஹஸ்கி வாய்ஸ்ல எங்களை கமென்ட் அடிச்சிட்டு இருக்காளுங்க. அவளுங்க சிரிக்கறதை பாத்து எங்களுக்கும் சிரிப்பை அடக்க முடியலை. ஒருத்தி வேக வேகமா அங்க இருந்த கதை புக்ஸ் எடுத்து எது நல்லா இருக்குனு மேலோட்டமா பாத்து கலெக்ட் பண்ணிட்டு இருந்தா.

வார்டன் திட்டி சோர்ந்து போயி இதுங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாதுனு ஒரு கட்டத்துல "இந்த வாரம் ஊருக்கு கூட்டிட்டு போக உங்க பேரண்ட்ஸ் வருவாங்க இல்ல. அப்போ என்னை வந்துப் பாத்து என் பொண்ணு இனிமே இப்படி செய்ய மாட்டானு லெட்டர் எழுதி கொடுத்தாதான் விடுவேன்"-ன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாங்க. உடனே எல்லாரும் பயந்து போயிட்டோம். "இல்லை மேம்.... இனிமேல் இப்டி பண்ண மாட்டோம். ப்ளீஸ் மேம். இது ஒரு தடவை விட்டுடுங்க"-ன்னு அப்படியே பிட்ட போட்டோம். அவங்களும் அசர மாதிரி தெரியலை. நானும் என் ஃப்ரெண்டும் மூஞ்சிய ரொம்ப பாவமா வச்சுட்டு(நமக்கு நடிக்க சொல்லியா தரணும்) பேசி பேசி கடைசில எங்களையே என்ன பனிஷ்மென்டுனு சொல்ல சொன்னாங்க. ரொம்ப யோசிச்சு யோசிச்சு "ஒரு வாரத்துக்கு காலைல 6 to 8 உங்க ரூம் முன்னாடி உக்காந்து படிக்கறோம்"-னு நான் சொன்னேன். எங்காளுங்க எல்லாம் ஆடிப் போயிட்டாளுங்க. எங்க சூரியன் 8 மணிக்குதான் உதிக்கும். அதுவும் ஒருத்தி 8.30 மணிக்கே அலாரம் வச்சுதான் எழுவா. அப்படியே ஆத்தா கணக்கா என்னை மொறைக்கறாளுங்க. ஆனா எங்க வார்டன் அப்டியே ஷாக் ஆகி "ஓஹோ! உங்களுக்கு படிக்கிறது ஒரு பனிஷ்மென்டா?" அப்படினு கேட்டதும் தான் ஆஹா! மேட்டர் இப்டி வில்லங்கமா போகுதேனு "இல்ல மேம். காலைல 6 மணிக்கு எழுந்து வரணும் இல்ல. அதை பனிஷ்மென்டுனு சொன்னேன்" அப்படி இப்படினு சமாளிச்சு வச்சோம்.

"சரி அதையே பண்ணுங்க"-ன்னு அவங்க சொன்னதும் அப்பாடா ஒரு கண்டத்துல இருந்து தப்பிச்சோம்னு நினைச்சோம். ஏன்னா அவங்களே எப்பவும் 8 மணிக்குதான் எழுந்திருப்பாங்க. சோ நாங்க 7.45க்கு அங்க ஆஜர் ஆனா போதும். ஒரு வாரம் கஷ்டப்பட்டு போயிடலாம்னு சந்தோஷமாகிட்டோம். மறுபடியும் அவங்க "அப்படியே எல்லாரும் ஆளுக்கு 100 ரூபா ஃபைன் கட்டிடுங்க"-ன்னு பொசுக்குன்னு சொல்லிப்புட்டாங்க. ஆஆஹ்ஹ்ஹ்!!!!! எங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு. திருப்பி நானும் என் ஃப்ரெண்டும் ஒரு அரை மணி நேரம் பேசினோம். அதுக்கப்புறம் "சரி நீங்களே சொல்லுங்க. எவ்ளோ ஃபைன் கட்டறீங்க" ன்னு கேட்டாங்க. நான் மெல்ல "ஃபைவ் ருபீஸ்" ன்னேன். என்னோட நின்னுட்டிருந்தவ "ட்வென்டி ஃபைவ் ருபீஸ்"னு சத்தமா சொன்னா. எனக்கு வந்ததே கோபம். 'அடி பாவி! அஞ்சு ரூபாயில முடிக்கலாம்னு நான் ப்ளான் போட்டுட்டு இருக்கேன். அப்படியே பேசி ஒரு பத்து ருபாயிக்கு ஒத்துக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த டாக் இப்படி சொதப்பிடுச்சே" எனக்கு ஒரே கடுப்பு. சைடுல பாத்தா எல்லாரும் எங்களை கொல வெறியோட பாக்கறாளுங்க. வார்டன் என்னடாடான்னா "100 ரூபா எங்க ... 25 ரூபா எங்க ... அதெல்லாம் முடியாது"ன்னுட்டாங்க. அப்புறம் அதுக்கு ஒரு அரை மணி நேரம் பேசி ஓகே பண்ணிட்டு வந்தோம். ஆனா கடைசி வரைக்கும் நாங்க அந்த 25 ரூபாயை கட்டவே இல்லை. காலைல ஒரு 7.45, 7.50க்கா போயி அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்துடுவோம். ஹ்ம்ம்ம்............. ஆனா இப்படி அடிக்கடி மாட்டி வார்டன் ரூமுக்கு போயிட்டு வந்ததாலதான் எங்க அறிவு ரொம்ப விசாலமடைஞ்சிது. ஏன்னா பல விதமான புக்ஸ்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) அங்க இருந்துதான் சுட்டுட்டு வந்தோமில்ல ;)

Monday, October 1, 2007

இவர்கள் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்கள்...?

பபாச கொஞ்ச நாளா சொந்த வேலை காரணமா பிஸியா இருக்க மக்கள்ஸ் சங்கம் அம்பேல்னு சவுண்டு உட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பப்ப அதிரடியா வந்து தாக்குவோம்ல

சங்கத் தலைவி அனுசுயா உடனே ஏதாச்சும் செய்யனும்னு சொல்ல இன்ஸ்டண்ட்டா செய்யனும்னா சினிமா நியூஸ்தான் சரி வரும்னு நம்ம பேவரிட் நடிகர் நடிகைகளை ஒரு பேட்டி எடுத்தோம்.
பொதுவா நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருப்பீங்கன்னா கலெக்டர்,டாக்டர்னு பீலா உடுவாங்க.இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க.

விஜயகாந்த்: நடிக்க வரலைன்னா நான் என்ன செஞ்சிகிட்டிருப்பேன்னு தமிழ் நாட்டுல எந்த பச்சப் புள்ளையக் கேட்டாக் கூட சொல்லும்.
தமிழ்நாட்டுல எத்தனை கிராமம் இருக்கு அங்க எத்தனை குழந்தங்க இருக்காங்க இன்னும் எத்தனை குழந்தைங்க புதுசா பொறக்கப் போகுதுங்க அதுல எத்தனை பேர் என்னோட தே.மு.தி.க கட்சிக்கு ஆதரவா இருக்காங்க எத்தனை பேர் ஓட்டு போட்டு 2020 க்குள்ள என்னை முதல்வரா போறாங்கன்னு புள்ளி விபரம் எடுக்கும் ஆபிஸரா போயிருப்பேன்.

ராமராஜன்: ஏம்மா தாய்க்குலமே உனக்குத் தெரியாதா?நீல கலர் டவுசரும் தலையில ஒரு முண்டாசும் கட்டிகிட்டு வீடு வீடா போயி மாடு இருக்கான்னு பார்த்து பாடிக் கிட்டே பால் கறந்துகிட்டு இருப்பேன்.என் அரை டவுசர் பாக்கெட்டுல எப்போதும் ஒரு சின்ன டேப்ரிக்கார்டர்ல 'செண்பகமே....செண்பகமே....பதிவு பண்ணி வச்சிருக்கேன்ல

விக்ரம்: நானா...ம்ம்ம்....தெனமும் காலையில ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரத்துல குருடன் மாதிரி முழிய மாத்திகிட்டு 'புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே...ன்னு பாடுவேன்.
மத்தியானம் சுடுகாட்டு பக்கம் போயி எரியற பொணத்துக்கு முன்னாடி ஒக்காந்து காவிப் பல்லைக் காட்டிகிட்டு ,'ஆஹ் பாஅவிபஈஇவூ...ஆஆப்ம் ஆஆஆஆஅவ்வாஅர்ர்ரூ ஆஆஅ ன்னு பாடுவேன்.
ராத்திரி நேரத்துல தலை முடியை விரிச்சி மூஞ்சி மேல போட்டுக்கிட்டு தெரு முக்குல இருக்குற புரோட்டா கடைக்கு போயி கடன் குடுக்க மாட்டியா எனக்கு நான் அந்நியண்டா .உனக்கு கருடா புராணத்துல இந்த தண்டனைதான்னு சொல்லிட்டு புரோட்டா மாஸ்டரை கைமா பண்ணுவேன்

தங்கர் பச்சான்:ஆஹா நான் தமிழன்
'ஒன்பது மணிக்கு ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடாம்டா நாலரை மணிக்கு நாலரை மணிக்கு வீடு திரும்புடா'
ன்னு சொல்லி எல்லாப் பசங்களையும் பள்ளிக்கூடம் அழைச்சிப் போவேன்.
ஆங்.அழகி ங்களுக்கு முன்னுரிமை..நான் சொல்லமறந்த கதை ஒன்னு இருக்கு.என் படத்துல ஆங்கில கலப்பே இருக்காது
'ரோஸ் மேரி.....நீ என் ஜூஸ் மாரி..ஏனுங்க இது நம்ம படத்துபாட்டுதானுங்க.

ஜோதிகா: ஹாய் ...நான் ஹோல்சேல் டீலராயிருந்திருப்பேன்.அட நம்ம இதயம் நல்லெண்ணைக்குத் தாங்க.என்ன ஒன்னு விக்கிறத விட நான் இட்லிக்கு ஊத்திக்கிறதுதான் கொஞ்சம் அதிகமாயிருக்கும்

ஸ்நேகா:சரவணா ஸ்டோர்ஸில் நல்ல சேல்ஸ் கேர்ளா சேர்ந்திருப்பேன்.அப்பத்தான் அவங்க கடை துணிகள்,நகைகள் எல்லாத்துக்கும் மாடலா பர்மணெண்டா இருக்க முடியும்.[இந்த ஸ்ரேயா வேற போட்டியா கெளம்பிடுச்சி இல்ல]

திரிஷா:நிச்சயமா நான் பொறுக்கி கிட்டு இருந்திருப்பேன்.அதாங்க ஃபாண்டா பாட்டிலு மூடிங்க
நூறு மூடி பொறுக்கிக் குடுத்தா ஒரு பாட்டில் இலவசமா குடிக்கலாமில்லை?ஸ்கூல் டேஸ்ல இருந்தே இதுல நல்ல டிரெய்னிங் இருக்கு.

தேவயானி: இப்ப செய்யறதான் அப்பவும் செஞ்சிகிட்டு இருப்பேன்.மெகா சீரியல்ல நடிச்சிகிட்டே இருந்திருப்பேன்.
எப்படியும் என் மகள் இனியா பெரிய பொண்ணாயிட்டு வந்து என் ரோலை செய்யறவரைக்கும் கதையை இழுத்துக்கிட்டே......போயி அப்பால அவ நடிப்பா..
[ம்ம் இன்னும் ஒன்னு முடிந்தவரை எல்லா சீன்லேயும் அது வீடானாலும்,ஆபிஸ்னாலும் இல்லை ஹாஸ்பிடல்ல ஐ.சி யூனிட்னாலும் நான் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கிட்டேதான் இருப்பேன்.]



இந்த மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......

Monday, September 17, 2007

எங்கள் தேவதைக்கு ஒரு வாழ்த்து!!



ழகாய் ஒரு தேவதை
ருயிர் தோழியாய் வந்தாள்

னிய மொழிகள் பேசி
ர்த்துவிட்டாள் நம் மனதை

ணர்வுகளை கவிதையாய் வடித்து
மையாக்கினாள் நம்மை

ண்ணிலடங்கா நண்பர்கள் கொண்டிருந்தாலும்
காந்தத்தையும் ரசிப்பவள்

தீகங்களை உடைத்தெறிய விரும்புபவள்

ரே கருவை கொண்டே
ராயிரம் கவிதைகள் வடிப்பவள்

வியம் அறியாதவள்
'' - போன்று தனித்துவம் வாய்ந்தவள்

இந்த வாரம் நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் எங்கள் கவிதாயினிக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

Saturday, September 15, 2007

விநாயகா எங்க மெளஸ காப்பாத்து



இன்னிக்கு காலைல எழுந்திருச்சு விநாயகர் சதுர்த்தி ஆச்சே நம்ம கணேசன குளிப்பாட்டலாம்னு போயிருந்தோம். சங்க கட்டிடத்துக்கு முன்னாடியே ஒரு விநாயகர் வெச்சிருக்கோம்ல. மைப்ரெண்ட் போய் கணேசன எழுப்பி குளிப்பாட்டும்போது தான் ஆரம்பிச்சாரு பாருங்க அழுகைய. அடஅடஅட உங்க வீட்டு அழுகை எங்க வீட்டு அழுகையில்ல செம அழுகைங்க.

கண்மணி : விநாயகா உனக்கு என்ன கஷ்டம் ஒரு நாள்தான குளிப்பாட்டறோம் இதுக்கு போய் இவ்ளோ அழுகையா?

இம்சை : விநாயகர் காயத்ரி கவிதைய படிச்சுட்டாறோ என்னவோ?

கவிதாயினி : ஆண்டவா என் கவிதைக்காக நீ அழலாமா? நான் வேணா இனிமேல கவிதை எழுதறத விட்டுட்டு கவுஜ எழுதறேன் அழாதப்பா கணேசா.

அனு : அட விநாயகருக்கு அவரோட எலிய காணோமாமா அதுக்குதான் அழறாரு

மை ப்ரெண்ட் : ஓ அதானா விசயம் இப்பதான பார்த்தேன் இங்கதான இருந்தது. (உடனே ஜி3 யோட மெளஸ எடுத்து விநாயகர்கிட்ட தர்ராங்க.)

ஜி3 : என் மெளஸ் எவ்ளோ புண்ணியம் பண்ணியிருக்கு பாருங்க விநாயகருக்கே கொடுக்கற அளவுக்கு இதுக்காகவே செஞ்ச சுண்டல் கொழுக்கட்டை எல்லாத்தையும் எனக்குதான் தரனும் இப்பவே சொல்லிடறேன்.


உடனே எல்லாரும் அதெப்படி நாங்களும்தான காலைல இருந்து காத்துகிட்டு இருக்கறோம் எங்களுக்கும் கொழுக்கட்டை வேணும் அப்டீங்கறாங்க.

கண்மணி : அட குழந்தைங்களா இங்க யாரு சுண்டல் கொழுக்கட்டை செஞ்சாங்க. சமத்தா எல்லாரும் அவங்க அவங்க தெரு முக்குல இருக்கற விநாயகர் கோவிலுக்கு போயி சுண்டல் தருவாங்க வாங்கி சாப்பிட்டுக்கோங்க



இதை கேட்டு எல்லாரும் முழிக்கறாங்க. அப்ப நம்ம
கவிதாயினி : அங்க பாருங்க நம்ம பிள்ளையாரோட எலி குளிக்க போயிருந்தாராமா அவர் வரதுக்குள்ள நாம நம்ம மெளஸ குடுத்ததால பிள்ளையாரு எலிய திரும்பிகூட பார்க்க மாட்டேங்கறாரு பாருங்க நம்ம எலிகுட்டி முகத்துல எவ்‍ளோ சோகம்னு :(

இம்சை : அய்யோ எல்லாரும் கொஞ்சம் கொழுக்கட்டை குடுங்கப்பா கவிதாயினி வாய்க்கு குடுக்கனும் இல்லீனா இதுக்கும் ஒரு சோக கவிதை எழுதிடுவா :)


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும். எல்லாரோட மெளஸயும் அந்த விநாயகர் காப்பத்தனும்னு நானும் வேண்டிக்கிறேன்.

டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல :)

Saturday, September 1, 2007

ஜி3 க்கு பிறந்தநாள் - கொண்டாடலாம் வாங்க!!


ஹாய் மக்காஸ் அண்ட் மக்கீஸ்!!

இன்னிக்கு எங்களுக்கு வெரி ஸ்பெஷல் டே!! எங்கள் செல்லத் தோழியும் ப்ரிய சகோதரியுமாகவும்.. பயமறியாப் பாவையர் சங்கத்தின் 'அசைக்க முடியாத தூணாகவும்' (இதுல உள்குத்து ஒன்னும் கிடையாதுங்கோ!!) விளங்கும் ஜி3 என்ற காயத்ரிக்கு இன்று பிறந்த நாள்!!!

அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது! அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை! சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)

ஜி3 'பய'டேட்டா

பெயர் : காயத்ரி நாதன்

செல்லப் பெயர் : ஜி3

வயது : 17 முடிந்து 16 துவக்கம்!

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது

பொழுது போக்கு : ஆபீஸ் போவது

பிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது!

பிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..

பிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....
2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..
3. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...

பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.

விரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை

வெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை

சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது

நீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது

வாழ்நாள் லட்சியம் : உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!


இப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு! எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு சங்கத்து சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்!!


தங்கள் நல்வரவை எதிர்நோக்கும் :

அனுசுயா
கண்மணி
காயத்ரி
இம்சையரசி
மை ஃப்ரண்ட்

Tuesday, August 21, 2007

ஜெ-வுடன் ஒரு பேட்டி

சங்கத்து ரிசப்ஷன்ல நல்லா தூங்கிட்டிருந்த நம்ம கவிதாயினி டக்குனு "யூ ஹேவ் அ நியூ மெயில்" னு கம்ப்யூட்டர்ல இருந்து சத்தம் வந்ததும் அலறி அடிச்சிக்கிட்டு எழுந்துக்கறாங்க.. வந்திருந்த மெயில பாத்ததும் அலறி அடிச்சிக்கிட்டு மத்த மக்கள் எல்லாரையும் கூப்பிட மொத்த சங்கமும் கவிதாயினி முன்னாடி ஆஜர்..

கண்மணி : ஏண்டி இப்படி அலறின??

கவிதாயினி : இங்க வந்து இந்த மெயில பாருங்க.. இன்னிக்கு ஜெ.ஜெ. மேடம்க்கு பிறந்தநாளாம். நம்ம சங்கத்து மக்களுக்கு போன்ல பேச அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்களாம்..

மை ப்ரெண்ட் : என்னது? நிஜமாவா?

ஜி3 : ஆஹா.. சூப்பர்.. இப்பவே போன போடுவோம்..

அனுசுயா : சரி.. சரி.. வாங்க போன் பண்ணலாம்.

இம்சை : ஒரு நிமிஷம்.. ஊர்ல இருந்து அப்பா கால் பண்றாரு.. நீங்க எல்லாரும் பேசிட்டிருங்க.. நான் இதோ வந்துடறேன்..

கவிதாயினி : சீக்கிரம் வந்துடு.

கண்மணி டீச்சர் ரொம்ப ஆர்வமாக மெயிலில் தரப்பட்டிருந்த நம்பருக்கு போன் பண்றாங்க.. ட்ரிங்.. ட்ரிங்...

அந்த பக்கம் : ஹலோ

கண்மணி : வணக்கங்க.. நாங்க ப.பா. சங்கத்துல இருந்து பேசறோம். ஜெ.ஜெ. மேடம் அவங்க கிட்ட பேச எங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் குடுத்திருக்காங்க..

அந்த பக்கம் : ஒ.. நீங்க தானா? மேடம் சொன்னாங்க.. உங்க கால் வரும்னு.. ஒரு நிமிஷம் லைன்ல இருங்க..

மை ப்ரெண்ட் : என்ன ஆச்சு? லைன்ல வந்துட்டாங்களா?

கண்மணி : இல்ல கூப்பிட போயிருக்காங்க.. வந்துடுவாங்க.. இரு ஸ்பீக்கர்ல போடறேன்..

ஜெ.ஜெ : ஹல்லோ. வணக்கம்.. நான் தான் ஜெ.ஜெ. பேசறேன்.

கண்மணி : வணக்கம் மேடம்.. எங்க சங்கத்து சார்பா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

எல்லாரும் கோரசாக : இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடம்!!!

ஜெ.ஜெ : நன்றி.. நன்றி.. உங்க சங்கத்த பத்தி கேள்விபட்டப்போ ரொம்ப சந்தோஷமா இருந்துது. அதான் பிறந்தநாள் அதுவுமா உங்க எல்லார் கிட்டயும் பேசலாம்னு முடிவு பண்ணேன்..

கவிதாயினி : ரொம்ப சந்தோஷம் மேடம்.. உங்களுக்காக ஒரு பிறந்தநாள் வாழ்த்து கவிதை சொல்லட்டுமா மேடம்..

ஜெ.ஜெ : வேணாம்டா செல்லம்.. பிறந்தநாள் அதுவுமா என்ன அழவெச்சிடாத.. நீ கவிதை சொல்லாம இருந்தா என் பிறந்தநாள் பரிசா உனக்கு கோழிக்கால் சூப்பு அனுப்பி வைக்கறேன்..

கவிதாயினி : நீங்க நூறு வருஷம் நல்லா இருப்பீங்க மேடம்.. மறக்காம கோழிக்கால் சூப்ப அனுப்பிடுங்க..

மை ப்ரெண்ட் : அவ கெடக்கறா விடுங்க மேடம்.. ஒரு ராணியோட தோரணை உங்க கிட்ட தெரியுதே.. அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..

ஜெ.ஜெ. : அது என்னோட குணம் அப்படி... எப்பவும் அடுத்தவங்கள அடக்கித்தான் பழக்கம்.. நான் யாருக்கும் அடங்கி பழக்கமே கிடையாது..

ஜி3 : [ஆஹா.. அராஜகப் பேர்வழியா இருப்பாங்க போல்ன்னு மனசுல நினைச்சுக்கிட்டே] மேடம் கவிதாயினி கவிதை சொல்லாம விட்டா கோழிக்கால் சூப் தர்றேன்னு சொன்னீங்களே.. அதே மாதிரி நானும் உங்கள கேள்வி கேட்காம விட்டா எனக்கு சிக்கன் பிரியாணி அனுப்புவீங்களா மேடம்?

ஜெ.ஜெ : நீ திருந்தவே மாட்டியா? ஆமா.. இப்போ நீ கேட்டதே ஒரு கேள்வி தானே.. அப்போ உனக்கு நான் சிக்கன் பிரியாணி குடுக்க வேண்டியதில்லையே..

ஜி3 (மனதிற்குள்) : அடடா.. கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்காங்களே.. சரி.. கவிதாயினி சூப்ல கைய வைச்சிட வேண்டியது தான்..

அனுசுயா : மேடம் நீங்க ஏன் மேடம் கல்யாணமே பண்ணிக்கல??

ஜெ.ஜெ : நான் வரதட்சனைங்கற பேர்ல விலை குடுத்து வாங்கற மாப்பிள்ளை அந்த விலைக்கு தகுந்தவனா இருக்கனும்னு எதிர்பாக்கறேன்.. ஆனா இது வரைக்கும் அந்த மாதிரி யாருமே கிடைக்கலை.. அதான்..

இந்த வாக்கியத்தை கேட்டதும் நம் கண்மணி டீச்சரின் மூலையில் இது எங்கயோ கேள்விப்பட்ட பதிலா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டே வெளியில வர அங்க இம்சை அரசி போனில் ஜெ.ஜெ. மாதிரி பேசிக்கொண்டிருக்கிறார்.

கண்மணி : அடிப்பாவி.. இதெல்லாம் உன் வேலை தானா? அட என் அறிவு ஜீவி அப்ரண்டிசுகளா இங்க வந்து பாருங்க.. இவ்ளோ நேரம் நாம பேசினது இந்த இம்சை கிட்ட..

ஏமாந்த கலை முகத்தில வழிய அனைவரும் இம்சையை துரத்திக்கொண்டு ஓடுகின்றனர்..

எப்படியும் இம்சைக்கு பிறந்தநாள் அதுவுமா நல்ல பர்த்டே பம்ப்ஸ் உறுதி.. நேர்ல குடுக்க முடியாதத இப்படி கற்பனைல குடுத்துக்கறோம்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இம்சை அரசி.. உன் ஆட்சி இன்று போல் என்றும் நிலைத்து நிற்க வேண்டும் :))

Friday, August 17, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 3

இம்சை : கதை சொல்லு கதை சொல்லுனு சும்மா நச்சாதீங்கப்பா (அது தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? )
சரி, சொல்றேன் கேட்டுக்கோங்க. நைட் 12 மணி. க்ளாக்ல பெல் அடிக்குது. தூரத்துல நரி ஊளைவிடுது.

கண்மணி : அதெப்படி நடு சிட்டில நரி ஊளைவிடும்.

G3 : அதெல்லாம் அப்டிதான் எத்தனை சினிமால வருது அதெல்லாம் கேட்க மாட்டீங்க. இத மட்டும் கேளுங்க.

இம்சை : ம் அப்புறம் இந்த சத்தம் கேட்டு ஹிரோயின் திடுக்குன்னு முழிச்சுக்கறா. ஏதோ ஒன்னு அவ தொண்டை மேல சுறுசுறுனு ஏறுது.

மைபிரெண்ட் : அப்ப மியூசிக் தடதடனு அதிரனும் பாக்கறவங்க அதிரனும் சரியா

இம்சை : குட் கரெக்ட் இப்டிதான் பிக் அப் பண்ணனும்

G3 : சரி அப்புறம் என்ன சொல்லுங்க

இம்சை : அப்ப ப்ரெண்ட்டோட தம்ம திருட்டுதனமா எடுத்து அடிச்சிட்டு வீதில நடந்து போற நம்ம கதாநாயகன் சத்தம் கேட்டு காப்பாத்த வராரு வீட்டுக்குள்ள. அப்ப கதைவு சாத்தியிருக்கு அதை உடைக்கலாம்னு நம்ம ஹிரோ வேகமா ஓடி வராரு. அந்த கேப்ல ஒரு பெருச்சாளி ஓடி வந்து கதவு மேல முட்டி கதவு ஒடைஞ்சி போயிடுது. ஆனா இன்னும் நம்ம ஹீரோயினி கத்திட்டே இருக்காங்க.

கண்மணி : ஏன் கத்தறாங்க.

G3 : ம் கதவ உடைச்சா யாருதான் கத்த மாட்டாங்க ?

இம்சை : சொல்றேன் முழுசா கேளுங்க. அப்புறம் உள்ள வந்து ஹீரோயின் கழுத்துல இருந்து கஷ்டப்பட்டு தேடி ஒரு குட்டி எறும்ப எடுத்து கீழ விடுவாரு. இதனால நம்ம ஹீரோயினுக்கு அவன் மேல லவ் வந்திடுது. எப்டி என் இன்ட்ரோ சீன்

கண்மணி : சூப்பர் :)

மைபிரெண்ட் : என்ன கொடுமை இது இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன் போங்க.

இம்சை : ஏன் இந்த கதைக்கு என்ன குறை?

G3 : அதான இதுக்கு என்ன குறை?

மைபிரெண்ட் : என்ன கொடுமை ஒரு எறும்ப எடுத்து விட்டதுக்கெல்லாம் காதல் வருமா?

G3: ஆமா எத்தனை தமிழ் சினிமா பாத்திருப்போம் சும்மா கீழ விழுகறப்போ பிடிச்சா கூட காதல் வருதாமா? இதுல எறும்பு கடிக்காம காப்பத்தற ஹீரோ மேல காதல் வரதுல என்ன தப்பு?

மைபிரெண்ட்: சரி டூயட் இல்லயா? சும்மா கண்ண மூடுனா ஆஸ்திரேலியா அமெரிக்கானு போய் பாட வேண்டியதில்லையா?

அனுசுயா : என்னது ஆஸ்திரேலியா அமெரிக்காவா இதெல்லாம் பட்ஜெட்ல வராது. பேசாம சென்னை கூவம் பக்கத்துல எடுத்தாப் போதும்.

மைபிரெண்ட்: அய்யோ நாத்தம் தாங்காதே?

அனுசுயா : வேணும்னா ஆளுக்கு ஒரு மாஸ்க் வாங்கிக்கலாம்

இம்சை : சரி இந்த இடத்துல ஒரு பாட்டு வருது. எறும்பும் பெருச்சாளியயும் வெச்சு.

அனு : காயத்ரி நம்ம கதைக்கு ஒரு பாட்டு சும்மா சூப்பரா எழுதி குடும்மா

கவிதாயினி : ஆகா உங்க கதையில வர்ர எறும்பு, பெருச்சாளிக்கெல்லாம் என்னால பாட்டு எழுத முடியாது

அனு : இங்க பாரு நீ ரொம்ப பிகு பண்ணுனா நானே கவிதை எழுதி உன் பேர்ல பப்ளிஷ் பண்ணிடுவோம்

கவிதாயினி : அப்ப சரி அப்டியே எழுதிகோங்க ஆனா என் இமேஜ் ஸ்பாயில் ஆகாம பாத்துக்கோங்க

அனு : இமேஜ்னா Bmp, JPEG file தான.. அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டோம் டோன்ட் வொர்ரிமா :)

கவிதாயினி : அட கொடுமையே இப்டிலாம் நக்கல் பண்ணுனா நான் பாட்டு எழுத மாட்டேன் போங்க.

அனு : அதனால என்ன நாங்களே உன் பேர்ல எழுதிக்கரோம் :)

கண்மணி : பேசாம நீயே பாட்டு எழுதிடு.. கவிதாயினி எழுதினா அப்புறம் ஹீரோயினோட கண்ணீர தொடைக்க லாரி லாரியா டிஷ்யூ பேப்பர் வாங்க வேண்டி இருக்கும்.. உன் பட்ஜெட் தான் உதைபடும்..

அனு : அட ஆமா.. அத வேற மறந்தே போயிட்டேன்.. அப்போ நானே பாட்டு எழுதிடறேன்..

மை ப்ரெண்ட் : சரி பாட்டுக்கப்புறம் கதைய கண்டின்யூ பண்ணுங்கப்பா..

இம்சை : அடுத்து டூயட் முடிஞ்சதும் அப்படியே ஹீரோ அண்ட் ஹீரோயின் 2 பேரும் அடுத்தவங்க கண்ணையே பாத்துட்டிருக்காங்க.. திடீர்னு டமால்-னு ஒரு பயங்கர சத்தம்..

கவிதாயினி : அய்யய்யோ.. என்ன ஆச்சு??

இம்சை : ஹீரோ அப்படியே கண்ண சொருகிக்கிட்டு கீழ விழறாரு.. பாத்தா பின்னாடி ஹீரோயினோட அண்ணன் சித்தார்த் கையில ஒரு கட்டையோட கண்ணுல ஒரு கொல வெறியோட நிக்கறாரு..

மை ப்ரெண்ட் உடனே தரையில உருண்டு பொறண்டு அழறாங்க..

இம்சை : குட் இப்படித்தான் உணர்ச்சிப்பூர்வமா கதைய கேட்கனும்.. படத்துலயும் உன் ரியாக்ஷன் இது தான்.

கண்மணி : அட, கொஞ்சம் நல்லா பாருங்க.. அவ நிஜமாவே அழறா..

அனு : அய்யோ.. அடி கிடி பட்டுட போகுது.. பாத்து மா.. அப்புறம் இதுக்கு வேற நான் செலவு பண்ணனும் :-(

ஜி3 : எதுக்கு இப்படி நீ ஓவரா சீன் போடற??

மை ப்ரெண்ட் : என் சித்து எனக்கு ஹீரோவா போடாதது கூட ஓ.கே.. ஆனா அவரு எனக்கு.. எனக்கு.. ச்சே.. அந்த வார்த்தைய சொல்றதுக்கே எனக்கு பிடிக்கல :-((

நான் இந்த டிஸ்கஷன்ல இருந்து வெளிநடப்பு செய்யறேன்..

இம்சை, கவிதாயினி, ஜி3 அதிர்ச்சியில் உறைந்து நிற்க,

கண்மணி : ஹையா.. அப்போ ஹீரோயின் போஸ்டுக்கு போட்டியே இல்ல.. இனி நான் தான் ஹீரோயின் :)

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நம் ப்ரொட்யூசர் அனு, தலையில் கை வைத்து உட்கார்த்துவிடுகிறார்..

Monday, August 6, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 2

வணக்கம் படம் எடுக்கறதுனு முடிவாயிடுச்சு அடுத்து என்ன டிஸ்கஷன்தான். இதோ கீழ சங்க கட்டிடத்தின் புல்வெளில உக்காந்து G3 டீ சாப்பிட்டுட்டு இருக்காங்க அப்ப நம்ம கவிதாயினி ‘காற்றினிலே வரும் கீதம்’னு பாட்டு பாடறாங்க அத கேட்டு காயத்ரி டென்ஷன் ஆயிட்டாங்க

G3 : ஏன் கவிதாயினி ப்ளாக்லதான் சோக கவிதை எழுதி எல்லாரையும் அழ விடற அட்லீஸ்ட் இங்கயாவது கொஞ்சம் சந்தோசமா பாட்டு பாடலாம்ல?

கவிதாயினி : நான் எப்பவும் சந்தோசமான பாட்டுதான் எழுதுவேன் ஆனா மத்தவங்களுக்கு காட்டும்போது கொஞ்சம் சோகம் சேர்த்தாதான் பிரபலம் ஆகும். உதாரணமா இந்த வெயில், பருத்திவீரன், காதல் இப்டி சோகமான படங்கள்தான ஹிட் ஆகுது :)

G3 : அடிபாவி இப்டியெல்லாமா ஹிட் ஆகறது ம்.. அடுத்தவங்கள அதிகமா அழ‍ வெச்ச கவிதையும், அதிகமா சிரிக்க வெச்ச படமும் ஹிட் ஆனதா சரித்திரமே இல்ல.

அப்ப அந்த பக்கமா வர்ர நம்ம கண்மணி டீச்சர்

கண்மணி : என்னது இங்க யாரோ தத்துவம் சொன்ன மாதிரி இருக்கு எனக்கு மறுபடியும் சொல்லுங்க என் ப்ளாக்ல இதை ஒரு கதையா போடனும்

அப்ப அங்க எனக்கொரு பாய்ப்ரெண்ட் வேணுமடானு பாட்டு கேட்கது ‍ அதை அடுத்து நம்ம இம்மைஅரசி வராங்க

இம்சை : வணக்கம் எல்லாருக்கும் என்ன கதை வேணும் சொல்லுங்க டீச்சர் நான் டெவலப் பண்ணி தறேன்.

அதை கேட்டதும் எல்லாரும் கோரசா வாடியம்மா கதை டெவலப் பண்றதுல உன்ன அடிச்சுக்க ஆள் ஏது?அப்ப மைபிரெண்ட்டும் அனுசுயாவும் தோட்டத்துல புதுசா பூத்த பூக்களுக்கு பேர் வெச்சிட்டு இருக்காங்க. இந்த சத்தம் கேட்டு எட்டி பார்த்திட்டு சங்க கூட்டத்துல ஐக்கியம் ஆகறாங்க.

அனுசுயா : சரி எல்லாரும் ஒன்னா சேர்ந்தாச்சு அப்டியே நாம எடுக்கபோற படத்த பத்தி ‍டிஸ்கஷன் பண்ணலாம்

மைபிரெண்ட் : படம் எடுத்தா கண்டிப்பா நம்ம சித்துதான் ஹீரோ

இம்சை : ஆரம்பிச்சுட்டியா இன்னும் படம் பேர்கூட செலக்ட் பண்ணல

மைபிரெண்ட் : சித்து ஹீரோனா நான் வேணா போனா போகுதுனு ஹிரோயினா நடிக்கறேன்பா

அனுசுயா : என்னது சித்து கித்து எல்லாம் முடியாது அம்மணி பட்ஜெட் தாங்காது. எதாவது புது முகம் போடலாம் அப்பதான் ஒத்து வரும்.

கண்மணி : என்னய ஹிரோயினியா போடனும் அப்பதான் டிஸ்கஷன்ல கலந்துக்குவேன்

G3 : அட கொடுமையே இத கேட்க ஆளே இல்லையா? நாம எடுக்க போறது முதியோர படம் இல்லீங்க டீச்சர்.

இம்சை : அதான இது என்ன ஒரு யூத் சப்ஜெக்ட் தெரியுமா?

கவிதாயினி : அது சரி யார் யார் என்ன என்ன வேலைனு முடிவு பண்ணுங்க முதல்ல

கண்மணி : நான் இப்பவே சொல்லிடறேன். படத்துல வர பஞ்ச் டயலாக் என்னோடதுதான்

அனுசுயா : நம்ம கவிதாயினிதான் பாட்டு எழுத போறாங்க

மைபிரெண்ட் : நம்ம அனு வேணா ப்ரொட்யூஸ் பண்ணட்டும்பா

அனுசுயா : சரி நம்ம இம்சைதான் டைரக்டர் ஏன்னா அவங்கதான் ஒன்னுமில்லாத கதைய டெவலப் பண்ணி டெவலப் பண்ணி நாலு பக்கம் எழுதுவாங்க. :)

G3 : யாருமே சாப்பாட்டு பொறுப்ப எடுத்துக்கல அதனால நான் அந்த பொறுப்ப பெரிய மனசு பண்ணி எடுத்துக்கறேன்.

மைபிரெண்ட் : என்னது சாப்பாட்டு பொறுப்பு நம்ம G3 யா அவளே எல்லாத்தையும் சாப்பிட்டுடுவா அப்புறம் நாம என்னத்தா சாப்பிடறது.

இம்சை : டோண்ட் வொர்ரி படம் நல்லபடியா முடியனும்னு வேண்டிகிட்டு நம்ம G3 உண்ணா விரதம் இருக்க போறாங்க அதனால ஒரு பிரச்னையும் இல்ல :)

G3 : உண்ணா நோன்பா நோ நோ நோ நான் உண்ணும் நோன்பு வேணா இருக்கறேன்

அனுசுயா : அது சரி டைரக்டர் மேடம் ஹிரோவா யார போடறது?

இம்சை : நம்ம பிரசாந்த் இல்லீனா ஸ்ரீகாந்த் இவங்கள போடலாமா?

மைபிரெண்ட் : சித்து சித்து

இம்சை : சும்மா சித்து சித்துனு சவுண்ட்விடாத அப்புறம் நம்ம கேப்டன ஹீரோவா போட்டுடுவோம்

மைபிரெண்ட் : அய்யோ வேண்டாம் நம்ம சித்துவ போட்டு படம் எடுத்து பாருங்க படம் பிச்சுகிட்டு ஓடும்

அனுசுயா : நோ நோ சம்பளம் கட்டுபடியாகாது வேணா நம்ம மெளனராகம் கார்த்தி அல்லது மைக் மோகனை ட்ரை பண்ணலாம் கொஞ்சம் சம்பளம் கம்மியா இருக்கும் :)

மைபிரெண்ட் : இந்த படம் ஓடுன மாதிரிதான் இதுவே சித்துவ போட்டு எடுத்து பாருங்க படம் 100 நாள் ஓடும்

இம்சை : யார் சொன்னாங்க சித்து வெச்சு எடுத்து ஒரு படமாவது 100 நாள் ஓடியிருக்கா அதே தாத்தாவான பிறகுகூட நம்ம தல பட்டைய கிளப்பறாரு பாரு இது தமிழ்நாடு கண்ணு இங்க ஓல்டு ஹீரோவுக்குதான் மவுசு அதிகம்

மைபிரெண்ட் : அப்ப மோகன் கார்த்தினா நான் நடிக்க மாட்டேன்பா. அவங்க மார்க்கெட் போய் ரொம்ப நாள் ஆகுது. வேற யாராவது லேட்டஸ்ட்டா 100 நாள் குடுத்தவங்கள போடுங்க.

அனுசுயா : அப்போ ஒரே ஒருத்தர்தான் இருக்கார். அவரப் போட்டா கவிதை எழுதறது, பாட்டு பாடறதுல இருந்து நமக்கு சாப்பாடு செஞ்சு போடற வரைக்கும் எல்லாத்தையும் அவரே பாத்துக்குவார். இப்போ கூட அவர் படம் 100 நாள் ஓடுச்சு.

G3 : யாராது அப்பேற்பட்ட ஆளு? நமக்கு தெரியாம???

அனுசுயா : வேற யாரு நம்ம TR தான்..........

மைபிரெண்ட் : ஆஆஆஆஆ...... (மயக்கம் போட்டு விழுகிறார்)
உடனே கவிதாயினி மைபிரெண்ட் முகத்தில் தண்ணீர் அடித்து தெளிய வைக்கிறார். எழுந்ததும் அவர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க

அனுசயா : சரி சரி நாம வேணா சிபிராஜ ட்ரை பண்ணலாம். அவர போட்டா அவங்க அப்பா சத்யராஜ்கூட பணம் தந்து உதவுவாரு

இம்சை : ம் இது நல்ல ஐடியா

கண்மணி : இது மட்டும் என்ன அநியாயம் வயசான காலத்துல சத்யராஜ் மட்டும் இங்கிலீஷ்காரன் படத்தில ஹீரோவா நடிக்கறாரு நான் நடிக்க கூடாதா?

கவிதாயினி : அதானே அக்காவுக்கு நான் இருக்கேன் உடனடியா கண்மணி டீச்சர ஹீரோயினியா போட்டு தமிழ்காரினு படம் எடுக்கலாம்

இம்சை : ஆஹா எல்லாரும் ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா?

அனுசுயா : சரி சரி நாம அடுத்த டிஸ்கஷன நடேசன் பார்க்ல வெச்சுகலாம் அப்டியே டிபன் கொண்டு வந்திடுங்க அவங்க அவங்களுக்கு.

கண்மணி : என்னது டிஸ்கஷன் பூங்காவிலயா நான் 5 ஸ்டார் ஹோட்டல்னாதான் வருவேன்

கவிதாயினி : என்ன சோகம் இது ப்ரொட்டியூஸர் (உடனே ஒரு சோக கவிதை எழுத ஆரம்பிக்கறாங்க)

மைபிரெண்ட் : நான் என் சித்துகிட்ட சம்பளம் கம்மியானு கேட்டுட்டு வரேன் பை பை

இம்சை : நான் போய் கதை டெவலப் பண்றேன்பா

கண்மணி : அப்பா எப்டியோ என்ன வெச்சு படம் எடுக்க போறாங்க சந்தோசம்

அனுசுயா : எப்டியாவது ப்ரொடக்ஷன் செலவ கம்மி பண்ணனும் என்ன
பண்ணலாம் ம்ம்ம்ம்

Thursday, August 2, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 1

அது ஒரு அமைதியான மாலை நேரம். இருக்காதா பின்னே? கவிதாயினி காயத்ரிதான் சங்கத்து ரிஷப்ஷன் மேஜைல காலை நீட்டி படுத்துக்கிட்டு கண்ணை மூடிட்டு யோசிச்சுக்கிட்டு (தூங்கிக்கிட்டு) இருந்தாங்களே!

அந்த நேரம் பார்த்து மை ஃபிரண்டும் இம்சை அரசியும் சங்கத்து ஆபிஸ்ல நுழைஞ்சாங்க.

மை பிரண்ட்: இம்சை, அங்கே பாரு! ஏதோ ஒன்னு மேஜை மேலே கிடக்கு!!

இம்சை: அது ஏதோ ஒன்னு இல்ல. இங்கண ஒரு பொண்ணு கவிதை சொல்லி நம்ம காதுல ரத்தம் வர வைச்சாளே! அவதான் மேஜை மேலே படுத்துட்டு இருக்கா..

மை பிரண்ட்: அப்போ, வேலையை ஆரம்பிச்சிடுவோமா?

இம்சை அரசி மை ஃபிரண்டை பார்த்து கண்ணடிக்க, இம்சை அரசி சங்கத்துல வளர்கிற மயிலிடம் போராடி வெற்றிகரமா ஒரு மயிலிறகை பிடுங்கிட்டு ஓடி வர, மை ஃபிரண்ட் ஆபிஸ் முழுக்க தேடி, கடைசியாக கண்மணி டீச்சர் அறைக்குள்ளே ஓடி அவங்க தலை நரையை மறைக்க முடிக்கு பூச வச்சிருந்த கரு மையை எடுத்துட்டு ஓடி வந்தார்.

இம்சை: ஸ்டார்ட் மியூஜிக்.. டன் டன் டன் டன் டன்ன்ன்...

"நேத்து எங்க ட்ரோவிங் க்ளாஸ்ல இப்படிதான் மீசை தாடி வரையிறதுன்னு சொல்லிக்கொடுத்தாங்க. அழகா இருக்கா?"ன்னு கேட்டுக்கிட்டே காயத்ரிக்கு பெரிய மீசையும் குருந்தாடி ஒன்னும் வரைய, "நாந்தான் கிச்சு கிச்சு மூட்டுவேன்" என சொல்லி காயத்ரி காதுகளில் மயிலிறகை தடவி தன் பங்கை சரியாக செய்தார் இம்சை.

திடுக்கென முளித்த காயத்ரி தடார்ன்னு தன் கையை வீச, அப்பாவியா அவர் பின்னால உட்கார்ந்து சிக்கன் லெக் பீஸ் சாப்பிட்டு கொண்டிருந்த G3யின் வலது கன்னத்தில் அடி இடியா விழ, ஒரு ஸ்ப்பீக்கர் அவுட்டு!

G3: அய்யோ! மம்மி....

மை ஃபிரண்ட்: இங்க பாருடா! இப்பக்கூட மேடம் இங்கீலீஸுலதான் அலறுராங்க!

"அட பாவி G3! அது என்னோட சிக்கன் லெக் பீஸ்ஸு!"ன்னு காயத்ரி கத்தி G3யின் இடது கன்னத்தில் இன்னொரு அறை மின்னல் வேகத்துல (இப்போதும் அடி இடி மாதிரிதான்) விட்டார்.

G3: அய்யோ! அம்மா......

இப்போ G3யின் அடுத்த ஸ்ப்பீகரும் அவுட்டு!

இம்சை: இப்போ அம்மா தமிழ்ல வந்துட்டாங்க.. ஹா ஹா ஹா...

மை பிரண்ட்:
எகிறி குதித்தேன்.. வானம் இடித்தது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..
புருவங்கள் இறங்கி மீசை ஆனது..


அந்த பக்கம் நடந்து வந்த கண்மணி டீச்சர்,

கண்மணி: என்ன ஃபிரண்டு, ரெக்கோர்ட் தேய்ஞ்சு போச்சா? ஒரே லைன்க்கு சென்ஷியாட்டம் ரிப்பீட்டு போட்டுட்டிருக்கே?

மை ஃபிரண்ட்: சித்து சொன்ன வார்த்தை பளிச்சிடுச்சு டீச்சர்..

கண்மணி: நம்ம சங்கத்துக்கு சித்தரெல்லாம் வந்தாங்கன்னு சொல்லவே இல்லையே? சொல்லியிருந்தா ரெண்டு ஃபுல்லு வாங்கி கொடுத்து அருள் வாக்கு வாங்கியிருப்பேனே!

மை ஃபிரண்ட்: ட்ட்டீச்ச்சர்ர்ர்ர்... எந்த சித்தானந்தாவும் இல்ல. நான் சொன்னது சித்தார்த்!!!!

ரெண்டு பக்க ஸ்ப்பீக்கரும் அவுட்டான G3 என்ன நடக்குதுன்னு புரியாமல் தன் ரெண்டு கைகளையும் கன்னங்களில் வைத்து ஒவ்வொருத்தவங்க முகத்தையும் பார்த்துண்டு இருந்தார். திடீர்ன்னு பிச்சக்காரி தட்டுல உருளும் சில்லறை காசு சவுண்டுல G3 சிரிக்க, என்னன்னு பார்த்தா காயத்ரியின் புருவம் இறங்கி மீசையாகிடுச்சு!! (அது இம்சையும் ஃபிரண்டும் பண்ண ட்ரோவிங்ன்னு நான் சொல்லிதான் தெரியணுமா?) ;-)

பிறகு என்ன? மீதி இருந்த மையை தூக்கிட்டு காயத்ரி ஃபிரண்டையும் இம்சையையும் துரத்த, கண்மணி டீச்சர் அந்த மையை காப்பாத்தணும்ன்னு காயத்ரியை துரத்த, ஏன் எல்லாரும் ஓடுறாங்கன்னு தெரியாமல் G3யும் பின்னால ஓட.. ஒரே ச்சேஸிங்கா இருந்துச்சு. இம்சையும் மை ஃபிரண்டும் ஓடுனாங்க.. ஓடுனாங்க.. வாழ்க்கையின் எல்லை வரைக்கும் அவங்கனால ஓட முடியல. ஏன்னா, நடுவுல சங்கத்து ஸ்விம்மிங் பூல்....

"மாட்டிக்கிட்டீங்களா!!"ன்னு காயத்ரி வில்லி சொர்ணாக்கா போல தலையை ஆட்டி ஆட்டி நடந்து வர, புலிக்கிட்ட மாட்டின முயல்களாய் இம்சையும் மை ஃபிரண்டும் ஒவ்வொரு அடியாய் பின்னால் எடுத்து வைத்தனர். சொர்ணாக்கா.. ஐ மீன் காய்த்ரி மையை எடுத்து வீச, ஃபிரண்டும் இம்சையும் குனிய, பின்னால...

"பூ பூப்பாவாய் புன்னகைக்கும் இவள்..
உங்கள் வீட்டு புது கவிதை..."ன்னு ஸ்விம்மிங் பூல்ல இருந்து பாடிட்டே வெளியே வந்த அனுசுயா மேல பட...

ஆஸ்த்ரேலியா நாட்டு இளவரசி மாதிரி இருந்த அனுசுயா.. ஆப்பிரிக்க நாட்டு ராணி மாதிரி ஆகிட்டாங்க.. ம்ம்.. பல்லு கூட கருத்துடுச்சுனா பாருங்களேன்..

அனுசுயா: 3 மணி நேரமா குளிச்சிட்டு வந்த பூவை இப்படி கருக்கிட்டீங்களே!!!!! அவ்வ்வ்வ்வ்......

மை ஃபிரண்ட் & இம்சை: ஹா ஹா ஹா..

பின்னால ஓடி வந்த டீச்சர் முகம் விஜயகாந்த் மாதிரி க்ராஃபிக்ஸ்ல சிங்கமா மாறி திரும்ப அவங்க முகத்துக்கு திரும்பியது. சின்ன பசங்க (ஃபிரண்ட், இம்சை, G3, அனுசுயா, காயத்ரி) அதை ரசிச்சு பார்க்கிறதுக்குள்ள அவங்களை குனிய வச்சு அடி பின்னி நொங்கெடுத்து துவைச்சு தூக்கி வந்து சங்கத்து நடு ஹால்ல காயப்போட்டாங்க டீச்சர்.

கண்மணி: வியாழன் கிழமை மாலை மீட்டிங்ன்னு சொன்னா, எல்லாரும் வந்து சேர்ந்ததே வெள்ளிக் கிழமைதான்!! வந்து சேர்ந்ததும் சங்கத்தை ஒரு வழி பண்ணிட்டீங்க!!!

மை ஃபிரண்ட்: (மெதுவாக இம்சை காதில்) டீச்சருக்கு கருப்பு மை தீர்ந்து போச்சுன்னு ஒரே ஃபீலிங்கு.. பக்கத்து வீட்டுல கேட்டுக்கு கருப்பு ஆயில் பெயிண்டு அடிச்சிட்டிருக்காங்க. அங்கே கொஞ்சம் வாங்கி டீச்சர் துங்கிட்டு இருக்கும்போது அவங்க தலைக்கு அடிச்சிடலாம்.. ஹீஹீ

காயத்ரி: மங்கள கரமா இருக்கட்டுமேன்னுதான் நாங்க வெள்ளிக்கிழமை மீட்டிங்கை மாத்தி வச்சிக்கிட்டோம். ;-)

அனுசுயா: அவ்வ்வ்... பேச வந்ததை சீக்கிரம் சொல்லுங்க. நான் மறுபடியும் போய் குளிக்கணும்.. :-((

G3: என்னது? குடிக்கனுமா? எனக்கு ஒரு பெரிய போட்டல் கோக்க கோலா ப்ளீஸ்.. :-D

காயத்ரி: எனக்கு லெக் பீஸுதான் வேணும்.

இம்சை: அடங்கொய்யாலே... டீச்சர் என்னமோ சொல்ல வர்றாங்க..

மை ஃபிரண்ட்: வேற என்ன சொல்ல போறாங்க.. கோழிக்கு கால் ரெண்டு.. ஆட்டுக்கு கால் நாலு.. முயலுக்கு மட்டும் மூனு காலுன்னுதானே.. அய்யோ! அம்மா... டீச்சர் என் காதை விடுங்க.. வலிக்குது!!!!

கண்மணி: (மை ஃபிரண்டின் காதை திருகிக்க்கொண்டே) போட்ட ஆட்டமெல்லாம் போதும். சங்கத்து கஜானாவுல பணம் நிறைய இருக்கு! மேனேஜ் பண்ண என்னால முடியலை.. எப்படி இதெல்லாம் செலவு பண்றதுன்னு ஐடியா கொடுங்க..

G3: டீச்சர், வாங்க நாமெல்லாம் 10 ஸ்டார் ஹோட்டல்ல போய் 24 மணி நேரமும் சாப்பிட்டுட்டே இருக்கலாம்..

அனுசுயா: டீச்சர், அட்லாண்டா கடலை வாங்கலாம்.. இந்த ஸ்விம்மிங் ஃபூல் பத்தலை எனக்கு!!

காயத்ரி: டீச்சர், என் கவிதையெல்லாம் பெரிய அளவுல புத்தக ப்ரிண்டு போட்டு விக்கலாம்..

கண்மணி: புத்தகம் விற்றால் லாபம்தானே! கஜானா கூடுமே!

மை ஃபிரண்ட்: அட மக்கு டீச்சரே! அவங்கதான் சொல்றாங்கல்ல.. அவங்க கவிதையோட மவுசு! புத்தகத்தை ஃப்ரீயா கொடுத்தாலும் யாரும் வாங்க மாட்டாங்க! சோ, கஜானாவை காலி பண்ணிடலாம்ன்னு அவங்க ஐடியா போடுறாங்க..

இம்சை: ஐ கோட் அன் ஐடியா! டீச்சர், தலைவர் அருணாச்சலத்துல சொல்லியிருக்கார்.. கஜானாவை காலி பண்ணனும்ன்னா மூனே மூனு வழிதான் இருக்கு!

கண்மணி: நீதாண்டா என் செல்லம்.. அது என்னதுன்னு சொல்லுடா..

மை ஃபிரண்ட்: ஒன்னு நாந்தான் சொல்லுவேன்.. ஒன்னு!

இம்சை: குதிரை ரேஸ்..

G3: சிக்கன் ரோஸ் சூப்பரா இருக்குமே! :-)

கண்மணி: ரேஸும் வேணாம்.. ரோஸும் வேணாம்.. அது தப்பு! நெக்ஸ்ட்?

இம்சை: ரெண்டாவது அரசியல்..

கண்மணி: அதுக்கு இன்னும் காலம் இருக்கு! இப்பவே அரசியல்ல குதிச்சா என்னை CM ஆக்கிடுவாங்க.. நான் PM ஆகணும். சரி, அடுத்து என்ன?

இம்சை: படம்... சினிமா படம் எடுக்கனும்

மை ஃபிரண்ட்: ஹய்யா! இந்த ஐடியா சூப்பரு! :-D

காயத்ரி: டீச்சர் டீச்சர்.. நாம் படம் எடுத்தா யாராவது பார்ப்பாங்களா??

அனுசுயா: படம்ன்னு லிஸ்ட்டுல சேர்க்க முடியாத படங்களே 100-200ன்னு ஓடும்போது, நமக்கு 500 நாட்கள் எல்லாம் ஜுஜுபி..

G3: ஜிலேபி எங்கே கிடைக்கும்??

கண்மணி: ம்ம்ம்.. ஆமாம்.. இந்த பதிவுலகில் யாரும் சினிமாவில் காலெடுத்து வைக்கவே இல்லை.. நாமதான் முதன் முதலில் கால் பதிக்க போகிறோம்..

இம்சை: யெஸ் யெஸ்.. வரலாற்றில் முதன் முறையாக..

மை ஃபிரண்ட்: ஃபுல்லா நான் சொல்லவா?

கண்மணி: ம்ம்..

மை ஃபிரண்ட்: பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக "ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.." ஆக்க்ஷன்.. ஆக்க்ஷன்.. ஆக்க்ஷன்...

Wednesday, August 1, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன் (டிரெயிலர்)

பதிவுலக வரலாற்றில்
முதன் முறையாக


ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்..


நாளை மகத்தான ஆரம்பம்.. :P

Monday, July 23, 2007

பிறந்தநாள் கொண்டாட்டங்கள்...

முதல்ல 22-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய எங்கள் தலைவி மை ஃப்ரண்டிற்கு ஒரு வாழ்த்த சொல்லிட்டு அவங்க குடுத்த அருமையான விருந்துக்கு ஒரு நன்றியும் சொல்லிட்டு பதிவ ஆரம்பிப்போம்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க?? எங்க சங்கத்து மக்களெல்லாம் பயங்கரமா களைச்சு போய் இருக்காங்க.. அட, அப்படி என்ன களைப்புன்னா கேக்கறீங்களா?? மலேசியா வரைக்கும் போய் ஊர சுத்தி பாத்துட்டு வந்திருக்கோமில்ல.. அதான்.. ஆனா எவ்ளோ தான் களைப்பா இருந்தாலும் சங்கத்துல பதிவு போடற கடமைய தவற விடலாமா சொல்லுங்க.. அதான்... திரும்பி வந்ததும் பதிவ போட ஓடோடி வந்துட்டேன் :))

சங்கத்துல நாங்க எல்லாரும் தலைவியோட பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்னு ஒரு வட்ட மேஜை மாநாடு போட்டு யோசிச்சிக்கிட்டிருந்தோம். அப்போ தான் நம்ம அனுசுயா வந்து இதை சாக்கா வெச்சு நாம் எல்லாரும் ஒரு தடவை மலேசியா போயிட்டு வரலாமேன்னு சொல்லி சும்மா இருந்த எங்களையும் கிளப்பி விட சரின்னு நாங்களும் பொட்டி படுக்கையோட ப்ளைட் ஏறிப்புட்டோமில்ல மலேசியாவுக்கு.. (யாருப்பா அங்க யாரோட செலவுலன்னு சவுண்ட் உடுறது?? எல்லாம் நம்ம சங்கத்து கஜானா காசு தான்.. இதுக்கு கூட உதவலனா அப்புறம் சங்கம் எதுக்கு? அதுக்கு ஒரு கஜானாதான் எதுக்குங்கறேன்? )

நாங்க மலேசியா வர்ற விஷயத்த தலைவி கிட்ட சொல்லலை.. எங்கள நேர்ல பாக்கறது அவங்களுக்கு ஒரு இன்ப(???) அதிர்ச்சியா இருக்கட்டுமேன்னு சஸ்பென்ஸாவே விட்டுட்டோம் (முன்னாடியே நாங்க சொல்ல, அப்புறம் அவங்க அவசரப்பட்டு எங்கள வர வேணாம்னு சொல்லிப்புட்டா என்ன பண்றது?? ஹி..ஹி.. நாங்க எல்லாம் விவரமில்ல :))) அதனால மலேசியா ஏர்போர்ட்ல இறங்கினதும் பக்கத்துல இருந்த ஹோட்டல்ல போய் செட்டில் ஆயிட்டோம்.. அப்புறம் அங்க இருந்து கிளம்பி, எங்க ப்ளான்படி கரெக்டா 12 மணிக்கு மை ஃப்ரண்ட் வீட்டுக்கு போய் சேந்தோம்.

எங்கள பாத்ததும் தலைவிக்கு ஒரு நிமிஷம் அதிர்ச்சில பேச்சே வரலை.. அப்புறம் கொஞ்சம் சுதாரிச்சதும் எங்க எல்லாரையும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கெல்லாம் எங்கள அறிமுகப்படுத்தி சந்தோஷப்பட்டாங்க. அவங்க அப்பாவும் அம்மாவும் இதை சாப்பிடறீங்களா அதை சாப்பிடறீங்களான்னு ஒரே பாச மழை.. அதுல எல்லாம் நனைஞ்சு நாங்க தூங்கப்போறப்போ பொழுதே விடிஞ்சிருச்சு.. அப்ப்டியும் ஒரு குட்டி தூக்கத்த போட்டுட்டு காலைல எழுந்து பாத்தா....

என்னதிது? எல்லாத்தையும் ஒரே பதிவுலயே சொல்லிடனுமா?? நோ.. நோ.. மீதி விஷயங்கள் அடுத்த பதிவுல தான் சொல்லுவோம் ;))

Friday, July 20, 2007

ப.பா.ச விலிருந்து கண்மணி வெளி நடப்பு

வர்ர வர்ர இந்த சிறுசுங்களுக்கு வயசானவங்கன்னு
ஒரு மரியாதையே இல்லீங்க.x(

அப்படி என்ன நமக்கு பல்லெல்லாம் கொடிப் போயி
'குடுகுடு' வயசா ஆயிடுச்சி.>:)

ஏதோ வயசான ஆயா மாதிரி நம்மள கலந்துக்காம இதுகளா லூட்டி அடிக்கிதுகள்.

பெரியவங்க அனுபவசாலின்னு ஒரு பயம் வேண்டாம்
சாட்டுன்னா இதுகளே பேசிக்கிறது.நம்மள இன்வைட் பண்ரதில்ல.
பதிவு போட்டாலும் இதுக இஷ்டம்தான்.நம்ம கேக்கறதில்ல.

இதுங்க லூட்டிக்கெல்லாம் ஈடு கொடுக்க நாம என்ன வாலிபமா?இல்லை வெவரம் இல்லாதவங்களா?

சங்க நடவடிக்கை ஒன்னும் நம்மகிட்ட சொல்றது இல்லை.சங்கம் இருக்கான்னு தெரியலை.
அது அது தானா பதிவு போட்டுக்கிதுங்க போலும்.

டீம்ல இருந்தாலும் நாம சும்மா பேருக்குத்தான்.ஏதோ வயசானவளாச்சே ஒரு பாடிகார்டு மாதிரி இருப்பமின்னு நெனச்சுத்தான் ஒப்புக்கிட்டேன்.

வயசானா என்னங்க நமக்கு இல்லாத ஒலக அனுபவமா?இல்ல நாம அடிக்காத லூட்டியா?
அத இத பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.

எளசுங்களுக்கு சமமா நம்ம லூட்டியடிக்க முடியுமா ?நாம அந்த காலத்து சாவித்திரி சரோஜா தேவி ரேஞ்சு.
இதுக இந்தக்கால அசின் திரிஷா ரேஞ்சு ன்னு ஒதுங்கியிருந்தா ஒரேயடியா நம்மள கழட்டி விட்டுடிச்சிங்க போலும்.

அக்கா எங்கிருக்கீங்க என்ன பண்றீங்க உங்க பதிவு இல்லாம புள்ளைங்க ஏங்கிப் போயிட்டம்னு கொஞ்சமாச்சும் ஒரு அக்கறை வேணாம்.

இருக்கிற வேலைய வுட்டுட்டு காலேஜு கடலைன்னு இதுக மாதிரி நாம பதிவு போட்டுகிட்டிருக்க முடியுமா?

நாம பாக்காத காலேஜா போடாத கடலையா?அத்த ஒரு பதிவாப் போடுன்னாப் போட்டுட்டுப் போறோம்.;)

பாய் ஃபிரண்ட் வேனுமா வேணாமன்னு கேக்குதுங்க.

பாயைப் பிராண்டற வயசுலா நாம பாய்பிரண்டு பத்தி பேச முடியுமா?
என்னயிது சின்னப் புள்ளைத்தனமாயிருக்கு.:-/

சின்னப் புள்ளைங்கன்னா அப்படி இப்படித்தான் இருக்கும்.அனுபவிக்கிற வயசு.
பிரியாமணி அதான் நம்ம பருத்திவீரன் 'முத்தழகு' ஒரு பேட்டியில சொன்ன மாதிரி

இந்த நாள் இந்த நிமிடம் இந்த வயசு ன்னு
வாழ்க்கையை அனுபவிக்கனும்.
=D>

அதுக்காக ஒரு வயசு வரைமுறை வேனாம்?நம்மள கேட்டா இப்படி செய்யுதுங்க ச்சே...
வெறுத்துப் போச்சுங்க அதான் வெளியப்போலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

வயசுக்கும் மரியாதை இல்லை.

நம்மள ஏதோ ஓல்டு மாங்க்னு நெனைக்கிறவங்க கூட எப்படி காலம் தள்ள முடியும்.

அதான் வெளி நடக்கலாம்னு முடிவு செஞ்சேன்...செஞ்சிட்டேன்.

ஆமா நான் என்ன சொல்ல வர்ரேன்னு கேக்கறீங்களா?

யாரைப் பத்தி சொல்றேன்னு குழம்புதா?:-/

சங்கத்தை விட்டு வெளியே கொஞ்சம் காத்தாடப் போறத்தான் வெளி நடப்புன்னேன்.
நீங்க என்ன ஆஹா....பூசல் வெடிச்சிடுச்சின்னு பாத்தியளா

கெளம்பிட்டாய்ங்கய்ய்யா.......கெளம்பிட்டாய்ய்ங்க...:((

இதுக கூட்டணியே வேண்டாம்னு ஒதுங்கிக்கிறேன்.வர்ட்ட்டா

இப்ப நான் என்ன சொல்ல நெனச்சேன் ?

என்ன சொல்லிக்கிட்டிருக்கேன்?

யாருக்குத் தெரியும்?

ஏதோ 'மொக்கை' போடுன்னாங்க போட்டுட்டேன்.
கெலிச்சா அப்பாலிக்கா சொல்லியனுப்பறேன்.

சரி .... சரி ரொம்ப வழியுது மூஞ்சத் தொடச்சிக்கோ ராசா =))

வர்ட்டா.....:-h

Friday, July 13, 2007

ப.பா.ச.வில் உட்கட்சி பூசல்..

ப.பா.ச.வில் உட்கட்சி பூசல்.. மூத்த உறுப்பினரான கண்மணி அக்கா கட்சியை விட்டு வெளியேறலாம் என்று எதிர்பார்க்க படுகிறது. அங்கு நடப்பவை அனைத்தும் உங்கள் பார்வைக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஓவர் டூ ப.பா.ச. கட்சி ஆபீஸ்...

****************************************************************


.:: மை ஃபிரண்ட் ::., ஜி3, அனுசுயா, இம்சை அரசி அனைவரும் மிகவும் சந்தோஷமாக சிரித்துக்கொண்டே உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் சந்தோஷத்தை பார்த்ததும் கண்மணி அக்காவின் கோவம் இன்னும் அதிகமாகிறது.

கண்மணி : ஏய் வாலுங்களா? என்ன எல்லாருக்கும் இவ்வளவு சந்தோஷம்??

.:: மை ஃபிரண்ட் ::. : இது என்னடா இது வம்பா போச்சு? சந்தோஷமா இருக்கறது தப்பா?

கண்மணி : சந்தோஷமா இருக்கறது தப்பில்லே.. ஆனா நான் ஒருத்தி இங்க கடுப்புல இருக்கும் போது நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கறது தப்பு தான்.

ஜி3 : என்னது? நீங்க கடுப்புல இருக்கீங்களா? என்ன ஆச்சு?? யார் என்ன சொன்னாங்க உங்கள?? சொல்லுங்க. யாரா இருந்தாலும் ரெண்டுல ஒன்னு பாத்துடலாம்..

கண்மணி : ஆமா.. இந்த பில்-டப் க்கு ஒன்னும் குறைச்சல் இல்லே.. எல்லாரும் காயத்ரி பிறந்தநாள் விழாக்கு போனீங்களே.. எவளாவது ஒருத்தியாவது என்ன கூப்பிட்டீங்களா?? உங்கள்ல யாருக்காவது என் நினைப்பு இருக்கா??

அனுசுயா : தோ பார்றா.. யக்கோவ்.. நாம எல்லாரும் ஒரு குடும்பத்து மக்கள்... நீங்க வந்து பெரியவங்களா லட்சணமா முன்ன நின்னு நடத்தி குடுத்திருக்கனும்.. அப்படி நீங்க பண்ணாததும் இல்லாம எங்க மேலயே குறை வேற சொல்றீங்க??? கலி காலம்டா சாமி.. :(((

இம்சை அரசி : ஆனாலும் உங்கள மாதிரி இல்ல காயத்ரி.. அவ நீங்க வரலைன்னு எவ்வளவு கவலை பட்டா தெரியுமா? அன்னிக்கு பூரா அவ கோழிக்கால தவிர வேற எதுவுமே சாப்பிடல.. நான் அக்காவுக்கு மெயில் அனுப்பியும் கூட அவங்க வரலியேன்னு வருத்தப்பட்டுட்டிருந்தா.. ஒரு போன் பண்ணியாவது நீங்க அவள வாழ்த்தி இருக்கலாம்..

கண்மணி : என்னது எனக்கு மெயில் அனுப்பினாளா??? எங்க இங்க வந்து பாரு.. அவ கிட்ட இருந்து ஒரு மெயிலும் வரலை எனக்கு..

(எல்லாரும் அங்கு எட்டி பார்க்க.. கண்மணியக்காவின் இன்பாக்ஸில் நிஜமாகவே காயத்ரியின் மெயில் இல்லை.. நம் தலைவி .:: மை ஃபிரண்ட் ::. -ற்கு ஒரு பொறி தட்ட ஸ்பாம் ஃபோல்டரை (Spam folder) திறந்து பார்த்தால் காயத்ரியின் மெயில் அப்பாவியாய் அங்கு உட்கார்ந்திருக்கிறது )

அனுசுயா : பாத்தீங்களா... அவங்க மெயில் அனுப்பினத நீங்க கவனிக்காம எங்கள கோச்சிக்கறீங்களே??

கண்மணி : மன்னிச்சிக்கோங்கபா.. :-(((

ஜி3 : நீங்க மன்னிப்பு காயத்ரி கிட்ட தான் கேக்கனும்.. அவ நீங்களா போன் பண்ணி பேசினாதான் இனி சங்கத்து பக்கம் வருவேன்னு சொல்லிட்டா.. உங்க கிட்ட இருந்து போன் வராத சோகத்துல ஒரு கவிதைகூட எழுதி இருக்கா பாருங்க..

"முடிவற்று நீளும் இரவொன்றில்
கணங்களின் பிரக்ஞையற்று
மெளனமாய் அமர்ந்திருக்கிறேன்...

கண்ணெதிரே சுவற்றில்
படபடத்துத்
துடித்து
நிலைகொள்ளத் தவித்து
இருப்பிற்காய் போராடி
முடிவில்
சடலமாய்ச் சரிகிறது நாட்காட்டி...

திட்டமிட்டு கொலையொன்றைச்
செய்துமுடித்த திருப்தியோடு
திரும்பிப் போகிறது
காற்றும்..
உன் நினைவும்!"

இம்சை அரசி : ( ஜி3 காதில்) இது அவ டீமாஸ்டர பத்தி எழுதினது தானே.. நீ மாத்தி சொல்ற???

ஜி3 : ( இம்சை அரசி காதில்) ஷ்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்.. கண்டுக்காத :)

கண்மணி : அவ்வ்வ்வ்... என் மேல என் தங்கத்துக்கு இம்புட்டு பாசமா?? இதோ இப்பவே அவளுக்கு போன் பண்றேன்..

ட்ரிங்..ட்ரிங்...

காயத்ரி : ஹலோ

கண்மணி : செல்லம்.. நான் தாண்டா கண்மணியக்கா பேசறேன். சாரிமா உன் பிறந்தநாள் விழாவுக்கு வராததுக்கு.. ஜி-மெயில் சதி செஞ்சிடுச்சு :(( நீ இல்லாம அபீஸே களை கட்ட மாட்டேங்குது. சீக்கிரம் வாம்மா.. உனக்காக கோழிக்கால் ப்ரை வாங்கி வைக்கிறேன்..

காயத்ரி : ஆஹா.. இதோ வந்துட்டேன்க்கா.. நீங்க இம்புட்டு பாசமா கூப்பிட்டு நான் வராம இருப்பேனா சொல்லுங்க :))

*****************************************************

அடடா.. சரவெடியாய் வெடிக்கும் என எதிர்பார்த்தால் இப்படி புஸ்வானமாய் மாறிவிட்டதே :-(( இந்த கட்சியில் ஒன்றும் தேறவில்லை.. நாங்கள் வேறு ஒரு கட்சி ஆபீஸில் இருந்து உங்களை மீண்டும் சந்திக்கிறோம்..

நன்றி.. வணக்கம்..

Thursday, July 12, 2007

பொறி(ரி)யல் படிப்பு

வணக்கம் மக்களே இப்பத்த மார்க்கெட் என்னனா சமையல் குறிப்பு எழுதறதுதான் அதான் நானும் சமையல் குறிப்பு எழுத வந்துட்டேன். (அது யாரது ஓரமா சிரிக்கறது ) ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே சிரிக்ககூடாது.

அதி காலைல விடிஞ்சும் விடியாததுக்கு முன்னாடி (7 மணிக்கு) போன் மணியடிச்சுது. யாருடா இது இப்டி நடு ராத்திரில போன் பண்ணறாகனு யோசிச்சுகிட்டே போன எடுத்தா என் உயிர் தோழி கனகாதான் லைன்ல.

என்னடி அதிசயம் இந்நேரத்துக்கு போன் பண்ற.

ஒரு சின்ன சிக்கல்டி நீதான் ஒரு தீர்வு சொல்லனும்

சொல்லிடுவோம் என்ன பிரச்னை சொல்லுடி

ஒன்னுமில்ல எங்க அம்மா காலைல ஒரு கல்யாணத்துக்கு போகனும்னு அவசரமா சாதம் பருப்பு மட்டும் செஞ்சிட்டு போயிட்டாங்க. ஆனா எங்க அப்பாவுக்கு பொரியல் செஞ்சே ஆகனும் அதான் பிரச்னை

சரிடி இதுல என்ன பிரச்னை செய்ய வேண்டியதுதான

என்னடி நீயுமா இப்டி பேசற எனக்கும் சமையலுக்கும் என்ன சம்பந்தம் திடீர்னு பொரியல் செய்ய சொன்னா என்ன செயறதுடி அதிலயும் எங்க அப்பா ஈசியா முட்டை போட்டு பண்ணிடுனு சொல்லிட்டு வாக்கிங் போயிருக்காருடி

சரி இவ்ளோதான பிரச்னை நாமெல்லாம் பொறியியல் படிச்சவங்க இந்த சாதாரண பொரியலுக்கு பயப்படலாமாடி?

அடியே அது பொறியியல் இது பொரியல்

அதனால என்ன அங்க எப்டி எதுவும் தெரியாம லேப்ல பாஸ் பண்ணலயா அந்த மாதிரிதான் இதுவும்

சரி சரி அப்டினா எப்டி செய்றதுனு நீயே சொல்லி குடுடி

அவ்ளோதான விடு முதல்ல வெங்காயம் தக்காளி எல்லாம் வெட்டிக்கோ

ம் சரி அப்புறம்

அடுப்புல பாத்திரம் வெச்சு எண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து தாளிச்சு இந்த வெங்காயம் தக்காளி கொத்தமல்லி எல்லாம் போட்டு வதக்கிக்கோடி

ம் அப்புறம்

முட்டைய எடுத்து ஒடைச்சு ஊத்திக்கோ

ம்

அப்புறம் ரெண்டு சொம்பு தண்ணிய ஊத்தி நல்லா மூடி வெச்சுடு பத்து நிமிசம் கழிச்சு எறக்கிட்டீனா முட்டை பொரியல் ரெடி

அட இவ்ளோதானா சரிடி நான் செய்யறேன் அப்டீனு போன் கட் பண்ணுனா

அப்ப எங்க அம்மா வந்தாங்க என்னடி காலைல போன் பேசிகிட்டு போய் ஆபீஸ் கிளம்பற வழிய பாருனாங்க. இல்லமா என் தோழிக்கு முட்டை பொரியல் செய்ய சொல்லி குடுத்தேன் அதான் பேசுனேன்னு சொன்னேன். அத கேட்டுட்டு எங்கம்மா சரி எப்படி சொன்ன சொல்லுனாங்க . கடைசி வரைக்கும் கேட்டுட்டு எங்க அம்மா சிரிச்சாங்களே ஒரு சிரிப்பு. அது ஏன்னுதான் புரியல உங்களுக்காவது புரியுதுங்களா?

Tuesday, July 10, 2007

கடலைன்னா என்ன???

ஹாய் ஹாய் ஹாய்..... மக்கள்ஸ் எல்லாரும் எப்டி இருக்கீங்க? பாத்தே ரொம்ப நாளாச்சு. இதுக்கு மேல வராம இருந்தேனா இப்டி ஒருத்தி இருக்கறதே எல்லாருக்கும் மறந்து போயிடும்ன்ற பயத்துல வரல..... ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா ஒரு டாபிக் கிடச்சது. அதான் நம்ம மக்கள்ஸ் அறிவு எந்த அளவுக்கு பெருகி போயிருக்குனு பாக்கலாம்னுதான் வேக வேகமா ஓடி வந்தேன்.


எனக்கு ஒரு பெரிய சந்தேகம்.


கடலைன்னா என்ன?


போன வெள்ளி கிழமை என் ஃபோன் பில் கட்ட வரிசைல நின்னப்ப எனக்கு முன்னாடி ஒரு பொண்ணு. பின்னாடி ஒரு பையன். ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். அந்த பையன் கொஞ்சம் லேட்டா வந்துட்டான். அவன் வரதுக்குள்ள நான் கரடி மாதிரி நடுவுல போயிட்டேன் போல. அவன் வந்ததும் அந்த பொண்ணு சைடுல வர சொல்லி கூப்பிட்டுச்சு. இனி ஓவர் டு கான்வர்சேஷன்


அவன் : அதான் உன்கிட்ட கடலை போடறதுக்குன்னு ஒரு இளிச்சவாயன் இருக்கானே அவன்ட்ட கடலை போடு



அவள் : ஏ! அதுக்கு பேரு கடலை இல்ல



அவன் : கடலை இல்லாம வேற என்னவாம்?



அவள் : தெரிஞ்சவங்ககிட்ட பேசினா அதுக்கு பேரு கடலை இல்ல. தெரியாதவங்க கிட்ட தேவை இல்லாம பேசினாதான் கடலை



அவன் : யார் சொன்னா? ஒரு மேட்டரும் இல்லாம வெட்டியா நேரம் போறது தெரியாம பேசிட்டு இருந்தா அதுக்கு பேரு கடலை


இப்படியே அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. கடைசில ஒரு முடிவுக்கு வராமலே பேச்ச மாத்திட்டாங்க. அப்போதான் எனக்கு அந்த சரித்திர புகழ் வாய்ந்த சந்தேகம் வந்தது. கடலைன்னா என்ன?


நான் காலேஜ்ல படிக்கும்போது நல்லா சிரிச்சு பேசினாலே கடலை போடறன்னு ஓட்டுவாங்க. என் ஃப்ரெண்டு ஒருத்தி அப்படியே மூக்க பொத்திக்குவா(ஏன்னா கடலை ஓவரா வறுத்து தீஞ்சி போச்சாம்). அப்போல்லாம் சும்மா ஜாலிக்காக ஓட்டறதுக்கு இந்த பேரை யூஸ் பண்றாங்கன்னு நினைச்சேன். அப்புறமா ஒரு ஃப்ரெண்டு கோனார் நோட்ஸ் விளக்கவுரை கணக்கா விளக்கம் குடுத்தா. அதாவது பையனும் பொண்ணும் பேசினா அது கடலையாம். பொண்ணும் பொண்ணும் பேசினா அது மொக்கையாம். ஓ அப்படியா!ன்னு நானும் வாயப் பொளந்துட்டு கேட்டுட்டு இருந்துட்டேன்(என்ன பண்றது.... அவ்ளோ நல்ல பொண்ணு நானு).


அதுக்கப்புறம் ஒரு தடவை குமுதம்லயோ ஆ.வி.லயோ ஏதோ காலேஜ் பசங்க விளக்கம் கொடுத்துருந்தாங்க. அதாவது கடலை வறுக்கும்போது(நிஜ கடலைங்க) பாத்து கேர்ஃபுலா வறுக்கனுமாம். வறுபட்டுடுச்சுனு நினைச்சு பாத்தா வறுபடாம இருக்குமாம். இன்னும் வறுபடலைனு நினைச்சு நல்லா வறுத்தா தீஞ்சு போயிடுமாம். அந்த மாதிரிதான் பொண்ணுங்ககிட்ட பாத்து ஜாக்கிரதையா பேசனுமாம். அதனாலதான் பசங்க பொண்ணுங்ககிட்ட பேசறத கடலை வறுக்கறதுன்னு சொல்வாங்களாம். அது பேச்சு வாக்குல கடலை போடறதுன்னு மாறி போயிடுச்சாம். அப்போ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனா இப்போ சந்தேகம் வந்துடுச்சு. அப்போ பொண்ணு பையன்கிட்ட பேசினா அதை என்னன்னு சொல்றது? சோ இந்த விளக்கமும் தப்பு.


யாராச்சும் சந்தேகத்த தீத்து வையுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும். சரியா பதில சொல்லி சந்தேகத்த தீத்து வைக்கறவங்களுக்கு பத்து பாக்கெட் கடலை வழங்கப்படும் என்பதை அறிவிக்கிறோம்.

Sunday, July 8, 2007

பாவனாவுக்கு காதல் தோல்வியாமே? அதுக்குன்னு இப்படியா?



டிஸ்கி: இந்த பதிவுக்கும் துபாய் தம்பிக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல.. :-P

Sunday, July 1, 2007

பஸ்ஸா? ட்ரேயினா?

போன கும்மியில் கும்மு கும்முன்னு கும்மி பின்னி பெடலெடுத்துட்டாரு சச்சின் கோப்ஸ். அவருக்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு இந்த வாரத்தின் விவாத கும்மி என்னன்னு பார்ப்போம்.. வாங்க வாங்க..


பஸ்..
இதுல நாம ஏறுவது வாழ்க்கையில ஒரு பங்கு..
இது நம்ம மேலே ஏறுனா ஊதிடுவாங்க சங்கு..

வாழ்க்கையில ஏதாவது ஒரு சமயத்துலயாவது நாம பஸ்ஸுல ஏறியிருப்போம்.. சின்ன வயசுல நம்மளை நம்ம அம்மா அப்பா தூக்கிட்டு ஏறியிருப்பாங்க.. ஸ்கூல் படிக்கும்போது புத்தக மூட்டையை தோளில் சுமந்துட்டு தட்டு தடுமாறீ ஏறியிருப்போம். அப்புறம் காலேஜு படிக்கிறப்ப, அப்பா பைக் அல்லது கார் வாங்கி கொடுத்திருந்தாலும், அது ஒரு ஓரத்துல பார்க் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறியிருப்போம். வேலை செய்யுறப்போ கம்பேனி பஸ்ல ஏறின அனுபவமாவது இருந்திருக்கும். இல்லன்னா, டூர் போறதுக்காவது நண்பர்களோட பஸ் பிடிச்சுட்டு போயிருப்போம்.

பஸ்.. அல்லது பேருந்து.. இதில் ஏறுவதிலும் நன்மைஸ் கொடுமைஸ்ன்னு ரெண்டு இருக்கு, நன்மைன்னு பார்த்தா (எப்படி பார்க்கிறதுன்னு யாருப்பா அங்கே கேட்குறது?) இப்படி பஸ்ஸுலதான் பல காதல் கதைகள் ஆரம்பிச்சிருக்கு.. கண்டதும் காதல், இடிச்சதும் காதல், டிக்கெட் வாங்கி கொடுத்தவுடன் காதல், கீழே விழ இருந்தவளை தாங்கி பிடிச்சதும் காதல்ன்னு லிஸ்ட்டு பெருசாகிட்டே போகுது. ஆனால், கொஞ்சம் தப்பா ஹேண்டல் பண்ணியிருந்தீங்கன்னா இது கொடுமையா மாறி உங்களை "மாமியார்" வீட்டுல சேர்த்திருப்பாங்க. இல்லையா?

அடுத்து, பஸ் எல்லா சந்து புந்துலேயும் போகும். இங்கே ஆட்டோதான் எல்லா சந்து புந்துலேயும் போகும்ன்னு நீங்க சொல்லுவீங்க. ஆனால், இங்கே நாம் காம்பேர் பண்றது ரயிலுடந்தான். ரயில் தண்டவாளத்து மேலேதான் போகும். ஆனால், பஸ் ரோட்டு மேலேயே போகும்! (என்ன தத்துவம் .::மை ஃபிரண்ட்::. ஆஹா! ஆஹா!) இதனால் என்ன சொல்ல வர்றேனா, நீங்க உங்க வீட்டு முன்னுக்கே நின்னு பஸ் ஏறலாம். இல்லைன்னா ஒரு பத்து அடி தள்ளி நடந்தீங்கன்னா ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும். வீதிக்கு வீதி இப்போ பஸ் ஸ்டாப் இருக்கே! ஆனா, இதுல என்ன கொடுமைன்னா எந்த பஸ்ஸும் ப்ஸ்ஸும் பஸ் ஸ்டாப்ல நிக்குறதே இல்ல!

இப்போ நாம பஸ்ஸோடு ஒப்பிட போவது ட்ரேயினைத்தான்.
வண்டி வண்டி ரயிலு வண்டி!
இந்த வண்டியில ஏறியிருக்கீங்களா ஆண்டி..

ரயில் வண்டியும் இப்போ எல்லா ஊரிலும் ஃபேமஸ்தான். கட்ட வண்டி (ஸ்லோவா போற ரயில்) -யில இருந்து எக்ஸ்ப்ரஸ், புல்லட் ட்ரேயின் வரைக்கும் இதுல சேர்த்துக்கலாம். ரோட்டு ஓரத்துல உள்ள தண்டவாலத்திலிருந்து, மண்ணுக்கு அடியிலும் ஓடுது! தலைக்கு மேலேயும் ஓடுது இந்த ரயிலு! ரயிலும் நிறைய காதலை வளர்த்திருக்கு.. நம்ம ஷக்தி-கார்த்திக் காதலும் இங்கதானே வளர்ந்தது? :P ஆனால், கொடுமை என்னன்னா, வெங்கடேஷ்-கீதா காதல் மாதிரி தப்பான காதலும் இங்கேயேதான் நடந்திருக்கு!

தண்டவாளத்துல ட்ராபிக் ஜேம் இல்ல. ஓடுது ஓடுது ரயிலு! அந்த ரயிலுக்கு முன்ன இல்ல இன்னொரு முயலு! சாரி ரயிலு! சோ, (நாகேஷை எல்லாம் கூப்பிட முடியாது! ஆன்லி சோ) ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்னு ஆபிஸ்ல நீங்க சாக்கு சொல்றதுக்கு சான்சே இல்ல.. சொன்ன டைமுக்கு ரயிலு ஸ்டேஷன்ல நிக்கும்.. அதைவிட முக்கியமான பாய்ண்ட் என்னன்னா, ட்ரேயின், ட்ரேயின் ஸ்டேஷன்லதான் நிக்கும்.. ஆனா பஸ், ப்ஸ் ஸ்டேஷன்ல நிக்குமா? இதுல பஸ் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு எப்போ வரும் எப்படி வரும்ன்னு தெரியாது! ஆன வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டா வராதுன்னு சொல்வாங்க.. அதானே!


இப்படி நிறைய.. ரொம்ப நிறைய சொல்லிட்டே போகலாம். மத்த பாய்ண்ட்டுகளை நீங்களே கொஞ்சம் அள்ளி தெளிச்சு, விளக்கமா கும்மி.. உங்க வோட்டு ட்ரேயினுக்கே! பஸ்ஸுக்கே!ன்னு சொல்லி ஓட்டு குத்திட்டு போங்கப்பா!
பி.கு: இந்த வார காமெடி சிற்பி சந்தோஷுக்கு கைத்தட்டி உங்க ஆரவாரத்தை தெரிவிங்கப்பா! :-)

Friday, June 22, 2007

மளிகை கடையா? டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா?

வணக்கம் மக்கா..

கதை எழுதியாச்சு.. அனுபவம் எழுதியாச்சு.. சீரியலா பதிவும் போட்டாச்சு!! நெக்ஸ்டு என்னன்னு கேக்குறசங்களுக்கு இதோ புதுசா டெம்ப்ளேட் மாற்றி புதுசா விவாத கும்மி ஒன்னு ஆரம்பிச்சிச்சிருக்கோம். சும்மா பேரை கேட்டதுமே அதிருதுல்ல? அது!!!!

கும்மிக்கு தேவையான அடிப்படை தகுதி பதிவை படிக்காததுன்னு அபி அப்பா ரூல்ஸ் போட்டாலும், அவர்தான் ஃபர்ஸ்ட்டா பதிவை படிச்சுட்டு வருவார்ன்னு தெரியும்.. அதனால், கும்மிக்கு எதுக்கு தலைப்புன்னு நீங்க கேட்டாலும் தலை இல்லாமல் வால் (குட்டி பிசாசே, உன்னை இல்ல) ஆடாதுங்கிற காரணத்தால இதோ இன்றைய கும்மியின் தலை(ப்) பூ.

வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் வாங்க மளிகை கடைக்கு போனால், நாம் கையில ஒரு லிஸ்ட்டை தூக்கிட்டு போய் "அண்ணாச்சி, லிஸ்ட்டுல இருக்கிற ஐயிட்டமெல்லாம் கட்டிக் கொடுங்க"ன்னு சொல்லிட்டு பக்கத்துல இருக்கிற டீக்கடையில தம் அடிக்கிறது, டீ குடிக்கிறது, ரோட்டுல போற பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுன்னு பையனுங்க ஒரு பக்கம் இருக்க.. இதே பொண்ணுங்கன்னு பார்த்தா அவங்களும் ரோட்டுல போற பையனுங்களைகொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டு இருப்பாங்க.. கடைகாரர் சாமான்களை கட்டி முடிச்சதும், "என்ன அண்ணாச்சி.. சௌக்கியமா? வீட்டுல மாமி எப்படி இருக்காங்க? பக்கத்து வீட்டு சரோஜா எதுத்த வீட்டு கண்ணனோடு ஓடிட்டாலாமே?"ன்னு ஃப்ரண்ட்லியா பேசுவோம்.

இதுவே இப்போ மழைக்கு பிறகு முளைச்ச காளான் மாதிரி ஆங்காங்கே இருக்கிற டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல கதையே வேற. இங்கே நுழைவாசலிலேயே தள்ளு வண்டி ஒன்னை வச்சிருப்பாங்க. அதை உருட்டிட்டே போய் நமக்கு வேண்டிய பொருட்களை தேடி கண்டுபிடிக்கணும் (என்ன கொடுமை இது கொடி?). ஆனால், இப்போ திரும்ப யோசிச்சு பார்த்தா, இங்கே போகும்போது மட்டும் நாம் ஏன் லிஸ்ட்டு எடுத்துட்டு போறதில்லை.. கண்டிப்பா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்க்கு போய் சேர்ந்ததும் வாங்க வேண்டிய சாமான்கள் என்னன்னு ஞாபகம் இருக்காது! ஆனா பந்தாவா வண்டியை உருட்டிட்டு தேடிக்கிட்டே போவோம்.. வாங்க வேண்டிய லிஸ்டுல இல்லாத சாமான்கள் அப்போதான் பளிச் பளிச்ன்னு கண்ணை கூசும்.. அதையெல்லாம் அள்ளிப்போட்டு வாங்க வேண்டிய சாமான்களில் ஒன்னு ரெண்டு மட்டுமே வாங்குவோம். சிலர் பேர் வாங்க வேண்டிய சாமான்களில் ஒன்னு கூட வாங்காம, பர்ஸை காலி பண்ணிட்டு போன கதை கூட இருக்குங்க. கேஷர் நாற்காலியில யூணிஃபார்ம் போட்ட ஒரு பொண்ணோ பையனோ வேலையில இருப்பாங்க.. டக் டக்ன்னு மெஷின்ல தட்டுவாங்க.. மிஷின்ல தெரியிற பில்லை செட்டல் பண்ணிட்டு பையை தூக்கிட்டு வந்துடுவோம்.. மளிகை கடை அண்ணாச்சிக்கிட்ட பேசின மாதிரி ஏன் டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் கேஷர் கிட்ட பேச மாட்றோம்? (கேஷர் பொண்ணுங்களை சைட் அடிக்கிற இளைஞர்கள் இதுல சேர்த்துக்கப்படாது சொல்லிட்டேன்..)

இதுல இருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்கும். மளிகை கடையில் இருக்கும் அந்த அன்னியோன்யமும், நெருக்கமும் ஏன் டிப்பார்மெண்டல் ஸ்டோர்ல இல்ல? இப்போ உங்க சாய்ஸ்: மளிகை கடையா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரா? (மளிகை கடை அண்ணாச்சியின் பொண்ணா டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரின் கேஷர் பொண்ணான்னு நான் கேட்கல மின்னல்..அதுக்குள்ள மின்ன ஆரம்பிச்சிட்ட மாதிரி இருக்கு?) உங்க சாய்ஸ் என்னன்னு சொல்லி அதுக்கு உங்க கருத்துக்களையும் (கும்மின்னு படிச்சாலும் தப்பே இல்ல) அள்ளி தெளிங்க..

ஸ்டார்ட் மியூஜிக்... நீங்க அடிக்கிற கும்மியில இங்க இருக்கிற ட்ராஃபிக்கே கிளிஞ்சு தொங்க வேண்டாமா?

பி.கு: ப.பா சங்கத்துல புதுசா ஒரு பொட்டி திறந்திருக்கோம்ங்க. இந்த வாரத்துல சிறந்த காமெடின்னு உங்க பதிவிலிருந்தே ஒன்னு தேர்ந்தெடுத்து "காமெடி சிற்பி"ன்னு ஃப்ரேம் போட்டு கௌரவிக்க போறோம்.

பி.குக்கு பி.கு: இந்த வாரம் "காமெடி சிற்பி" அம்பி இப்போ மின்னுராரு! ;)

பி.குக்கு பி.குக்கு மு.கு: இந்த வாரம் நீங்க இல்லையா? அட!! அடுத்த வாரம் நீங்கதாங்க! ;)

Saturday, June 16, 2007

பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 5

ஹாய்.. ஹாய்.. ஹாய்! எப்படி இருக்கீங்க எல்லாரும்? சங்கத்து பி.ஆர்.ஓ ஆகி எந்த பிரச்சினைன்னாலும் அணுகலாம்னு ஓபனா அறிக்கை விட்டதுல இருந்து நம்ம பாடு திண்டாட்டமாகிப் போச்சுங்க. :( "பின்லேடனைப் பிடிக்க ஒரு வழி சொல்லுங்கன்னு புஷ் கண்ணீரும் கம்பலையுமா மெயில் அனுப்பிருக்கார். நம்மூர்ல சாம்பார்ல உப்பு கொறஞ்சா கூட சங்கத்துல வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க! ம்ம்.. பிரபலம்னாலே இப்டி ப்ராப்ளம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக கடமைய விட முடியுமா? சரி வாங்க.. பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ்க்குப் போவோம்!

அது ஒரு அழகிய நிலாக்காலம்! (ஹிஹி. ஃப்ளாஷ் பேக் போறமுல்ல!) என் அக்கப்போர் தாங்காம என்னையும் 3 வருஷம் ஜெயில்ல போட்ருந்தாங்க அப்போ! அதாங்க.. ஹாஸ்டல்ல. எங்க காலேஜ், ஹாஸ்டல் எல்லாத்துக்கும் ஹிட்லரே ரூல்ஸ் போட்டாப்பல... அவ்ளோ ஸ்ட்ரிக்ட். மாடர்ன் டிரஸ் போடக்கூடாது, பசங்க பொண்ணுங்க பேசிக்க கூடாது, அங்கங்க நின்னு அரட்டை அடிக்கக் கூடாதுன்னு ஏகப்பட்டசட்டதிட்டங்கள்! இது எல்லாத்த விட என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குன விஷயம் ஹாஸ்டல்ல என்.வி கிடையாதுங்கிறது தான். நான் பறக்கறதுல ஏரோப்லேனையும் மிதக்கறதுல கப்பலையும் நடக்கறதுல மனுஷனையும் விட்டுட்டு மிச்ச எல்லாத்தயும் திங்கறவ. என்னைக் கொன்டு போய் இப்டி ஒரு ஹாஸ்டல்ல விட்டா? (அவ்வ்வ்வ்.. இப்ப நினச்சாலும் அழுவாச்சியா வரு்து) :(

நாக்கு செத்துப் போய அதை அடக்கம் பண்ற நிலைமை வர்ரதுக்குள்ள நானும் ராதிகாவும் (என் உயிர்த்தோழி!) சேர்ந்து, அங்க வேல செய்யற யாருக்காச்சும் லஞ்சம் குடுத்து சரிக்கட்டினா சிக்கன கண்ல பாக்கலாம்னு கண்டுபிடிச்சோம்! அப்டி மாட்டினவங்க தான் டயானா பாட்டி! (ஹிஹி.. இளவரசி டயானா மாதிரியே ஹேர்ஸ்டைல் அவங்களுக்கு) எல்லாம் கச்சிதமா ப்ளான் பண்ணி, குடுக்குற காசுல அவங்களுக்கு 20% னு பிசினஸ் பேசி... வாங்கிட்டு வரச் சொல்லி சிக்கன் பார்சலும் ரூமுக்கே வந்தாச்சு! அப்புறம்தான் பிரச்சினையே!

ரூம்ல பார்சல ஓபன் பண்ணினா... வாசம் காட்டிக்குடுத்துடும். பக்கத்துலயே நம்ம கிரைண்டர்... அதாங்க வார்டன் ரூம் வேற. (ஹாஸ்டல் அசெம்பிளில அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்கன்னா நான்ஸ்டாப்பா கிர்ர்ருன்னு கிரைண்டர் ஓடற மாதிரியே சத்தம் கேக்கும்!!) இரண்டாவது ரூம்ல கூட இருக்குற இன்னொருத்தி (ஜோதி) எட்டப்பன் வம்சாவளில வந்தவ! அவ எதும் உளறி வெக்காம இருக்கனும். அதனால ஆக்கப் பொறுத்தோம்.. ஆறப் பொறுக்க மாட்டமான்னு கம்னு இத்துப் போன இட்டிலிய சாப்பிட்டு படுத்துட்டோம். 10 மணிக்கு ஊரடங்கி எல்லாரும் தூங்க ஆரம்பிச்ச பெறவு ஜோதிகிட்ட யார்கிட்டயும் சொல்லாதேன்னு சத்தியம் வாங்கிகிட்டு பார்சல எடுத்துகிட்டு மொட்ட மாடிக்கு போனோம். (8 மணிக்கு மேல மொட்டமாடிக்கு போகக் கூடாதுன்னு ரூல்ஸ்! சட்டத்தையெல்லாம் நாம்ப என்னிக்குங்க மதிச்சோம்?)

போய் இருட்டுல த்ட்டு தடுமாறி உக்காந்து லெக்பீஸ கைல எடுத்தா ரொம்ப நாள் பாக்காத ஃப்ரண்ட பாத்த மாதிரி ஆனந்தக் கண்ணீர் வருது. நான் அதை கைல வெச்சிட்டு "ஆட்டுக்கு நாலு கால்.. மாட்டுக்கு நாலு கால்.. ஏன் பூச்சிக்கு கூட எட்டுக்கால் படைச்ச ஆண்டவன் கோழிக்கு ரெண்டே ரெண்டு கால் மட்டும் குடுத்துட்டானேஏஏ..."ன்னு நடிகர் திலகம் மாதிரி ஃபீல் பண்ணிகிட்டு இருக்கும் போது தான் கவனிக்கிறேன் ராதிகா அப்டியே பேயடிச்சாப்பல உக்காந்திருக்கா. என்னாடின்னு அவ பாக்கற திசைல பாத்தா மூலைல தண்ணி டேங்க் பின்னாடி இருந்து வெள்ளையா.. புகை புகையா கிளம்புது. டேங்க்குக்கு நேரா கீழ இருக்குற ரூம்ல ரெண்டு வருஷம்முன்னாடி
ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சின்னு சீனியர்ஸ் சொன்னதெல்லாம் நியாபகம் வந்து படுகலவரமாய்டுச்சு எங்களுக்கு. 3 பேரும் ஓடறதுக்கு ரெடி ஆனோம். அந்த நேரம் கரெக்ட்டா புகைக்குள்ள இருந்து ஒரு உருவம் எந்திரிக்குது... வாயெல்லாம் வேற சிவப்பா இருக்குது! பாத்தவுடனே பயத்துல பாதி உசிர் போய்டுச்சி. நானும் ராதிகாவும் வுட்டா போதும்னு ஓடரோம். ஜோதி எருமை மாடு... நிறைய தமிழ் சினிமா பாத்த எபக்ட்ல பொறங்கைய வாயில வெச்சி ஸ்டைலா 'வீல்' னு சவுண்டு விட்டுட்டே ஓடி வர்றா மடப்பய மவ! அலறியடிச்சு தபதபன்னு கீழ இறங்கினா... என்னமோ நாங்க ஃப்லைட்ல வந்து இறங்கிற மாதிரி ஹாஸ்டலே திரண்டு எங்களை ரிசீவ் பண்ண நிக்குது. கிரைண்டர் வேற ஓட ஆரம்பிச்சிடுச்சு!

நானும் ராதிகாவும் தலை குனிஞ்சு நிக்க... (தப்பு பண்ணினா அப்டிதான் நிக்கனும். அப்பதான் தண்டனையோட வீரியம் குறையும்!!) ஜோதி கீழ உக்காந்து கிடுகி்டுன்னு நடுங்க... அவசரமா உண்மை கண்டறியும் குழு ஒன்னு கிளம்பி மாடிக்கு போச்சு. அவங்க தாக்கல் செஞ்ச அறிக்கை மூலமா நாங்க சிக்கன் வாங்கின உண்மை ஹாஸ்டலுக்கும்.. நாங்க பாத்த உருவம் கொள்ளிவாய் பிசாசு இல்ல.. வீணாப்போன டயானா பாட்டி தான் அங்க உக்காந்து சுருட்டு குடிச்சிட்டு இருநதுதுங்கிற உண்மை எங்களுக்கும் தெரிய வந்துச்சு. ஒரே அவமானமாப் போச்சு!

மறுநாள் மேட்டர் எல்லாப் பக்கமும் பரவி ஹாஸ்டல்ல டிசிப்லின் மெய்ண்டெய்ன் பண்ணலன்னு கிரைண்டரை மாத்திட்டு புது வார்டன் போட்டுட்டாங்க. எங்களுக்கு அன் டைம்ல மாடிக்கு போனதுக்கு ஆளுக்கு 50 ரூபா ஃபைனும் அரை மணி நேர அட்வைசும் பனிஷ்மெண்ட்! (இப்டி எல்லாம் பண்ணினா திருந்திடுவோமா?) எப்டியோ கிரைண்டர ஒழிச்சாச்சுன்னு சந்தோஷம். ஆனா ஜோதி மட்டும் என்ன சொல்லியும் கேக்காம கே.பி.சுந்தராம்பாள் மாதிரி நெத்தில திருநீறு பூசிகிட்டு அவங்கம்மா கூட ஊருக்கு போய்ட்டா. பாவம் புள்ளைக்கு ஒரு வாரம் ஜொரமாம்! திரும்பி வந்தும் எங்க கூட இருக்க மாட்டேன்னு வேற ரூம் மாத்திகிட்டா! நீங்களே சொல்லுங்க எங்க மேல என்னங்க தப்பு?

Friday, June 15, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 4

ப்யூட்டிஸ் அடிச்ச லூட்டிஸ் ஒரு சீரிஸா போயிட்டு இருக்கு.. சரி நாமும் அதுல ஒரு பகுதி எழுதலாம்ன்னு கம்யூட்டர் முன்னுக்கு உட்கார்ந்தா எதை முதல்ல எழுதுறதுன்னே தெரியல.. காலேஜ்ல அடிச்ச லூட்டி, ஹாஸ்ட்டல்ல அடிச்ச லூட்டின்னு எக்கச்சக்கமா இருந்தாலும், அதுக்கு முன்னவே ஸ்கூல்ல படிக்கும்போதே அடிச்ச லூட்டிகளே கரை புரண்டு ஓடுதே! அதுல ஒன்னு ரெண்டு சொல்லுவோமே..

மலேசியால Form 4 (படிவம் 4) வருடத்தை ஹனிமூன் யியர் (year)ன்னு சொல்வாங்க.. நாமளும் ஒரு வருடம் மஜாவா ஆட்டம் போடலாம்ன்னு சந்தோஷமா முதல் நாள் வகுப்புக்கு போனதும்தான் தெரியுது!!! அந்த வருடம் மட்டும் ஹனிமூன் யியர் எங்களுக்கில்லை.. எங்க வகுப்பு டீச்சர்ஸ்க்குதான்னு.. :(

விடுவோமா நாங்க.. ஆரம்பிச்சிட்டோம்ல லூட்டியை..

என் வகுப்பாசிரியர் வந்த ரெண்டு வாரத்துலேயே மெக்காவுக்கு போரேன்னு கிளம்பிட்டாங்க.. நல்ல டீச்சர்தான். ஆனால், எங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்ண அவங்களுக்கு கொடுத்து வைக்கலை.

நெக்ஸ்ட்டு, எங்க மலாய் டீச்சர்.. கர்ப்பமா இருந்தாங்க. ஆனாலும் பாடம் நடத்தியே ஆவேன்னு ஒரே அடம்.. ஒரு நாள் க்லாஸுக்கு வந்துட்டு,

டீச்சர்: இன்னைக்கு நாம் ஹாங் துவா காலத்துல நடந்த ஒரு ராஜா கதையை சொல்லி தர்ரேன்..

பாட புத்தகத்தை பார்த்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாங்க.. ஒரு சில நிமிடங்கள் கழித்து (அவங்க பேசுற சத்தத்தை பொறுக்காமல்), நான் எழுந்தேன்..

நான்: டீச்சர், நான் பள்ளி அலுவகத்துல உங்களை பத்தி கம்ப்ளேன் பண்ண போறேன்..

டீச்சர்: ஏன்? நான் உங்களுக்கு பாடம்தானே சொல்லிக்கொடுக்கிறேன்.

நான்: இல்லை.. நீங்க க்லாஸுல அரசியல் சொல்லி தர்றீங்க

டீச்சர்: நான் அரசியல் சொல்லித்தந்தேனா? எப்போ?

நான்: இதோ இப்ப சொன்னீங்களே! அரசியல்ன்னு.. சாட்சிக்கு இங்கே 40 பேர் இருக்கோம். எல்லாரும் சேர்ந்து கையெழுத்து போட்டா, உங்க வேலை அம்பேள்!!

டீச்சர்: ஐயய்யோ!!! அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணிடாதேம்மா.. நான் வேறு ஏதாவது பாடம் தர்றேன். மாண்வர்களே, இன்னைக்கு நான் கொடுக்கிற ஒரு தலைப்புல ஒரு அறிக்கை எழுதுங்க. ஒரு க்ரூப்ல நாலு பேர்..

வைட் போர்ட்டுல ஒரு தலைப்பை எழுதிட்டு அவங்க ஒரு ஓரமா போயிட்டு உட்கார்ந்துட்டாங்க. 15 நிமிடங்கள் கழிச்சு நாங்க எல்லாரும் பேப்பரை டீச்சர் கிட்ட கொடுத்தோம்.. பார்த்ததும் அவங்களுக்கு மயக்கம் வராத குறைதான்..

எந்த பேப்பரிலும் நாங்க ஒன்னுமே எழுதலை. ஆனா கலர் கலரா பேப்பர் மட்டும் அனுப்பியிருந்தோமாக்கும்.. டீச்சர் இது என்னனு கேட்க, நாங்க ஒவ்வொருத்தரும், இது வெள்ளை அறிக்கை.. பச்சை அறிக்கை.. சிவப்பு அறிக்கைன்னு சொல்ல..

அன்னைக்கு க்லாஸை விட்டு வெளியேறினவங்கதான்.. அன்னைக்கே பிரசவ வலி வந்து ரெண்டு மாதம் லீவு!!

அடுத்தது நாங்க விரட்டியது எங்க கணித டீச்சரை.. அதுல என் தப்பு ஒன்னுமே இல்லைங்க. எல்லாமே அவங்க தப்புதான்.. பரிட்சை வச்சாங்க.. நாங்களும் செஞ்சு அனுப்பினோம். உங்களுக்கே தெரியும்.. படிக்கிறதும் பரிட்சை எழுதுறதும் எவ்வளவு கஷ்டமான வேலைன்னு..

சோடா பொட்டி கண்ணாடி போட்ட அந்த டீச்சர் ஒரு வாரம் கழிச்சு பரிட்சை தாளை திருத்தி எங்களிடம் கொடுத்தாங்க.. ஆனால், என் தாளை மட்டும் தரல.. நான் கடுப்பாகி டீச்சர் கிட்ட போய் கேட்டேன்..

நான்: டீச்சர், என் தாள் எங்கே?

டீச்சர்: எங்கிட்ட உள்ள தாள் எல்லாத்தையும் கொடுத்துட்டேனே! நீ பரிட்சைக்கு வரலை போல..

நான்: டீச்சர், விளையாடாதீங்க.. இப்ப நீங்க என் பேப்பரை தரலைன்னா, பின்னால நடக்கப்போற விபரீதத்தை நீங்க சந்திச்சே ஆகனும்!! ரெடியா?

டீச்சர்: சாரி சாரி.. என் பேக்ல ஒரு பேப்பர் மாட்டிகிட்டு இருக்கு.. நாந்தான் கவனிக்கல.. இந்தா!!

நான்: பரவால பரவால.. மன்னிச்சிட்டேன்..

என் பேப்பரை வாங்கி திரும்பி என் மேஜைக்கு வந்து சேர்ந்ததும்தான் கவனித்தேன். என் பேப்பரை கோழி கறி சாப்பிட்டதா? இல்ல கோழி கறி என் பேப்பரை படிச்சதான்னு புரியல.. பேப்பர் முழுசும் கறி ஊத்தியிருந்துச்சு!

திரும்ப டீச்சர் கிட்ட போயி சண்டை போட்டேன். ஒரு வாரம்! ஒரே வாரம்! அவங்க பயந்து வேற ஸ்கூலுக்கே மாறி போயிட்டாங்க.. (சண்டை எப்படியிருந்துச்சு கேட்டுடாதீங்க.. ஹீஹீ)

அப்புறம் என் பயலோஜி டீச்சர்.. க்ளாஸுக்கு வந்தவுடன் வைட் போர்ட்டுல எழுத ஆரம்பிச்சாங்கன்னா மணி அடிக்கிற வரைக்கும் எங்களை திரும்பிகூட பார்க்க மாட்டாங்க. அவங்க வேலையில அவ்வளவு கண்ணும் கருத்துமா இருப்பாங்க. அவங்க அவங்க வேலையை வகுப்பு முன்னாடி செய்ய, நாங்க எங்க வேலையை பின்னால செஞ்சுட்டு இருப்போம்.

இவங்களால எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.. அதனால அவங்க "வேலை"யை செய்யட்டும்.. ஃப்ரீயா விட்டுடலாம்ன்னு விட்டுட்டோம். :D

கெமிஸ்ட்ரி டீச்சர் வந்தாலே க்ளாஸ் போர்.. அவங்க என்ன சொல்லி தர்றாங்கன்றது அவங்களுக்கே தெரியாது! ஸ்டூடண்ட்ஸ் எங்களுக்கு மட்டும் புரிஞ்சிடுமா என்ன!! ஹீஹீ.. ஸோ, எப்போதுமே அவங்க க்ளாஸுல அவங்கல கலாய்ச்சிட்டே இருப்போம்..

என்ன சொல்லிக்கொடுத்தாலும், "டீச்சர், அது தவறு.. சரியான பதில் இப்படி வரும்"ன்னு ஏதாவது சொல்வோம்.. சில சமயம் சரியா சொல்லிக்கொடுத்தாலும் அது தப்பு தவறுன்னே சொல்லி அவங்களை கொழப்பிடுவோம். 2 வார க்ளாஸுக்கு பிறகு, எங்க க்ளாஸ் டைம்டேபல் வரும்போது ஏதாவது காரணம் சொல்லி ஸ்கூலுக்கே வர மாட்டாங்க அவங்க.. அடுத்ததும் அவுட்டு!

யார் வந்தாலும் விட்டு வைக்க மாட்டோம்ன்னு தெரிஞ்சே ஆரம்பத்திலேயே எங்களுக்கு இங்க்லீஸ் டீச்சர் இல்ல..

சரித்திர க்ளாஸுல டீச்சர் க்லாஸுல என்ன பண்ணிட்டிருப்பாங்கன்னு எங்க யாருக்குமே தெரியாது.. ஏன்னா, அவங்க க்ளாஸுக்கு வர்றதுக்கு முன்னவே நாங்க க்ளாஸை விட்டு வெளிநடப்பு செஞ்சுடுவோம்.. கௌரவமா வகுப்பு கட் அடிப்போம்ன்னு சொல்றேன். ஹீஹீ..

இப்படி ஒவ்வொருத்தவங்களையும் துரத்தி விட்டாச்சு.. சும்மாவா!! ஹனிமூன் யியர்.. ஹனிமூன் யியரா இருக்கணும்ன்னா இவங்க யாரும் இருக்க கூடாதுல..

இதை படிக்கிறவங்க நாங்க அகராதி பிடிச்ச மாணவர்கள்ன்னு நினைக்கலாம்.. அப்படி இல்லை இல்லை இல்லைன்னு சொல்ல இன்னொரு க்லாஸ் பேலன்ஸ் இருக்கு. அதுதான் பிஸிக்ஸ் அண்ட் அட்டிஷனல் மேத்தமதிக்ஸ் க்ளாஸ்.

நாங்க எல்லா டீச்சரையும் துரத்தினாலும், இவங்க கிட்ட மட்டும் அடங்கியிருப்போம்.. எங்கே போனாலும் இவங்க க்ளாஸுக்கு சரியா வந்து சேர்ந்திடுவோம். அற்புதமான டீச்சர். ஆரம்பதுல அட்டிஷனல் மேட்ஸ் சொல்லிக்கொடுத்தவங்க.. 2 மாதத்துல பிஸிக்ஸையும் டேக் ஓவர் பண்ணாங்க..

நாங்க ஒவ்வொரு டீச்சரையும் தொரத்தும் போதும் எங்களுக்கு சப்போர்ட்டா இருந்தவங்க. ஏன்னா நாங்க என்ன பண்ணாலும் அதுல ஒரு அர்த்தமும் நியாயமும் இருக்கும்ன்னு நம்புறாங்க. ஒரு காலத்துல பள்ளி நிர்வாகத்தையே எதிர்த்து நின்னு நாங்க போராடும்போது, எங்களுக்கு ஆதரவா எங்க பக்கம் நின்ன ஒரே டீச்சர் இவங்கதான்.

ஸோ, மோரல் ஆஃப் தி ஸ்டாரி என்னன்னா பிடிக்காத டீச்சரை வெளியே துரத்துங்கள். உங்களை அறிஞ்சவங்களை பக்கத்துல வச்சிக்கிட்டு அவங்க கிட்ட படிங்க.. வாழ்க்கையில கண்டிப்பா பிற்காலத்துல வெற்றி பெருவீங்க. :D

Thursday, June 14, 2007

ப.பா. சங்கத்தின் புதிய பி.ஆர்.ஓ!!

ஹாய்.. மக்காஸ்.. அண்ட் மக்கீஸ்..

வணக்கம்! சிவாஜி - The Boss இந்தா இன்னிக்கு வறேன்.. நாளைக்கு வறேன்.. இதோ வந்துகிட்டேயிருக்கேன்னு ஒரு வழியா நாளைக்கு வரப்போகுது. ஊர் உலகம் முழுக்க இது பண்ணிட்டிருக்கிற அலப்பறைகளுக்கு நடுவுல அதுக்கு கொஞ்சம் கூட குறையாம வலையுல தமிழ் நெஞ்சங்கள் மனசை குடைஞ்சிட்டிருக்கற கேள்வி ப.பா சங்கத்தோட புதிய பி.ஆர்.ஓ யாருங்கிறது தான்னு நேத்து பி.பி.சி, சி.என்.என்., என்.டி.டிவி ன்னு எல்லா சேனல்லயும் கருத்துக் கணிச்சு போட்டாங்க! (பாக்கல?)

அதுலயும் சங்கத்தோட ஆபீஸ பாத்து ஆடிப்போயிருக்கிற எதிரணி மண்டைல ஏதோ ஒரு மூலைல இருக்கிற மூளைக்கு திடீர்னு வேலை குடுத்து பாத்தும் கண்டுபிடிக்க முடியாம யார் அந்த ஆல் இன் ஆல் அழகு ராணின்னு கண்டுபிடிக்க உளவுப்படை அமைச்சிருக்காங்களாம்!

எங்க தலைவி கூட சொன்னாங்க... "ஒரு அறிமுகக்கூட்டம் நடத்தி முன்ன மாதிரியே விருந்து குடுத்திருவோம். சோறு போடறேன்னு சொன்னா எல்லா பயலுவலும் ஓடி வந்துருவாய்ங்க! உங்களுக்கு கட்- அவுட் வெச்சி.. கைல வீரவாள் (வால் இல்ல) குடுத்து... பொன்னாடை அணிவிச்சு 'தங்கத்தாரகை' 'பயமில்லாப் பாவை' 'பாயும் பெண் புலி' 'கற்பூரச் சொற்கோ' 'கவிதாயினி' அப்பிடின்னெல்லாம் பட்டம் குடுத்து உங்கள அறிமுகப்படுத்தரேன்னு"
(ஹிஹி.. எல்லாம் அவங்க சொன்னது தான்!! எனக்கு பப்ளிசிட்டியே பிடிக்காது!!!) அவங்களோட சேர்ந்து கலக...ச்சீ.. கழக உடன்பிறப்புகளும் இதெயே சொல்லி ரொம்ம்ம்ம்ப வற்புறுத்துனாங்க!

நாந்தான் "நோ நோ... அதெல்லாம் வேனாம்.. நான் ஏழைப்பங்காளி.. எளிமையே என் தாரக மந்திரம்" ன்னு சொல்லிட்டேன். (நான் சின்னதுல இருந்தே இப்டிதான்.. யாரும் ஃபீல் பண்ணாதீங்கப்பா!)

ஆகவே மகாஜனங்களே! இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்.... பயமில்லாப் பாவையர் சங்கத்தின் மற்றுமொரு பாவையாக மாண்புமிகு மக்கள் தொடர்பு அதிகாரியாக இன்று பொறுப்பேற்றுக் கொள்வது உங்கள்..


காயத்ரி
காயத்ரி
(இது எக்கோ! கண்டுக்காதீங்க)
பேரக் கேட்டா சும்மா அதிருதி'லே!
ஆகவே மக்களே... இனிவரும் காலங்களில் சங்கத்தை தொடர்பு கொள்வது, நன்கொடை வசூலிப்பது, பின்னூட்டத்துல கும்மி அடிக்கிறது, பதிவுல உப்புமா கிண்டறது, எதிரணியோட நல்லுறவு வளர்க்கிறது, பருவமழை பெய்யாம போறது, பெட்ரோல் விலையேற்றம், திருட்டு விசிடி பிரச்சினை, காவிரி பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை, எல்லை தாண்டிய பயங்கர வாதம், அல்கொய்தாவை அடக்கும் வழிமுறைகள்........
இப்படி என்ன மாதிரியான பிரச்சினையா இருந்தாலும் சங்கத்தோட ஆதரவு வேணும் னா மாண்புமிகு பி.ஆர்.ஓ ஆகிய என்னை அணுகும்படி கழுத்தில கத்தி வெச்சு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொல்கிறேன்.. சாரி கொள்கிறேன்.!
இது வெறும் ஆரம்பம் தான்! ஆட்டம் இனிமேதான் இருக்கு!
வெகு விரைவில் எதிர்பாருங்கள்! பியூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் பார்ட் - 4
உங்கள் அபிமான ப.பா.சங்கப் பதிவில்....

Monday, June 11, 2007

ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ் - 3

மக்கள்ஸ் எல்லாரும் அவங்க ஹாஸ்டல்ல பண்ண லூட்டீஸ சொன்னாங்க.. நமக்கு தான் ரொம்ப நல்ல மனசாச்சே.. ஹாஸ்டல்ல நாம போய் சேந்துட்டா வீட்ல இருக்கறவங்க எல்லாம் நிம்மதியா இருந்துடுவாங்களே.. அதுக்கு நாம காரணமாயிட கூடாதுன்னு நல்லெண்ணத்துல சென்னையிலேயே கல்லூரி படிப்ப முடிச்சிட்டோம்.. சரி.. ஹாஸ்டல் லூட்டிய போட தான் வழியில்லை.. அதுக்காக பதிவு போடாம உங்கள நிம்மதியா இருக்க விட முடியுமா சொல்லுங்க? அதான் ஆபீஸ்ல அடிச்ச லூட்டிய போட வந்துட்டேன்..

*************************************************

கௌதம் - இவன் வீடு சத்யம் தியேட்டர் பக்கத்துல. நாங்க எப்போ படம் போகனும்னாலும் அய்யாதான் டிக்கட் ரிசர்வ் பண்ணுவாரு.

நான் : டேய் கௌதம், இந்த வாரம் சனிக்கிழமை மேட்னி ஷோ "Main Hoon Na" படத்துக்கு 3 டிக்கட் வேணும். இன்னிக்கு ரிசர்வ் பண்ணிடறியா?

கௌதம் : கேக்கறது ஹெல்ப்பு.. அதை பவ்யமா கேக்க தெரியாதாக்கும் அம்மணிக்கு? ஒழுங்கா பவ்யமா "அண்ணா டிக்கெட் ரிசர்வ் பண்ணி தாங்கண்ணா"ன்னு கேளு. இல்லாட்டி ரிசர்வ்லாம் பண்ண முடியாது.

நான் : என்னது அண்ணாவா? அதுக்கு வேற யாரையாவது பாரு.. உன்னால டிக்கெட் ரிசர்வ் பண்ணி தர முடியுமா? முடியாதா?

கௌதம் : முடியாது.

நான் : சரிதான் போடா.. நாங்களே பாத்துக்கறோம்.

கௌதம் : நான் ரிசர்வ் பண்ணி தராம் நீங்க எப்படி படம் பாக்கறீங்கன்னு பாக்கலாம்.. கடைசி நேரத்துல போனாலாம் டிக்கெட்டு கிடைக்காது.

நான் : பாக்கலாம்.. நீ டிக்கெட் ரிசர்வ் பண்ணித் தராம நாங்க அந்த படம் பாத்துட்டு வர்றோம்.

கௌதம் : நீங்க மட்டும் அப்படி பாத்துட்டா அடுத்து வர்ற மாதவன் படத்துக்கு டிக்கெட் செலவு என்னோடது.

நான் : டீல் ஓ.கே..


பெட்டு வெச்சிட்டோமேன்னு நாங்களும் அந்த வேகாத வெய்யில்ல மாயாஜால் போய் படம் பாத்துட்டு வந்தோம் (அங்க தான் ஷோ ஆரம்பிக்க ஒரு 30 நிமிஷம் முன்னாடி போனாலும் டிக்கெட் கண்டிப்பா கிடைக்கும் :-)) ஆனா அந்த லூஸு இதெல்லாம் கிடையாது, நான் சொன்னது சத்யம்ல பாக்கறதுக்கு தான். ஸோ இதெல்லாம் நீ பெட்டுல ஜெயிச்சதா ஒத்துக்க மாட்டேன்னு சொல்லி ஏமாத்திட்டான் :-((

சில நாட்களுக்கு பிறகு,

கௌதம் : ஹே.. இந்த வாரம் MCA க்ளாஸ்ல இந்த ரெக்கார்ட் சப்மிட் பண்ணனும். வெள்ளிக்கிழமைக்குள்ள எழுதி குடுத்துடு.

நான் : சரி.


இரண்டு நாட்கள் கழித்து,

கௌதம் : ரெக்கார்ட் எழுதி முடிச்சிட்டியா?

நான் : ஓ...

கௌதம் : அப்போ கொண்டு வந்திருக்கியா?

நான் : இல்லியே..

கௌதம் : ஏன்?

நான் : நான் அன்னிக்கு டிக்கெட் ரிசர்வ் பண்ண சொன்னப்போ என்ன சொன்ன? அண்ணா டிக்கெட் ரிசர்வ் பண்ணி தாங்கண்ணான்னு சொல்லனுமா?

கௌதம் : அதுக்கென்ன இப்போ?

நான் : இப்போ நீ "அக்கா நாளைக்கு என் ரெக்கார்ட் நோட்ட கொண்டு வாங்கக்கா"ன்னு சொன்னா தான் நாளைக்கு ரெக்கார்டு வரும்.

கௌதம் : ஹே.. விளையாடாத...

நான் : நான் சீரியஸா தான் சொல்றேன்.. எங்க டயலாக்க கரெக்டா சொல்லு பாப்போம்.

கௌதம் : அதுக்கு நான் தூக்குல தொங்கலாம்.

நான் : உன் சாய்ஸ் :-)

கௌதம் : ஹே.. படிப்போட விளையாடாத.. ப்ளீஸ்..

நான் : சரி.. ஏதோ என்ன விட பெரியவனா போய்ட்ட.. போனா போகுது.. அக்காக்கு பதில் தங்கச்சின்னு வேணா சொல்லிக்கோ..

கௌதம் : (மனசுல திட்டிக்கிட்டே) தங்கச்சி, நாளைக்கு என் ரெக்கார்ட் நோட்டு கொண்டு வந்துடு தங்கச்சி. போதுமா?

நான் : போதும் போதும்.... நாளைக்கு உன் ரெக்கார்ட் நோட்டு வரும். இப்போ போய் உன் வேலைய பாரு..


நம்ம கிட்ட வாலாட்டறவங்கள ஒரு வழி பண்ணாம விடலாமா? நீங்களே சொல்லுங்க..

 

BLOGKUT.COM