Monday, September 17, 2007

எங்கள் தேவதைக்கு ஒரு வாழ்த்து!!



ழகாய் ஒரு தேவதை
ருயிர் தோழியாய் வந்தாள்

னிய மொழிகள் பேசி
ர்த்துவிட்டாள் நம் மனதை

ணர்வுகளை கவிதையாய் வடித்து
மையாக்கினாள் நம்மை

ண்ணிலடங்கா நண்பர்கள் கொண்டிருந்தாலும்
காந்தத்தையும் ரசிப்பவள்

தீகங்களை உடைத்தெறிய விரும்புபவள்

ரே கருவை கொண்டே
ராயிரம் கவிதைகள் வடிப்பவள்

வியம் அறியாதவள்
'' - போன்று தனித்துவம் வாய்ந்தவள்

இந்த வாரம் நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் எங்கள் கவிதாயினிக்கு சங்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :))

Saturday, September 15, 2007

விநாயகா எங்க மெளஸ காப்பாத்து



இன்னிக்கு காலைல எழுந்திருச்சு விநாயகர் சதுர்த்தி ஆச்சே நம்ம கணேசன குளிப்பாட்டலாம்னு போயிருந்தோம். சங்க கட்டிடத்துக்கு முன்னாடியே ஒரு விநாயகர் வெச்சிருக்கோம்ல. மைப்ரெண்ட் போய் கணேசன எழுப்பி குளிப்பாட்டும்போது தான் ஆரம்பிச்சாரு பாருங்க அழுகைய. அடஅடஅட உங்க வீட்டு அழுகை எங்க வீட்டு அழுகையில்ல செம அழுகைங்க.

கண்மணி : விநாயகா உனக்கு என்ன கஷ்டம் ஒரு நாள்தான குளிப்பாட்டறோம் இதுக்கு போய் இவ்ளோ அழுகையா?

இம்சை : விநாயகர் காயத்ரி கவிதைய படிச்சுட்டாறோ என்னவோ?

கவிதாயினி : ஆண்டவா என் கவிதைக்காக நீ அழலாமா? நான் வேணா இனிமேல கவிதை எழுதறத விட்டுட்டு கவுஜ எழுதறேன் அழாதப்பா கணேசா.

அனு : அட விநாயகருக்கு அவரோட எலிய காணோமாமா அதுக்குதான் அழறாரு

மை ப்ரெண்ட் : ஓ அதானா விசயம் இப்பதான பார்த்தேன் இங்கதான இருந்தது. (உடனே ஜி3 யோட மெளஸ எடுத்து விநாயகர்கிட்ட தர்ராங்க.)

ஜி3 : என் மெளஸ் எவ்ளோ புண்ணியம் பண்ணியிருக்கு பாருங்க விநாயகருக்கே கொடுக்கற அளவுக்கு இதுக்காகவே செஞ்ச சுண்டல் கொழுக்கட்டை எல்லாத்தையும் எனக்குதான் தரனும் இப்பவே சொல்லிடறேன்.


உடனே எல்லாரும் அதெப்படி நாங்களும்தான காலைல இருந்து காத்துகிட்டு இருக்கறோம் எங்களுக்கும் கொழுக்கட்டை வேணும் அப்டீங்கறாங்க.

கண்மணி : அட குழந்தைங்களா இங்க யாரு சுண்டல் கொழுக்கட்டை செஞ்சாங்க. சமத்தா எல்லாரும் அவங்க அவங்க தெரு முக்குல இருக்கற விநாயகர் கோவிலுக்கு போயி சுண்டல் தருவாங்க வாங்கி சாப்பிட்டுக்கோங்க



இதை கேட்டு எல்லாரும் முழிக்கறாங்க. அப்ப நம்ம
கவிதாயினி : அங்க பாருங்க நம்ம பிள்ளையாரோட எலி குளிக்க போயிருந்தாராமா அவர் வரதுக்குள்ள நாம நம்ம மெளஸ குடுத்ததால பிள்ளையாரு எலிய திரும்பிகூட பார்க்க மாட்டேங்கறாரு பாருங்க நம்ம எலிகுட்டி முகத்துல எவ்‍ளோ சோகம்னு :(

இம்சை : அய்யோ எல்லாரும் கொஞ்சம் கொழுக்கட்டை குடுங்கப்பா கவிதாயினி வாய்க்கு குடுக்கனும் இல்லீனா இதுக்கும் ஒரு சோக கவிதை எழுதிடுவா :)


விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் அனைவருக்கும். எல்லாரோட மெளஸயும் அந்த விநாயகர் காப்பத்தனும்னு நானும் வேண்டிக்கிறேன்.

டிஸ்கி : இதை படிச்சுட்டு உக்காந்து இருந்து பக்கத்து கோவில்ல சுண்டல் கொழுக்கட்டை தீர்ந்து போனா அதுக்கு சங்கம் பொறுப்பல்ல :)

Saturday, September 1, 2007

ஜி3 க்கு பிறந்தநாள் - கொண்டாடலாம் வாங்க!!


ஹாய் மக்காஸ் அண்ட் மக்கீஸ்!!

இன்னிக்கு எங்களுக்கு வெரி ஸ்பெஷல் டே!! எங்கள் செல்லத் தோழியும் ப்ரிய சகோதரியுமாகவும்.. பயமறியாப் பாவையர் சங்கத்தின் 'அசைக்க முடியாத தூணாகவும்' (இதுல உள்குத்து ஒன்னும் கிடையாதுங்கோ!!) விளங்கும் ஜி3 என்ற காயத்ரிக்கு இன்று பிறந்த நாள்!!!

அவளைத் தெரியாதவங்களோ அவளுக்குத் தெரியாதவங்களோ யாரும் இந்த பதிவுலகத்துல கிடையாது! அந்த அளவுக்கு அம்மணி பிரபலமா இருந்தாலும் இந்த சிறப்பான நாள்ல அவளைப் பத்தி எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது எங்க கடமை! சும்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்கு தெரிஞ்சி வெச்சுகோங்க.... சிவில் சர்வீஸ் எக்ஸாம் மாதிரியான போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும். :)

ஜி3 'பய'டேட்டா

பெயர் : காயத்ரி நாதன்

செல்லப் பெயர் : ஜி3

வயது : 17 முடிந்து 16 துவக்கம்!

தொழில் : மொக்கை போடுவது

உபதொழில்கள் : உறங்குவது, ஊர் சுற்றுவது, வாழ்த்துப் பதிவு போடுவது

பொழுது போக்கு : ஆபீஸ் போவது

பிடித்த 3 விஷயங்கள் : 1. சாப்பிடுவது 2. சாப்பிடுவது 3.நிறைய சாப்பிடுவது!

பிடித்த 3 பதிவுகள் : 1. இட்லிவடை, 2. சட்னி வடை, 3. தாளிக்கும் ஓசை..

பிடித்த 3 பாடல்கள் : 1. கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்....
2. நித்த நித்த நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா..
3. உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா...

பிடித்த 3 சொற்கள் : கட், காபி, பேஸ்ட்.

விரும்புவது : ஹோட்டல்களில் நடக்கும் பதிவர் சந்திப்புகளை

வெறுப்பது : சாப்பிடும் போது குறுக்கே கேள்வி கேட்பவர்களை

சமீபத்திய சாதனை : தமிழ்மணத்தில் இணையாமலேயே 'தமிழ்மனங்கள்' பலவற்றில் இணைந்தது

நீண்ட கால சாதனை : 'ஜி3 செய்வது' என்றால் 'சுடுவது' என உலகறியச் செய்தது

வாழ்நாள் லட்சியம் : உலக நன்மை (?!) வேண்டி 45 நாட்கள் 'தொடர் உண்ணும் விரதம்' மேற்கொள்வது!


இப்படியாப்பட்ட நல்ல பொண்ணுக்கு பொறந்தநாளுங்க இன்னிக்கு! எல்லாரும் வந்து மனசார வாழ்த்திட்டு அவங்கவங்க வூட்டுக்கு போய் வயிறார சாப்பிடனும்னு சங்கத்து சார்புல வேண்டி விரும்பிக் கேட்டுக்கறோம்!!


தங்கள் நல்வரவை எதிர்நோக்கும் :

அனுசுயா
கண்மணி
காயத்ரி
இம்சையரசி
மை ஃப்ரண்ட்

 

BLOGKUT.COM