Tuesday, February 26, 2008

இத்தனை காலமா "உண்மையா " உழைச்சுகிட்டுதான் இருக்கோம்

முதலாளி வேலைகேட்டு வந்தவரிடம்...

நீ நிறைய பொய் சொல்லுவியா..?

இல்ல சார்.. ஆனா கூடிய சீக்கிரம் கத்துகிட்டு உங்க நிறுவனத்தில் பெயர் எடுப்பேன்..
________________________________________

பின்னர் வேலை கிடைத்த அவரும் அவரது தாயும்..

ஏண்டா தம்பி.. பொய் சொல்ற ஆள் எதுக்கு அவங்களுக்கு தேவையாம்..?

தெரியலேம்மா.. இப்போதைக்கு எனக்கு சேல்ஸ்மேன் வேலை கொடுத்திருக்காங்க.. பிற்காலத்தில், பி.ஆர்.ஓ. ஆக ஆக்கறேன்னு சொல்லியிருக்காங்க..!
_________________________________________

வேறொரு இடத்தில்.. முதலாளி வேலைகேட்டு வந்த பெண்ணிடம்...

என்னம்மா நீ..? உன்கிட்ட என்ன திறமை இருக்குன்னா, நல்லா கூடை, ஸ்வெட்டர் எல்லாம் பின்னுவேன்னு சொல்றியே..? அதுக்கும் ஆபீஸ் வேலைக்கும் என்ன சம்பந்தம்..?

முன்ன வேலை செய்த இடங்களில் ஆபீஸ் நேரத்தில்தான் சார் அதெல்லாம் பின்னினேன்..!
__________________________________________நண்பர் : எவ்வளவு காலமா இந்த நிறுவனத்தில் உண்மையா உழைச்சுகிட்டு இருக்கே..?

மொக்கை : அந்த மேனேஜர் கடன்காரன் என்னை டிஸ்மிஸ் பண்ணப்போறேன்னு எப்போ மிரட்டினானோ... அப்போலேருந்து..!
__________________________________________

வங்கி மேலாளர், ஊழியரிடம்..

எங்கேய்யா அந்த கேஷியர் போய்த் தொலைஞ்சான்..?

சீட்டாட்ட கிளப்புக்கு போயிருக்கார் சார்..

வேலை நேரத்தில என்ன சீட்டாட்டம்.. ?

சீட்டாட்ட முடிவை வச்சுதான் அவர் வேலை நிலைக்குமா என்னான்னு தெரியுமாம் சார்..!

நன்றி: தமிழ் ஜோக்ஸ

Monday, February 11, 2008

தலைவலி மாத்திரைகள் இம்மாதம் அதிக விற்பனையாவதற்கு என்ன காரணம்?


இந்த மாதம் அமோக விற்பனை!!
எங்கள் நன்றியினை சிம்புவின் "காளை" படத்திற்கு அன்புக் காணிக்கையாக்குகிறோம்.

இப்படிக்கு
சாரிடான், மெட்டாசின், அனாசின், ஆக்ஷன் 500, நோவால்ஜின் கம்பெனிகள்.

****
பேராசிரியர் வணிகவியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
பேரா : ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு பைனான்ஸ் கிடைக்கும் இடங்களில் அதிமுக்கியமான ஒன்றைக் கூறு.
மாணவன் : மாமனார்..

****
குட்டிப்பையன் : அம்மா…உங்க தலையில எப்படி சில நரைமுடிகள் வந்துருக்கு?
அம்மா : நீ அதிகமா சேட்டை செய்யிறேயில்ல. நீ ஒவ்வொரு தடவ என்னை அழ வைக்கும்போதும் ஒரு நரைமுடி வந்துடும்.
பையன் : ஓ! அப்படியா.. பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
அம்மா : !!??

****
ஆசிரியர் : நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழ, அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். எவ்வளவு ஆச்சரியம்! இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவன் : இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

****
நபர் : சிரிச்ச பழம் ஒண்ணு கொடுங்க
கடைக்காரர் : அப்படின்னா??
நபர் : அழுகாத பழம் தான் சிரிச்ச பழம்.

நன்றி: நிலாச்சாரல்

 

BLOGKUT.COM