Friday, November 21, 2008

மீட்பு நடவடிக்கை

அந்த அலுவலகம் ஒரே களேபரமாய் இருந்தது.

ஆளாளுக்கு அங்கும் இங்கும் ஓடியபடி இருந்தனர்.

ஊழியர்கள் கவலையுடன் காணப்பட்டனர்.

சத்தமாக கூச்சலிட்டு விவாதித்தனர்.

யாரும் வேலை செய்யவில்லை.இருக்கையை விட்டு வந்து ஆலோசனை செய்தனர்.

அவசரக் கூட்டம் போட்டு அதிரடி முடிவெடுக்க ஏற்பாடானது

புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் பயத்துடன் இருக்கையிலிருந்த படியே பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்பி மெதுவாக ஒரு உயர் அதிகாரியிடம் கேட்டனர்.

'என்ன ப்ராப்ளம் சார்?'

'நம்ம எம்.டி யை ஒரு கடத்தல் கும்பல் கடத்திப் போய் விட்டது.எப்படி மீட்பது என ஆலோசிக்கிறோம்'

'ஏன் கடத்தினார்கள்.என்ன வேண்டுமாம்?'

'ஒரு கோடி ரூபாய் கேக்கிறாங்க தாவிட்டால் எம்.டியை பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம்னு மிரட்டுறாங்க '

'ஓ..அப்படியா? எதுவாக இருந்தாலும் நாங்களும் ஒத்துழைக்கிறோம்.எங்க பங்களிப்பு எவ்வளவு ன்னு சொல்லுங்க'

'அதிகமில்லை ஒவ்வொருவரும் எவ்வளவு கொடுப்பது என முடிவு செய்தாச்சு'


'எவ்வளவு?'

' ஒரு லிட்டர் பெட்ரோல்'

Tuesday, November 18, 2008

யோசிக்கவச்சுட்டாங்கய்யா....

உலக அளவில் ஒரு கருத்துகணிப்பு நடத்தியது ஐநா. ஆனால் மிக பெரிய தோல்வியானது இக்கருத்து கணிப்பு. ஏன் என்றால்...


கேட்ட கேள்வி "Would you please give your honest opinion about solutions to the food
shortage in the rest of the world?"

ஆப்பிரிக்கா நாட்டில் "food" என்றால் என்னவென்று தெரியவில்லை.

இந்தியாவில் "honest" என்றால் என்னவென்று தெரியவில்லை

ஐரோப்பாவில் 'shortage' என்றால் என்னவென்று தெரியவில்லை.

சீனாவில் 'opinion' என்றால் என்னவென்று தெரியவில்லை.

middle east நாடுகளில் 'solution' என்றால் என்னவென்று தெரியவில்லை.

south ஆமெரிக்காவில் 'please' என்றால் என்னவென்று தெரியவில்லை.

ஆமெரிக்காவில் 'rest of the world' என்றால் என்னவென்று தெரியவில்லை....

ம்ம்ம்...யோசிக்கவச்சுட்டாங்கய்யா...அவ்வ்வ்வ்வ்

Friday, November 7, 2008

நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்?

(ஆங்கிலத்தில் நண்பர் அனுப்பிய ஈமெயில்.. இங்கே தமிழில்...)

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது

"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."

கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது,

"சார், 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"

கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.

அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்

"நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"

கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.

கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன் கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."

இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்துவிடு"

கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்

மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதைபோல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்.....

இப்ப தெரியாதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு? ஹாஹாஹா....

 

BLOGKUT.COM