Friday, August 17, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 3

இம்சை : கதை சொல்லு கதை சொல்லுனு சும்மா நச்சாதீங்கப்பா (அது தெரிஞ்சா சொல்ல மாட்டேனா? )
சரி, சொல்றேன் கேட்டுக்கோங்க. நைட் 12 மணி. க்ளாக்ல பெல் அடிக்குது. தூரத்துல நரி ஊளைவிடுது.

கண்மணி : அதெப்படி நடு சிட்டில நரி ஊளைவிடும்.

G3 : அதெல்லாம் அப்டிதான் எத்தனை சினிமால வருது அதெல்லாம் கேட்க மாட்டீங்க. இத மட்டும் கேளுங்க.

இம்சை : ம் அப்புறம் இந்த சத்தம் கேட்டு ஹிரோயின் திடுக்குன்னு முழிச்சுக்கறா. ஏதோ ஒன்னு அவ தொண்டை மேல சுறுசுறுனு ஏறுது.

மைபிரெண்ட் : அப்ப மியூசிக் தடதடனு அதிரனும் பாக்கறவங்க அதிரனும் சரியா

இம்சை : குட் கரெக்ட் இப்டிதான் பிக் அப் பண்ணனும்

G3 : சரி அப்புறம் என்ன சொல்லுங்க

இம்சை : அப்ப ப்ரெண்ட்டோட தம்ம திருட்டுதனமா எடுத்து அடிச்சிட்டு வீதில நடந்து போற நம்ம கதாநாயகன் சத்தம் கேட்டு காப்பாத்த வராரு வீட்டுக்குள்ள. அப்ப கதைவு சாத்தியிருக்கு அதை உடைக்கலாம்னு நம்ம ஹிரோ வேகமா ஓடி வராரு. அந்த கேப்ல ஒரு பெருச்சாளி ஓடி வந்து கதவு மேல முட்டி கதவு ஒடைஞ்சி போயிடுது. ஆனா இன்னும் நம்ம ஹீரோயினி கத்திட்டே இருக்காங்க.

கண்மணி : ஏன் கத்தறாங்க.

G3 : ம் கதவ உடைச்சா யாருதான் கத்த மாட்டாங்க ?

இம்சை : சொல்றேன் முழுசா கேளுங்க. அப்புறம் உள்ள வந்து ஹீரோயின் கழுத்துல இருந்து கஷ்டப்பட்டு தேடி ஒரு குட்டி எறும்ப எடுத்து கீழ விடுவாரு. இதனால நம்ம ஹீரோயினுக்கு அவன் மேல லவ் வந்திடுது. எப்டி என் இன்ட்ரோ சீன்

கண்மணி : சூப்பர் :)

மைபிரெண்ட் : என்ன கொடுமை இது இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன் போங்க.

இம்சை : ஏன் இந்த கதைக்கு என்ன குறை?

G3 : அதான இதுக்கு என்ன குறை?

மைபிரெண்ட் : என்ன கொடுமை ஒரு எறும்ப எடுத்து விட்டதுக்கெல்லாம் காதல் வருமா?

G3: ஆமா எத்தனை தமிழ் சினிமா பாத்திருப்போம் சும்மா கீழ விழுகறப்போ பிடிச்சா கூட காதல் வருதாமா? இதுல எறும்பு கடிக்காம காப்பத்தற ஹீரோ மேல காதல் வரதுல என்ன தப்பு?

மைபிரெண்ட்: சரி டூயட் இல்லயா? சும்மா கண்ண மூடுனா ஆஸ்திரேலியா அமெரிக்கானு போய் பாட வேண்டியதில்லையா?

அனுசுயா : என்னது ஆஸ்திரேலியா அமெரிக்காவா இதெல்லாம் பட்ஜெட்ல வராது. பேசாம சென்னை கூவம் பக்கத்துல எடுத்தாப் போதும்.

மைபிரெண்ட்: அய்யோ நாத்தம் தாங்காதே?

அனுசுயா : வேணும்னா ஆளுக்கு ஒரு மாஸ்க் வாங்கிக்கலாம்

இம்சை : சரி இந்த இடத்துல ஒரு பாட்டு வருது. எறும்பும் பெருச்சாளியயும் வெச்சு.

அனு : காயத்ரி நம்ம கதைக்கு ஒரு பாட்டு சும்மா சூப்பரா எழுதி குடும்மா

கவிதாயினி : ஆகா உங்க கதையில வர்ர எறும்பு, பெருச்சாளிக்கெல்லாம் என்னால பாட்டு எழுத முடியாது

அனு : இங்க பாரு நீ ரொம்ப பிகு பண்ணுனா நானே கவிதை எழுதி உன் பேர்ல பப்ளிஷ் பண்ணிடுவோம்

கவிதாயினி : அப்ப சரி அப்டியே எழுதிகோங்க ஆனா என் இமேஜ் ஸ்பாயில் ஆகாம பாத்துக்கோங்க

அனு : இமேஜ்னா Bmp, JPEG file தான.. அதெல்லாம் ஒன்னும் பண்ண மாட்டோம் டோன்ட் வொர்ரிமா :)

கவிதாயினி : அட கொடுமையே இப்டிலாம் நக்கல் பண்ணுனா நான் பாட்டு எழுத மாட்டேன் போங்க.

அனு : அதனால என்ன நாங்களே உன் பேர்ல எழுதிக்கரோம் :)

கண்மணி : பேசாம நீயே பாட்டு எழுதிடு.. கவிதாயினி எழுதினா அப்புறம் ஹீரோயினோட கண்ணீர தொடைக்க லாரி லாரியா டிஷ்யூ பேப்பர் வாங்க வேண்டி இருக்கும்.. உன் பட்ஜெட் தான் உதைபடும்..

அனு : அட ஆமா.. அத வேற மறந்தே போயிட்டேன்.. அப்போ நானே பாட்டு எழுதிடறேன்..

மை ப்ரெண்ட் : சரி பாட்டுக்கப்புறம் கதைய கண்டின்யூ பண்ணுங்கப்பா..

இம்சை : அடுத்து டூயட் முடிஞ்சதும் அப்படியே ஹீரோ அண்ட் ஹீரோயின் 2 பேரும் அடுத்தவங்க கண்ணையே பாத்துட்டிருக்காங்க.. திடீர்னு டமால்-னு ஒரு பயங்கர சத்தம்..

கவிதாயினி : அய்யய்யோ.. என்ன ஆச்சு??

இம்சை : ஹீரோ அப்படியே கண்ண சொருகிக்கிட்டு கீழ விழறாரு.. பாத்தா பின்னாடி ஹீரோயினோட அண்ணன் சித்தார்த் கையில ஒரு கட்டையோட கண்ணுல ஒரு கொல வெறியோட நிக்கறாரு..

மை ப்ரெண்ட் உடனே தரையில உருண்டு பொறண்டு அழறாங்க..

இம்சை : குட் இப்படித்தான் உணர்ச்சிப்பூர்வமா கதைய கேட்கனும்.. படத்துலயும் உன் ரியாக்ஷன் இது தான்.

கண்மணி : அட, கொஞ்சம் நல்லா பாருங்க.. அவ நிஜமாவே அழறா..

அனு : அய்யோ.. அடி கிடி பட்டுட போகுது.. பாத்து மா.. அப்புறம் இதுக்கு வேற நான் செலவு பண்ணனும் :-(

ஜி3 : எதுக்கு இப்படி நீ ஓவரா சீன் போடற??

மை ப்ரெண்ட் : என் சித்து எனக்கு ஹீரோவா போடாதது கூட ஓ.கே.. ஆனா அவரு எனக்கு.. எனக்கு.. ச்சே.. அந்த வார்த்தைய சொல்றதுக்கே எனக்கு பிடிக்கல :-((

நான் இந்த டிஸ்கஷன்ல இருந்து வெளிநடப்பு செய்யறேன்..

இம்சை, கவிதாயினி, ஜி3 அதிர்ச்சியில் உறைந்து நிற்க,

கண்மணி : ஹையா.. அப்போ ஹீரோயின் போஸ்டுக்கு போட்டியே இல்ல.. இனி நான் தான் ஹீரோயின் :)

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நம் ப்ரொட்யூசர் அனு, தலையில் கை வைத்து உட்கார்த்துவிடுகிறார்..

5 Comments:

said...

:-)))))))))))

superrrrrrrrr...

said...

சூப்பரு!!!
மை ஃபிரண்ட்டுக்கு சித்து அண்ணனா???
செம நச்!! :-P

சீக்கிரம் கதையை டெவலப் பண்ணுங்க!! :-)

அடுத்த பகுதிக்கு ஆவலோட வெயிட்டிங்!! :-)

said...

"இம்சை : ஹீரோ அப்படியே கண்ண சொருகிக்கிட்டு கீழ விழறாரு.. பாத்தா பின்னாடி ஹீரோயினோட அண்ணன் சித்தார்த் கையில ஒரு கட்டையோட கண்ணுல ஒரு கொல வெறியோட நிக்கறாரு.. "

:))))))))))))

கண்மணி : பேசாம நீயே பாட்டு எழுதிடு.. கவிதாயினி எழுதினா அப்புறம் ஹீரோயினோட கண்ணீர தொடைக்க லாரி லாரியா டிஷ்யூ பேப்பர் வாங்க வேண்டி இருக்கும்.. உன் பட்ஜெட் தான் உதைபடும்..
:)))))))))))))))))

செம சூப்பர் ஹா ஹா

Anonymous said...

kadhai supera irunthuthu. but kuzhaidaya azha vitu kobama poitale. paavam.

Anonymous said...

hiyo my frend paavam. kuzhandhai azhuthutey poiduchu

 

BLOGKUT.COM