Monday, August 6, 2007

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்.. - 2

வணக்கம் படம் எடுக்கறதுனு முடிவாயிடுச்சு அடுத்து என்ன டிஸ்கஷன்தான். இதோ கீழ சங்க கட்டிடத்தின் புல்வெளில உக்காந்து G3 டீ சாப்பிட்டுட்டு இருக்காங்க அப்ப நம்ம கவிதாயினி ‘காற்றினிலே வரும் கீதம்’னு பாட்டு பாடறாங்க அத கேட்டு காயத்ரி டென்ஷன் ஆயிட்டாங்க

G3 : ஏன் கவிதாயினி ப்ளாக்லதான் சோக கவிதை எழுதி எல்லாரையும் அழ விடற அட்லீஸ்ட் இங்கயாவது கொஞ்சம் சந்தோசமா பாட்டு பாடலாம்ல?

கவிதாயினி : நான் எப்பவும் சந்தோசமான பாட்டுதான் எழுதுவேன் ஆனா மத்தவங்களுக்கு காட்டும்போது கொஞ்சம் சோகம் சேர்த்தாதான் பிரபலம் ஆகும். உதாரணமா இந்த வெயில், பருத்திவீரன், காதல் இப்டி சோகமான படங்கள்தான ஹிட் ஆகுது :)

G3 : அடிபாவி இப்டியெல்லாமா ஹிட் ஆகறது ம்.. அடுத்தவங்கள அதிகமா அழ‍ வெச்ச கவிதையும், அதிகமா சிரிக்க வெச்ச படமும் ஹிட் ஆனதா சரித்திரமே இல்ல.

அப்ப அந்த பக்கமா வர்ர நம்ம கண்மணி டீச்சர்

கண்மணி : என்னது இங்க யாரோ தத்துவம் சொன்ன மாதிரி இருக்கு எனக்கு மறுபடியும் சொல்லுங்க என் ப்ளாக்ல இதை ஒரு கதையா போடனும்

அப்ப அங்க எனக்கொரு பாய்ப்ரெண்ட் வேணுமடானு பாட்டு கேட்கது ‍ அதை அடுத்து நம்ம இம்மைஅரசி வராங்க

இம்சை : வணக்கம் எல்லாருக்கும் என்ன கதை வேணும் சொல்லுங்க டீச்சர் நான் டெவலப் பண்ணி தறேன்.

அதை கேட்டதும் எல்லாரும் கோரசா வாடியம்மா கதை டெவலப் பண்றதுல உன்ன அடிச்சுக்க ஆள் ஏது?அப்ப மைபிரெண்ட்டும் அனுசுயாவும் தோட்டத்துல புதுசா பூத்த பூக்களுக்கு பேர் வெச்சிட்டு இருக்காங்க. இந்த சத்தம் கேட்டு எட்டி பார்த்திட்டு சங்க கூட்டத்துல ஐக்கியம் ஆகறாங்க.

அனுசுயா : சரி எல்லாரும் ஒன்னா சேர்ந்தாச்சு அப்டியே நாம எடுக்கபோற படத்த பத்தி ‍டிஸ்கஷன் பண்ணலாம்

மைபிரெண்ட் : படம் எடுத்தா கண்டிப்பா நம்ம சித்துதான் ஹீரோ

இம்சை : ஆரம்பிச்சுட்டியா இன்னும் படம் பேர்கூட செலக்ட் பண்ணல

மைபிரெண்ட் : சித்து ஹீரோனா நான் வேணா போனா போகுதுனு ஹிரோயினா நடிக்கறேன்பா

அனுசுயா : என்னது சித்து கித்து எல்லாம் முடியாது அம்மணி பட்ஜெட் தாங்காது. எதாவது புது முகம் போடலாம் அப்பதான் ஒத்து வரும்.

கண்மணி : என்னய ஹிரோயினியா போடனும் அப்பதான் டிஸ்கஷன்ல கலந்துக்குவேன்

G3 : அட கொடுமையே இத கேட்க ஆளே இல்லையா? நாம எடுக்க போறது முதியோர படம் இல்லீங்க டீச்சர்.

இம்சை : அதான இது என்ன ஒரு யூத் சப்ஜெக்ட் தெரியுமா?

கவிதாயினி : அது சரி யார் யார் என்ன என்ன வேலைனு முடிவு பண்ணுங்க முதல்ல

கண்மணி : நான் இப்பவே சொல்லிடறேன். படத்துல வர பஞ்ச் டயலாக் என்னோடதுதான்

அனுசுயா : நம்ம கவிதாயினிதான் பாட்டு எழுத போறாங்க

மைபிரெண்ட் : நம்ம அனு வேணா ப்ரொட்யூஸ் பண்ணட்டும்பா

அனுசுயா : சரி நம்ம இம்சைதான் டைரக்டர் ஏன்னா அவங்கதான் ஒன்னுமில்லாத கதைய டெவலப் பண்ணி டெவலப் பண்ணி நாலு பக்கம் எழுதுவாங்க. :)

G3 : யாருமே சாப்பாட்டு பொறுப்ப எடுத்துக்கல அதனால நான் அந்த பொறுப்ப பெரிய மனசு பண்ணி எடுத்துக்கறேன்.

மைபிரெண்ட் : என்னது சாப்பாட்டு பொறுப்பு நம்ம G3 யா அவளே எல்லாத்தையும் சாப்பிட்டுடுவா அப்புறம் நாம என்னத்தா சாப்பிடறது.

இம்சை : டோண்ட் வொர்ரி படம் நல்லபடியா முடியனும்னு வேண்டிகிட்டு நம்ம G3 உண்ணா விரதம் இருக்க போறாங்க அதனால ஒரு பிரச்னையும் இல்ல :)

G3 : உண்ணா நோன்பா நோ நோ நோ நான் உண்ணும் நோன்பு வேணா இருக்கறேன்

அனுசுயா : அது சரி டைரக்டர் மேடம் ஹிரோவா யார போடறது?

இம்சை : நம்ம பிரசாந்த் இல்லீனா ஸ்ரீகாந்த் இவங்கள போடலாமா?

மைபிரெண்ட் : சித்து சித்து

இம்சை : சும்மா சித்து சித்துனு சவுண்ட்விடாத அப்புறம் நம்ம கேப்டன ஹீரோவா போட்டுடுவோம்

மைபிரெண்ட் : அய்யோ வேண்டாம் நம்ம சித்துவ போட்டு படம் எடுத்து பாருங்க படம் பிச்சுகிட்டு ஓடும்

அனுசுயா : நோ நோ சம்பளம் கட்டுபடியாகாது வேணா நம்ம மெளனராகம் கார்த்தி அல்லது மைக் மோகனை ட்ரை பண்ணலாம் கொஞ்சம் சம்பளம் கம்மியா இருக்கும் :)

மைபிரெண்ட் : இந்த படம் ஓடுன மாதிரிதான் இதுவே சித்துவ போட்டு எடுத்து பாருங்க படம் 100 நாள் ஓடும்

இம்சை : யார் சொன்னாங்க சித்து வெச்சு எடுத்து ஒரு படமாவது 100 நாள் ஓடியிருக்கா அதே தாத்தாவான பிறகுகூட நம்ம தல பட்டைய கிளப்பறாரு பாரு இது தமிழ்நாடு கண்ணு இங்க ஓல்டு ஹீரோவுக்குதான் மவுசு அதிகம்

மைபிரெண்ட் : அப்ப மோகன் கார்த்தினா நான் நடிக்க மாட்டேன்பா. அவங்க மார்க்கெட் போய் ரொம்ப நாள் ஆகுது. வேற யாராவது லேட்டஸ்ட்டா 100 நாள் குடுத்தவங்கள போடுங்க.

அனுசுயா : அப்போ ஒரே ஒருத்தர்தான் இருக்கார். அவரப் போட்டா கவிதை எழுதறது, பாட்டு பாடறதுல இருந்து நமக்கு சாப்பாடு செஞ்சு போடற வரைக்கும் எல்லாத்தையும் அவரே பாத்துக்குவார். இப்போ கூட அவர் படம் 100 நாள் ஓடுச்சு.

G3 : யாராது அப்பேற்பட்ட ஆளு? நமக்கு தெரியாம???

அனுசுயா : வேற யாரு நம்ம TR தான்..........

மைபிரெண்ட் : ஆஆஆஆஆ...... (மயக்கம் போட்டு விழுகிறார்)
உடனே கவிதாயினி மைபிரெண்ட் முகத்தில் தண்ணீர் அடித்து தெளிய வைக்கிறார். எழுந்ததும் அவர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிக்க

அனுசயா : சரி சரி நாம வேணா சிபிராஜ ட்ரை பண்ணலாம். அவர போட்டா அவங்க அப்பா சத்யராஜ்கூட பணம் தந்து உதவுவாரு

இம்சை : ம் இது நல்ல ஐடியா

கண்மணி : இது மட்டும் என்ன அநியாயம் வயசான காலத்துல சத்யராஜ் மட்டும் இங்கிலீஷ்காரன் படத்தில ஹீரோவா நடிக்கறாரு நான் நடிக்க கூடாதா?

கவிதாயினி : அதானே அக்காவுக்கு நான் இருக்கேன் உடனடியா கண்மணி டீச்சர ஹீரோயினியா போட்டு தமிழ்காரினு படம் எடுக்கலாம்

இம்சை : ஆஹா எல்லாரும் ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா?

அனுசுயா : சரி சரி நாம அடுத்த டிஸ்கஷன நடேசன் பார்க்ல வெச்சுகலாம் அப்டியே டிபன் கொண்டு வந்திடுங்க அவங்க அவங்களுக்கு.

கண்மணி : என்னது டிஸ்கஷன் பூங்காவிலயா நான் 5 ஸ்டார் ஹோட்டல்னாதான் வருவேன்

கவிதாயினி : என்ன சோகம் இது ப்ரொட்டியூஸர் (உடனே ஒரு சோக கவிதை எழுத ஆரம்பிக்கறாங்க)

மைபிரெண்ட் : நான் என் சித்துகிட்ட சம்பளம் கம்மியானு கேட்டுட்டு வரேன் பை பை

இம்சை : நான் போய் கதை டெவலப் பண்றேன்பா

கண்மணி : அப்பா எப்டியோ என்ன வெச்சு படம் எடுக்க போறாங்க சந்தோசம்

அனுசுயா : எப்டியாவது ப்ரொடக்ஷன் செலவ கம்மி பண்ணனும் என்ன
பண்ணலாம் ம்ம்ம்ம்

5 Comments:

Anonymous said...

அனுசுயா : அப்போ ஒரே ஒருத்தர்தான் இருக்கார். அவரப் போட்டா கவிதை எழுதறது, பாட்டு பாடறதுல இருந்து நமக்கு சாப்பாடு செஞ்சு போடற வரைக்கும் எல்லாத்தையும் அவரே பாத்துக்குவார். இப்போ கூட அவர் படம் 100 நாள் ஓடுச்சு.

G3 : யாராது அப்பேற்பட்ட ஆளு? நமக்கு தெரியாம???

அனுசுயா : வேற யாரு நம்ம TR தான்..........
*****************
கலக்கல்.

ஒரு காலத்தில உங்களை மாதிரி பெண்குலத்திற்காகவே படம் எடுத்தவர். இப்படிக் கலாய்கிறீங்களே!

said...

கலெக்கல் அனு

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நாந்தானே ஹீரோயின் ஷூட்டிங் ஸ்பாட்ல கேமெராவ வச்சி பளிச் பளிச்சின்னு கிளிக்கிட்டு அப்பால எடிட்டிங்க்ல வெட்டிடாதீங்கோ

மை பிரண்ட் ஹீரோயின்னா TR ஹீரோவா சூப்பர் சாய்ஸ்

ஆமாம் பாட்டு கவிதாயினியா ஒரே சோகமா இருக்குமே ஓகே பரவாயில்ல

said...

சூப்பரு!!!!
சீக்கிரமா படம் எடுத்துட்டு திருட்டு வி.சி.டி அனுப்பி விடுங்க!!! :-D

அடுத்த பகுதி எப்போ??? :-)))

said...

padam aarambipeenga aarambipeenga nu interesting ah padikka aarambicha kadsee varaikkum mokkai pottutu intha post aiye mudichitteenga... aaaaaawwwwwwwwwww... :)

come on come on seekiram kalakkara maathiri oru story sollunga(ada vayithai kalakkara mathiri story ileenga..pattaiya kilappara maathiri oru story)

said...

//கதை டெவலப் பண்றேன்பா//
இல்லாத ஒன்னை எப்படிப்பா டெவலப் பண்ணுவீங்க?

//வேற யாரு நம்ம TR தான்..........//
:)))

//திருட்டு வி.சி.டி அனுப்பி விடுங்க!!!//

திருட்டு வீசீடி ஓல்டு ஸ்டைலு, நெட் ஆடியோ MP3 ரிலீசுதான் புது ஸ்டைலு

 

BLOGKUT.COM