Monday, October 1, 2007

இவர்கள் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்கள்...?

பபாச கொஞ்ச நாளா சொந்த வேலை காரணமா பிஸியா இருக்க மக்கள்ஸ் சங்கம் அம்பேல்னு சவுண்டு உட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பப்ப அதிரடியா வந்து தாக்குவோம்ல

சங்கத் தலைவி அனுசுயா உடனே ஏதாச்சும் செய்யனும்னு சொல்ல இன்ஸ்டண்ட்டா செய்யனும்னா சினிமா நியூஸ்தான் சரி வரும்னு நம்ம பேவரிட் நடிகர் நடிகைகளை ஒரு பேட்டி எடுத்தோம்.
பொதுவா நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருப்பீங்கன்னா கலெக்டர்,டாக்டர்னு பீலா உடுவாங்க.இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க.

விஜயகாந்த்: நடிக்க வரலைன்னா நான் என்ன செஞ்சிகிட்டிருப்பேன்னு தமிழ் நாட்டுல எந்த பச்சப் புள்ளையக் கேட்டாக் கூட சொல்லும்.
தமிழ்நாட்டுல எத்தனை கிராமம் இருக்கு அங்க எத்தனை குழந்தங்க இருக்காங்க இன்னும் எத்தனை குழந்தைங்க புதுசா பொறக்கப் போகுதுங்க அதுல எத்தனை பேர் என்னோட தே.மு.தி.க கட்சிக்கு ஆதரவா இருக்காங்க எத்தனை பேர் ஓட்டு போட்டு 2020 க்குள்ள என்னை முதல்வரா போறாங்கன்னு புள்ளி விபரம் எடுக்கும் ஆபிஸரா போயிருப்பேன்.

ராமராஜன்: ஏம்மா தாய்க்குலமே உனக்குத் தெரியாதா?நீல கலர் டவுசரும் தலையில ஒரு முண்டாசும் கட்டிகிட்டு வீடு வீடா போயி மாடு இருக்கான்னு பார்த்து பாடிக் கிட்டே பால் கறந்துகிட்டு இருப்பேன்.என் அரை டவுசர் பாக்கெட்டுல எப்போதும் ஒரு சின்ன டேப்ரிக்கார்டர்ல 'செண்பகமே....செண்பகமே....பதிவு பண்ணி வச்சிருக்கேன்ல

விக்ரம்: நானா...ம்ம்ம்....தெனமும் காலையில ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரத்துல குருடன் மாதிரி முழிய மாத்திகிட்டு 'புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே...ன்னு பாடுவேன்.
மத்தியானம் சுடுகாட்டு பக்கம் போயி எரியற பொணத்துக்கு முன்னாடி ஒக்காந்து காவிப் பல்லைக் காட்டிகிட்டு ,'ஆஹ் பாஅவிபஈஇவூ...ஆஆப்ம் ஆஆஆஆஅவ்வாஅர்ர்ரூ ஆஆஅ ன்னு பாடுவேன்.
ராத்திரி நேரத்துல தலை முடியை விரிச்சி மூஞ்சி மேல போட்டுக்கிட்டு தெரு முக்குல இருக்குற புரோட்டா கடைக்கு போயி கடன் குடுக்க மாட்டியா எனக்கு நான் அந்நியண்டா .உனக்கு கருடா புராணத்துல இந்த தண்டனைதான்னு சொல்லிட்டு புரோட்டா மாஸ்டரை கைமா பண்ணுவேன்

தங்கர் பச்சான்:ஆஹா நான் தமிழன்
'ஒன்பது மணிக்கு ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடாம்டா நாலரை மணிக்கு நாலரை மணிக்கு வீடு திரும்புடா'
ன்னு சொல்லி எல்லாப் பசங்களையும் பள்ளிக்கூடம் அழைச்சிப் போவேன்.
ஆங்.அழகி ங்களுக்கு முன்னுரிமை..நான் சொல்லமறந்த கதை ஒன்னு இருக்கு.என் படத்துல ஆங்கில கலப்பே இருக்காது
'ரோஸ் மேரி.....நீ என் ஜூஸ் மாரி..ஏனுங்க இது நம்ம படத்துபாட்டுதானுங்க.

ஜோதிகா: ஹாய் ...நான் ஹோல்சேல் டீலராயிருந்திருப்பேன்.அட நம்ம இதயம் நல்லெண்ணைக்குத் தாங்க.என்ன ஒன்னு விக்கிறத விட நான் இட்லிக்கு ஊத்திக்கிறதுதான் கொஞ்சம் அதிகமாயிருக்கும்

ஸ்நேகா:சரவணா ஸ்டோர்ஸில் நல்ல சேல்ஸ் கேர்ளா சேர்ந்திருப்பேன்.அப்பத்தான் அவங்க கடை துணிகள்,நகைகள் எல்லாத்துக்கும் மாடலா பர்மணெண்டா இருக்க முடியும்.[இந்த ஸ்ரேயா வேற போட்டியா கெளம்பிடுச்சி இல்ல]

திரிஷா:நிச்சயமா நான் பொறுக்கி கிட்டு இருந்திருப்பேன்.அதாங்க ஃபாண்டா பாட்டிலு மூடிங்க
நூறு மூடி பொறுக்கிக் குடுத்தா ஒரு பாட்டில் இலவசமா குடிக்கலாமில்லை?ஸ்கூல் டேஸ்ல இருந்தே இதுல நல்ல டிரெய்னிங் இருக்கு.

தேவயானி: இப்ப செய்யறதான் அப்பவும் செஞ்சிகிட்டு இருப்பேன்.மெகா சீரியல்ல நடிச்சிகிட்டே இருந்திருப்பேன்.
எப்படியும் என் மகள் இனியா பெரிய பொண்ணாயிட்டு வந்து என் ரோலை செய்யறவரைக்கும் கதையை இழுத்துக்கிட்டே......போயி அப்பால அவ நடிப்பா..
[ம்ம் இன்னும் ஒன்னு முடிந்தவரை எல்லா சீன்லேயும் அது வீடானாலும்,ஆபிஸ்னாலும் இல்லை ஹாஸ்பிடல்ல ஐ.சி யூனிட்னாலும் நான் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கிட்டேதான் இருப்பேன்.]



இந்த மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......

12 Comments:

said...

/
இந்த மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......//

இல்லங்க.... இதுவே போதுமிங்க...... ;)

said...

//
திரிஷா:நிச்சயமா நான் பொறுக்கி கிட்டு இருந்திருப்பேன்.
//

இப்பவும் நீ 'பொறுக்கி'யா தானேம்மா இருக்க

said...

wow. super. ;-)

said...

பயந்துகிட்டே உள்ள வந்தென்! நல்ல வேளை நான் டீச்சர் வாயில மாட்டலை:--))

said...

நல்ல பதிவு...(தமிழ் பதிவு.) ;)

அப்பாலே....ஆங்கில நடிகர் , நடிகைகள் எல்லாம் வருவாங்களா..

said...

\\இந்த மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;-(((((

said...

நன்றி ராம்,மங்களூர் சிவா,அபி அப்பா,டெல்பின்

டிபிசிடி உங்களுக்கு ஆப்பு ரெடியாகி கிட்டிருக்கு[இங்கிலீஷ் ஆப்பு ;)

கோபி ஏன் அவ்வ்வ்வ்வ்வ்வ் :(

said...

மை.பி டெம்ப் ஓகே வா

said...

ரஜினி, கமல், விஜய் எல்லாம் எங்கே போயிட்டாங்க... அடுத்த பகுதியில வருவாளா...

said...

நல்லாயிருக்கு....உங்க கற்பனை

said...

இன்னும் கொஞ்சம் வேணும்

said...

என்ன கொடும சார் இது!

 

BLOGKUT.COM