Monday, November 26, 2007

சாவடிக்கிறாங்களே என்னைய!!!!!

எத்தனை நகைச்சுவை வந்தாலும் இதுக்கு ஈடாகுமா?

சொல்லுங்க.. இதுக்கு ஈடாகுமா?



“மெதுவா மெதுவா.. சுவருக்கு வலிக்குமுல்ல.”

“சாவடிக்கிறாங்களே என்னைய!”

மறக்க முடியுற டயலோக்கா இது! எத்தனை தடவை இந்த டயலோக் வச்சி சுத்தி உள்ளவங்களை காமெடியனா ஆக்கியிருக்கோம் நாங்க..

ம்ம்.. அதெல்லாம் ஒரு கனாக்காலம்.. போதும் நிறுத்துங்க.. உங்க கற்பனை குதிரையை கொஞ்சம் நிறுத்துங்க.. இந்த டயலோக் கேட்டதும் எனக்கு வயசாயிடுச்சோன்னு நீங்க நினைக்க ஆரம்பிச்சிருப்பீங்களே.. அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடக்கூடாது..
நம்ம கவிதாயினியே எனக்கு பாட்டின்னா நான் சின்ன குழந்தைன்னு உங்களுக்கு சொல்லியா தெரியணும்?

தெரியுமே! உடனே ஆரம்பிச்சிடுவீங்களே அடுத்த டயலோக்கை??

ன் கொடுமை சார் து!!!!

அதானே?


கரேக்ட்.. நானும் அதான் சொல்ல வர்றேன்.. போட்டி முடிய இன்னும் நாளே நாள்.. இன்னும் தாமதம் ஆகுல.. வாங்க.. வந்து பட்டையை கிளப்பலாம்.. உங்க எண்ட்ரியை பதிவு பண்ணியாச்சா??

Sunday, November 25, 2007

என்ன கொடுமை சார் இது??

தீபாவளிக்கு ஒரு குஷில ரெண்டு நாள் லீவு போட்டுட்டு ஊருக்கு ஓடியாச்சு. தம்பியும் வந்து ஆஜர் ஆயிட்டான். நம்ம கைலதான் ஒரு கேமரா மாட்டிக்கிச்சு இல்ல ;) சும்மா ப்ரொஃபஷனல் கொரியர் ரேஞ்சுக்கு... ச்சே... ப்ரொஃபஷனல ஃபோட்டோக்ராபர் ரேஞ்சுக்கு வளைச்சுக் கட்டி ஃபோட்டோவா எடுத்து தள்ளினேன். எங்க பாட்டி ஆச்சர்யமா அந்த டிஜிகேமயே பாத்துட்டு இருந்துச்சு. இதுக்கு முன்னாடி ஃபோட்டோ எடுத்ததும் இப்படி யாருமே காட்டினதில்லனு வேற ஒரே ஃபீலிங்கா விட்டுட்டு நான்தான் அதுகிட்ட காட்டறேன்னு என் மேல ஒரு பாசப் பார்வைய வீசுச்சு.

"அய்யோ ஆயா... அவங்க இதுவரைக்கும் வச்சிருந்தது வேற கேமரா. இது இப்போதான் புதுசா வந்திருக்கு" னு நான் சொல்லவும்

"எவ்வளவு கண்ணு இது"-ன்னு கேட்டுச்சு. நானும் அப்படியே பந்தா விடலாம்னு

"இருபதாயிரம்"-னு சொன்னதும் அப்படியானு எதும் சொல்லாம ஆ-னு நாங்க ஃபோட்டோ எடுக்கறதையே பாத்துட்டு இருந்துச்சு. நானும் என் தம்பியும் ஓடி போயி எடுத்த ஃபோட்டொஸ் எல்லாத்தையும் சிஸ்டத்துல காப்பி பண்ணினோம். எங்கம்மாவும் எங்களோட வந்து உக்காந்துக்கிட்டாங்க. எல்லாத்தையும் ஓபன் பண்ணி பாத்துட்டு இருந்தப்போ ஒரு ஃபோட்டோ டிம்மா இருக்குனு நான் ஃபீல் பண்ணவும் என் தம்பி உடனே அதை ஃபோட்டோஷாப்ல போட்டு ப்ரைட்டாக்கினான். என் தம்பி சாஃப்ட்வேர் இஞ்சினியர் கிடையாது. எங்க வீட்டோட ஒரே சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் அடியேன்தான். அதனால அவன் இந்த வேலை பண்ணவும் எங்கம்மா ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க. அப்படியே பெருமை தாங்கலை. எனக்குனா ஒரே எரிச்சல். சரி நாம எதாவது பண்ணி நாமளும் ஒண்ணும் சளைச்ச ஆளில்லைனு காட்டனும்னு ஒரு விபரீத முடிவ எடுத்தேன். முடிவ எடுத்ததுக்கு அப்புறம்தான் ஞாபகம் வந்துச்சு. அய்யகோ! இந்த இத்து போன ஃபோட்டோஷாப்ப கத்துக்காம போனியேடி செல்லக்குட்டி-னு என்னை நானே நொந்துகிட்டு சரி எதாவது எடுத்து நம்ம MS-Paint அறிவ வச்சு சமாளிச்சடலாம்னு, எங்கம்மா ஃபோட்டோவ எடுத்து இதை பாருங்கம்மா கல்யாண ஆல்பத்துல எல்லாம் போடற மாதிரி பேக்ரவுண்ட் எப்படி மாத்தி தரேனு சொல்லிட்டு களத்துல இறங்கிட்டேன். அட ராமா! உள்ள ஒரு எழவும் புரியலை. நானும் வச்சுக்கிட்டு ஒரு கால் மணி நேரமா திரு தி்ருனு முழிச்சுட்டே உக்காந்திருந்தேன். அட புள்ளையே! சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டயே-னு உள்ளுக்குள்ள ஒரு பரிதாப குரல். எங்கம்மாவும் புள்ள எதாவது பண்ணும் பண்ணும்னு என்னையும் சிஸ்டத்தையும் மாறி மாறி பாத்துட்டே இருந்தாங்க.

என் உடன்பிறப்பு அதுக்கு மேல பொறுக்க முடியாம இங்க குடுக்கானு என் கைல இருந்து மவுஸ வாங்கி கசமுச கசமுசனு ஏதேதோ சித்து வேலையெல்லாம் பண்ணி ஃபோட்டோவ நான் சொன்ன மாதிரி சூப்பரா மாத்தி குடுத்தான். எனக்கு அவமானம் தாங்க முடியலை. எங்கயாவது ஃபேன் ஆஃப் பண்ணியிருக்குதானு பாத்தேன். வேற எதுக்கு???? :(((

எங்கம்மா என்னைய பாத்து கேவலமா ஒரு லுக் விட்டு "உன்னை போயி இவ்ளோ செலவு பண்ணி கம்ப்யூட்டர் படிக்க வச்சா ஒழுங்கா படிக்காம இப்படிதான் ஒண்ணுந்தெரியாம இருப்பியா? அவன் வேற படிச்சாலும் எப்படி சூப்பரா எல்லாம் பண்றான். இப்பயாவது அவன்ட்ட கத்துக்கோ"-னு சொல்லிட்டு எழுந்து போயிட்டாங்க. முருகா! ஏன் என்னை சோதிக்கற?!! ஃபோட்டோஷாப் தெரியாததால நான் சாஃப்ட்வேர் ப்ரொஃபஷனல் இல்லைன்ற அவப் பெயரா???? என்ன கொடுமை சார் இது?????

---------------------------------------
போட்டி நாள் முடிய இன்னும் ஐந்தே நாட்கள்தான் இருக்கு.. கலந்துக்க நினைப்பவர்கள் சீக்கிரமே உங்க பதிவுகளை அனுப்புங்க..

Monday, November 12, 2007

மாண்புமிகு வேலைக்காரி முனியம்மா

என்னங்க.. நம்ம வேலைக்காரியை இன்னையோட வேலையை விட்டு நிறுத்தப் போறீங்களா இல்லையா..?

ஏன்.. என்னாச்சு சாந்தி..?

நம்ம குழந்தையைப் பார்த்து "சக்களத்தி பேபி... சக்களத்தி பேபி"ன்னு பாடுறா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

என்ன முனியம்மா.. இந்த வேலைக்கெல்லாம் மாசம் எவ்வளவு கேட்கறே..?

சாதா ப்ளான் லே சேந்துக்கறீங்களா.. இல்லே டீலக்ஸ் பிளானா ..?

என்ன முனியம்மா சொல்றே..?

வெறும் வேலையை மட்டும் பார்த்தா போதுமா..? இல்லே அக்கம்பக்கத்து வீட்டு கதைகளையும் சொல்லணுமான்னு கேட்டேம்மா..!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

அமைச்சர் வீட்டுக்கு எதுக்கு கவர்னர் வந்துட்டு போறாரு..?

புது வேலைக்காரிக்கு பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செஞ்சு வைக்க வந்தாராம்...!

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

நம்ப அய்யாவுக்கும் வேறொரு பொண்ணுக்கும் தொடர்பு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு முனியம்மா..

நான் நம்ப மாட்டேன்மா.. நீங்க என்னை வெறுப்பேத்த இப்படியெல்லாம் சொல்றீங்க...!



Wednesday, November 7, 2007

தீப ஒளி வாழ்த்துக்கள்..

வாங்க மக்களே வாங்க..

அட எல்லாரும் தீபாவளி மூட்ல இருக்கீங்களா? சூப்பருங்க. வருஷத்துல ஒரு முறைதாங்க வருது தீபாவளி! 2-3 நரகாசுரன் இருந்திருந்தா வருஷத்துல 2-3 தடவை தீபாவளிங்கிற பேருல கொண்டாடி பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா காது செவுடாகிற மாதிரி வெடி கொளுத்தி போடலாம்தான்.. ஆனா பாருங்க.. நம்ம ஆதங்கத்தை கேட்கத்தான் ஆள் இருக்கா என்ன..

கவிதாயினி என்னடான்னா பொட்டு வெடி வெடிக்க போறேன்னு சொல்லிட்டு நீளமா குச்சி தூக்கிட்டு கிளம்பிட்டாங்க.. G3 ரெண்டு நாளைக்கு முன்னவே சங்கத்து பக்கம் ஆளை காணோம். கேட்டால் யார் யார் வீட்டுக்கு எப்பெப்போ போகணும், என்ன சமையல்ன்னு குறிப்பெடுத்துட்டு இருக்காங்க. ஹ்ம்ம்.. அவங்க கஷ்டம் அவங்களுக்கு!

இம்சை அரசி விகடன்ல வந்துட்டேன்னு ட்ரீட் தர்றேன்ன்னு சொன்னாங்க. குரல் மட்டும்தாங்க கேட்டுச்சு. அதுக்கப்புறம் அவங்களையும் சங்கத்து பக்கம் காணவே இல்லை. ஆமா.. காணவில்லைன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டணும்ங்க. கண்மணியக்கா காணாமல் போயிட்டாங்க. எங்கேயாவது பார்த்தீங்கன்னா சங்கத்துல கொண்டு வந்து விடுங்க. இவருடைய அங்க அடையாளங்கள்: ரெண்டு கண்கள், அவைகளை மறைக்கிற மாதிரி பெரிய சோடா பொட்டி கண்ணாடி, ரெண்டு காதுகள். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. ஒரே ஒரு மூக்கு.. ஒரே ஒரு வாய்தான். கைகளும் கால்களும் ரெண்டுதான்னு நினைக்கிறேன்..

அனுசுயா இங்கேதான் எங்கேயோ இருந்தாங்களே!

“அனுசுயா.. அனுசுயா.. இருக்கீங்களா?”

ஹ்ம்ம்.. இவங்க மட்டும்தான் என்ன பண்ணுவாங்க. கோவை மாநகரமே இவங்களை நம்பிதானே இருக்கு..

என்ன கொடுமை சார் இது!!!!

சரிங்க.. ஒத்த ஆளா இங்கே நின்னாலும், பாப்பாக்களின் சார்பா எல்லாருக்கும் எங்கள் உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்... சே சே.. தீபாவளி வாழ்த்துக்கள்!

அப்படியே கீழே இந்த வாழ்த்து பொட்டியை பாருங்க..


என்னத்தான் வளர்ந்தாலும் நம் அடையாளத்தை, கலாச்சாரத்தை மறந்திட கூடாதுங்க. எல்லாரும் மனமகிழ்ச்சியுடன் சந்தோஷமாக இருக்க இறைவனை வணங்குவோமாக..

சரி, இப்போது இன்னொரு முக்கியமான மேட்டர்.. சங்கம் போட்டிக்கு உங்கள் படைப்பு ரெடியாச்சா? இன்னும் இல்லையா? என்ன கொடுமை சார் இது!! ஒரு சின்ன பையன் போட்டின்னு வந்துட்டா கலத்துல குதிக்காமல் விடுறதில்லைன்னு பட்டையை கிளப்ப ஆரம்பிச்சுட்டான்..

இந்த தீபாவளி விழாவில் “என்ன கொடுமை சார் இது!” தலைப்புக்கு பொருத்தமா எதாவது இருந்தால் அதையும் எழுதலாமே!

ஆமா... தலை தீபாவளி கொண்டாடும் அண்ணாக்களும் அக்காக்களும் சந்தோஷமா இருக்கீங்களா? உங்களுக்கு படத்தை கொண்டு பதிவெழுதும் போட்டி பொருத்தமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கோங்க.

அனைவருக்கும் மீண்டும்
தீபாளி வாழ்த்துக்ள்!!!

Thursday, November 1, 2007

நாங்க ரெடி... நீங்க ரெடியா??



அடடா எதுக்கு ரெடினு மண்டைய பிச்சுக்காதீங்க. இதோ தீபாவளி வந்துடுச்சு. கைல வச்சுக்கற கர்ச்சீப்புல இருந்து மாவாட்டுற கல்லு வரைக்கும் எல்லாத்துக்கும் ஆஃபர் போடறாங்க. பட்டாம்பூச்சி புடவை தட்டாம்பூச்சி புடவைனு புதுசா புதுசா அறிமுகப்படுத்தறாங்க. அப்பப்பா.... எங்க பார்த்தாலும் ஒரே ஜவுளிக் கடை விளம்பரம்.... கடை விளம்பரம்... விளம்பரம்... (நல்லா எக்கோ அடிக்குதா???;))) )

சரி நாமளும் தீபாவளி ஸ்பெஷலா சங்கத்துல புதுசா எதுனாச்சும் பண்ணோனுமின்னு சங்கத்து மக்கா எல்லாரும் சேர்ந்து நம்ம சங்கத்து ஆபிஸ் ரிசப்ஷன்ல, மீட்டிங் ரூம்ல, ஸ்விம்மிங் பூல்கிட்ட, தோட்டத்துலனு ரவுண்டு கட்டி யோசிச்சோம். Cappucino, Hot chocalateனு குடிச்சு, choc-a-vloc, chicken burger, veg croizantனு சாப்பிட்டு சாப்பிட்டு ஏதோ எங்களுக்கு இருக்கற குருவி மூளைய கசக்கி கசக்கி தீபாவளிக்கு மட்டும் ஏன்? நியூ இயருக்கும் சேர்த்தே பண்ணிடலாம்னு இந்த முடிவ எடுத்திருக்கோம். ஏதோ விபரீதமான முடிவு எதுனாச்சும் எடுத்துட்டோமானு பயந்துக்காதீங்க... ஹி... ஹி... ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். இனி மேட்டருக்கு போவோம்.

இதனால எல்லாருக்கும் அறிவிக்கறது என்னன்னா..............

நமது ப.பா.சங்கம் சிறந்த நகைச்சுவை திலகத்தை போட்டி வைத்து தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. இதில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். கீழே உள்ள தலைப்பிற்கோ அல்லது படத்திற்கோ அல்லது இரண்டிற்குமோ பொருத்தமான நகைச்சுவை பதிவை எழுதி papaasangam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடுவர் குழு தீர்மானிக்கும் சிறந்த நகைச்சுவைப் பதிவருக்கு "நகைச்சுவை திலகம்" என்ற பட்டத்துடன் ஜனவரி மாதம் சங்கத்தில் எழுத வாய்ப்பும் வழங்கப்படும்.

போட்டிக்கான தலைப்பு :
என்ன கொடுமை சார் இது!!!

போட்டிக்கான படம் :


விதிமுறைகள் :

1. எவ்வளவு பெரிய பதிவு வேண்டுமானாலும் எழுதலாம்

2. எந்த ஒரு Celebrity, சக ப்ளாக்கர், உறவினர், நண்பர் என்று யாரையும் தாக்கி எழுதக் கூடாது

3. எந்த ஒரு பொதுவான வலைதளத்தையோ, வலைப்பூவையோ தாக்கி எழுதக் கூடாது

4. உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கான கடைசி தேதி 30/11/2007

5. ஒருவர் எத்தனை பதிவுகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

அவ்ளோதானுங்க....... come on guys........ cheer up.......... Rush ur entries soon...........

Tuesday, October 16, 2007

லேடீஸ் ஹாஸ்டல் லூட்டீஸ்

அட அட அட... கொஞ்ச நாளு ஆணி ஜாஸ்தியானதால அமைதியா இருந்துட்டேன் . இனிமேல் தொடர்ந்து வருவேனு நினைக்கறேன். சரி மேட்டருக்கு வருவோம். காலேஜ் லைஃப் லூட்டீஸ், ராகிங் காமெடி, காலேஜ் லவ் ஸ்டோரீஸ் இப்படி காலேஜ் வச்சு நிறைய எழுதியிருக்காங்க. ஒரு சேஞ்சுக்கு லேடீஸ் ஹாஸ்டல்ல நாங்க பண்ணின லூட்டீஸ் எல்லாம் எழுதினா என்னன்னு தோணிச்சு. சோ ஒரு சின்ன ட்ரை :)))

நான் UG படிச்ச காலேஜ் பயங்கர ஸ்ட்ரிக்ட். அதும் ஃபர்ஸ்ட் இயர்ல அப்போதான் ஸ்கூல் முடிச்சு வந்த பொண்ணுங்கன்றதால எல்லாம் வார்டனை பாத்தா ரொம்ப பயந்துப்பாங்க. நாமதான் எங்க போனாலும் விதிவிலக்குதானே. நமக்குனு ஒரு செட் வேற எங்க போனாலும் அமைஞ்சிடுது. ஹி... ஹி... போயி ஒரு மாசத்துல லூட்டிய ஆரம்பிச்சாச்சு. எங்க ரூம்ல இருக்கறது எல்லாமே பயங்கர அராத்து கேஸுங்க. எப்பவும் ரொம்ப ஜாலியா இருக்கும். அதனால வேற ரூம் பொண்ணூங்களும் எங்க ரூம்ல எப்போதும் இருப்பாங்க. எப்பவும் ஒரு பன்னெண்டு, பதிமூணு பேரு இருப்போம்.

தினமும் சாயந்திரம் 6 மணில இருந்து 8 மணி வரைக்கும் ஸ்டடி அவர். காலேஜ் வந்ததுக்கப்புறமும் படி படின்னா நல்லாவா இருக்கு??? கொஞ்சமாவது அவங்களுக்கு மேல் மாடி வேலை செய்யக்கூடாது??? ச்சே... ச்சே... என்ன ஆளுங்க இவங்கன்னு ஒரு மூச்சு ஃபீல் பண்ணிட்டு வழக்கம் போல எங்க அரட்டை கச்சேரிய ஆரம்பிச்சோம். அப்படியே குட்டி குட்டி வட்ட மேஜை மாநாடு போட்டு அப்படி அப்படியே ஜோதில ஐக்கியமாயிட்டோம்(ஒண்ணா போட்டா வார்டன் வரப்போ மாட்டிக்குவோம்னு ஒரு சேஃப்டிக்காக). நானும் இன்னும் ஒரு மூணு பேரும் சேர் போட்டு உக்காந்து மாநாடு நடத்திட்டு இருந்தப்பதான் எங்க கண்ணுல படற மாதிரி உக்காந்திருந்த ஒரு கேங் அப்படியே மெல்ல எழுந்து நின்னாங்க. நாங்க நாலு பேரும் அவங்களைப் பாத்து ஏன்டி நிக்கறீங்க அப்படி இப்படின்னு கேட்டு பயங்கரமா ஓட்டறோம் அவளுங்க வாயவே திறக்கவே இல்லை. என்னடா இதுனு மெல்ல திரும்பி பாத்தா கதவுகிட்ட வார்டன்........ ஓ மை காட்..........

அடுத்த அஞ்சு நிமிஷத்துல வார்டன் ரூம்ல நின்னுட்டு இருந்தோம் :'( எங்க வார்டன் ரூம்ல ரூமை ரெண்டா பிரிக்கிற மாதிரி ஸ்க்ரீன் போட்டிருப்பாங்க. ஸ்க்ரீன்க்கு ஒரு பக்கம் அவங்க பெட் இருக்கும். கதவுக்கு பக்கம் இருக்கற சைடுல டேபிள் போட்டு நிறைய கதை புக்ஸ் வச்சிருப்பாங்க. ஒரு ரெண்டு பேர் மட்டும் அவங்க கண்ணுல படற மாதிரி போயி நிப்போம்(இது டர்ன் பேசிஸ்). இந்த தடவை டர்ன்ல நான் மாட்டிட்டேன். நானும் இன்னொரு பொண்ணும் வார்டன் முன்னாடி நின்னோம். அவங்க பாட்டுக்கு வாயில வந்ததெல்லாம் சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் தலைய குனிஞ்சு ஓரக்கண்ணுல ஸ்க்ரீன் அந்த பக்கம் இருந்த துரோகிங்களை பாத்துட்டு நின்னோம். பிசாசுங்க கொஞ்சமாவது நாங்க பாவம்னு நினைக்க வேணாம். எல்லாம் சிரிச்சு சிரிச்சு ஹஸ்கி வாய்ஸ்ல எங்களை கமென்ட் அடிச்சிட்டு இருக்காளுங்க. அவளுங்க சிரிக்கறதை பாத்து எங்களுக்கும் சிரிப்பை அடக்க முடியலை. ஒருத்தி வேக வேகமா அங்க இருந்த கதை புக்ஸ் எடுத்து எது நல்லா இருக்குனு மேலோட்டமா பாத்து கலெக்ட் பண்ணிட்டு இருந்தா.

வார்டன் திட்டி சோர்ந்து போயி இதுங்களுக்கு என்ன சொன்னாலும் ஏறாதுனு ஒரு கட்டத்துல "இந்த வாரம் ஊருக்கு கூட்டிட்டு போக உங்க பேரண்ட்ஸ் வருவாங்க இல்ல. அப்போ என்னை வந்துப் பாத்து என் பொண்ணு இனிமே இப்படி செய்ய மாட்டானு லெட்டர் எழுதி கொடுத்தாதான் விடுவேன்"-ன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டாங்க. உடனே எல்லாரும் பயந்து போயிட்டோம். "இல்லை மேம்.... இனிமேல் இப்டி பண்ண மாட்டோம். ப்ளீஸ் மேம். இது ஒரு தடவை விட்டுடுங்க"-ன்னு அப்படியே பிட்ட போட்டோம். அவங்களும் அசர மாதிரி தெரியலை. நானும் என் ஃப்ரெண்டும் மூஞ்சிய ரொம்ப பாவமா வச்சுட்டு(நமக்கு நடிக்க சொல்லியா தரணும்) பேசி பேசி கடைசில எங்களையே என்ன பனிஷ்மென்டுனு சொல்ல சொன்னாங்க. ரொம்ப யோசிச்சு யோசிச்சு "ஒரு வாரத்துக்கு காலைல 6 to 8 உங்க ரூம் முன்னாடி உக்காந்து படிக்கறோம்"-னு நான் சொன்னேன். எங்காளுங்க எல்லாம் ஆடிப் போயிட்டாளுங்க. எங்க சூரியன் 8 மணிக்குதான் உதிக்கும். அதுவும் ஒருத்தி 8.30 மணிக்கே அலாரம் வச்சுதான் எழுவா. அப்படியே ஆத்தா கணக்கா என்னை மொறைக்கறாளுங்க. ஆனா எங்க வார்டன் அப்டியே ஷாக் ஆகி "ஓஹோ! உங்களுக்கு படிக்கிறது ஒரு பனிஷ்மென்டா?" அப்படினு கேட்டதும் தான் ஆஹா! மேட்டர் இப்டி வில்லங்கமா போகுதேனு "இல்ல மேம். காலைல 6 மணிக்கு எழுந்து வரணும் இல்ல. அதை பனிஷ்மென்டுனு சொன்னேன்" அப்படி இப்படினு சமாளிச்சு வச்சோம்.

"சரி அதையே பண்ணுங்க"-ன்னு அவங்க சொன்னதும் அப்பாடா ஒரு கண்டத்துல இருந்து தப்பிச்சோம்னு நினைச்சோம். ஏன்னா அவங்களே எப்பவும் 8 மணிக்குதான் எழுந்திருப்பாங்க. சோ நாங்க 7.45க்கு அங்க ஆஜர் ஆனா போதும். ஒரு வாரம் கஷ்டப்பட்டு போயிடலாம்னு சந்தோஷமாகிட்டோம். மறுபடியும் அவங்க "அப்படியே எல்லாரும் ஆளுக்கு 100 ரூபா ஃபைன் கட்டிடுங்க"-ன்னு பொசுக்குன்னு சொல்லிப்புட்டாங்க. ஆஆஹ்ஹ்ஹ்!!!!! எங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு. திருப்பி நானும் என் ஃப்ரெண்டும் ஒரு அரை மணி நேரம் பேசினோம். அதுக்கப்புறம் "சரி நீங்களே சொல்லுங்க. எவ்ளோ ஃபைன் கட்டறீங்க" ன்னு கேட்டாங்க. நான் மெல்ல "ஃபைவ் ருபீஸ்" ன்னேன். என்னோட நின்னுட்டிருந்தவ "ட்வென்டி ஃபைவ் ருபீஸ்"னு சத்தமா சொன்னா. எனக்கு வந்ததே கோபம். 'அடி பாவி! அஞ்சு ரூபாயில முடிக்கலாம்னு நான் ப்ளான் போட்டுட்டு இருக்கேன். அப்படியே பேசி ஒரு பத்து ருபாயிக்கு ஒத்துக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தா இந்த டாக் இப்படி சொதப்பிடுச்சே" எனக்கு ஒரே கடுப்பு. சைடுல பாத்தா எல்லாரும் எங்களை கொல வெறியோட பாக்கறாளுங்க. வார்டன் என்னடாடான்னா "100 ரூபா எங்க ... 25 ரூபா எங்க ... அதெல்லாம் முடியாது"ன்னுட்டாங்க. அப்புறம் அதுக்கு ஒரு அரை மணி நேரம் பேசி ஓகே பண்ணிட்டு வந்தோம். ஆனா கடைசி வரைக்கும் நாங்க அந்த 25 ரூபாயை கட்டவே இல்லை. காலைல ஒரு 7.45, 7.50க்கா போயி அட்டெண்டன்ஸ் போட்டுட்டு வந்துடுவோம். ஹ்ம்ம்ம்............. ஆனா இப்படி அடிக்கடி மாட்டி வார்டன் ரூமுக்கு போயிட்டு வந்ததாலதான் எங்க அறிவு ரொம்ப விசாலமடைஞ்சிது. ஏன்னா பல விதமான புக்ஸ்(ஒன்லி ஸ்டோரி புக்ஸ்) அங்க இருந்துதான் சுட்டுட்டு வந்தோமில்ல ;)

Monday, October 1, 2007

இவர்கள் என்ன செய்து கொண்டிருந்திருப்பார்கள்...?

பபாச கொஞ்ச நாளா சொந்த வேலை காரணமா பிஸியா இருக்க மக்கள்ஸ் சங்கம் அம்பேல்னு சவுண்டு உட ஆரம்பிச்சிட்டாங்க.

அப்பப்ப அதிரடியா வந்து தாக்குவோம்ல

சங்கத் தலைவி அனுசுயா உடனே ஏதாச்சும் செய்யனும்னு சொல்ல இன்ஸ்டண்ட்டா செய்யனும்னா சினிமா நியூஸ்தான் சரி வரும்னு நம்ம பேவரிட் நடிகர் நடிகைகளை ஒரு பேட்டி எடுத்தோம்.
பொதுவா நீங்க நடிக்க வரலைன்னா என்னவா இருந்திருப்பீங்கன்னா கலெக்டர்,டாக்டர்னு பீலா உடுவாங்க.இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க.

விஜயகாந்த்: நடிக்க வரலைன்னா நான் என்ன செஞ்சிகிட்டிருப்பேன்னு தமிழ் நாட்டுல எந்த பச்சப் புள்ளையக் கேட்டாக் கூட சொல்லும்.
தமிழ்நாட்டுல எத்தனை கிராமம் இருக்கு அங்க எத்தனை குழந்தங்க இருக்காங்க இன்னும் எத்தனை குழந்தைங்க புதுசா பொறக்கப் போகுதுங்க அதுல எத்தனை பேர் என்னோட தே.மு.தி.க கட்சிக்கு ஆதரவா இருக்காங்க எத்தனை பேர் ஓட்டு போட்டு 2020 க்குள்ள என்னை முதல்வரா போறாங்கன்னு புள்ளி விபரம் எடுக்கும் ஆபிஸரா போயிருப்பேன்.

ராமராஜன்: ஏம்மா தாய்க்குலமே உனக்குத் தெரியாதா?நீல கலர் டவுசரும் தலையில ஒரு முண்டாசும் கட்டிகிட்டு வீடு வீடா போயி மாடு இருக்கான்னு பார்த்து பாடிக் கிட்டே பால் கறந்துகிட்டு இருப்பேன்.என் அரை டவுசர் பாக்கெட்டுல எப்போதும் ஒரு சின்ன டேப்ரிக்கார்டர்ல 'செண்பகமே....செண்பகமே....பதிவு பண்ணி வச்சிருக்கேன்ல

விக்ரம்: நானா...ம்ம்ம்....தெனமும் காலையில ரயில்வே ஸ்டேஷன் பிளாட் பாரத்துல குருடன் மாதிரி முழிய மாத்திகிட்டு 'புண்ணியம் தேடி காசிக்குப் போவார் இந்த உலகத்திலே...ன்னு பாடுவேன்.
மத்தியானம் சுடுகாட்டு பக்கம் போயி எரியற பொணத்துக்கு முன்னாடி ஒக்காந்து காவிப் பல்லைக் காட்டிகிட்டு ,'ஆஹ் பாஅவிபஈஇவூ...ஆஆப்ம் ஆஆஆஆஅவ்வாஅர்ர்ரூ ஆஆஅ ன்னு பாடுவேன்.
ராத்திரி நேரத்துல தலை முடியை விரிச்சி மூஞ்சி மேல போட்டுக்கிட்டு தெரு முக்குல இருக்குற புரோட்டா கடைக்கு போயி கடன் குடுக்க மாட்டியா எனக்கு நான் அந்நியண்டா .உனக்கு கருடா புராணத்துல இந்த தண்டனைதான்னு சொல்லிட்டு புரோட்டா மாஸ்டரை கைமா பண்ணுவேன்

தங்கர் பச்சான்:ஆஹா நான் தமிழன்
'ஒன்பது மணிக்கு ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடாம்டா நாலரை மணிக்கு நாலரை மணிக்கு வீடு திரும்புடா'
ன்னு சொல்லி எல்லாப் பசங்களையும் பள்ளிக்கூடம் அழைச்சிப் போவேன்.
ஆங்.அழகி ங்களுக்கு முன்னுரிமை..நான் சொல்லமறந்த கதை ஒன்னு இருக்கு.என் படத்துல ஆங்கில கலப்பே இருக்காது
'ரோஸ் மேரி.....நீ என் ஜூஸ் மாரி..ஏனுங்க இது நம்ம படத்துபாட்டுதானுங்க.

ஜோதிகா: ஹாய் ...நான் ஹோல்சேல் டீலராயிருந்திருப்பேன்.அட நம்ம இதயம் நல்லெண்ணைக்குத் தாங்க.என்ன ஒன்னு விக்கிறத விட நான் இட்லிக்கு ஊத்திக்கிறதுதான் கொஞ்சம் அதிகமாயிருக்கும்

ஸ்நேகா:சரவணா ஸ்டோர்ஸில் நல்ல சேல்ஸ் கேர்ளா சேர்ந்திருப்பேன்.அப்பத்தான் அவங்க கடை துணிகள்,நகைகள் எல்லாத்துக்கும் மாடலா பர்மணெண்டா இருக்க முடியும்.[இந்த ஸ்ரேயா வேற போட்டியா கெளம்பிடுச்சி இல்ல]

திரிஷா:நிச்சயமா நான் பொறுக்கி கிட்டு இருந்திருப்பேன்.அதாங்க ஃபாண்டா பாட்டிலு மூடிங்க
நூறு மூடி பொறுக்கிக் குடுத்தா ஒரு பாட்டில் இலவசமா குடிக்கலாமில்லை?ஸ்கூல் டேஸ்ல இருந்தே இதுல நல்ல டிரெய்னிங் இருக்கு.

தேவயானி: இப்ப செய்யறதான் அப்பவும் செஞ்சிகிட்டு இருப்பேன்.மெகா சீரியல்ல நடிச்சிகிட்டே இருந்திருப்பேன்.
எப்படியும் என் மகள் இனியா பெரிய பொண்ணாயிட்டு வந்து என் ரோலை செய்யறவரைக்கும் கதையை இழுத்துக்கிட்டே......போயி அப்பால அவ நடிப்பா..
[ம்ம் இன்னும் ஒன்னு முடிந்தவரை எல்லா சீன்லேயும் அது வீடானாலும்,ஆபிஸ்னாலும் இல்லை ஹாஸ்பிடல்ல ஐ.சி யூனிட்னாலும் நான் ஹேண்ட் பேக்கை மாட்டிக்கிட்டேதான் இருப்பேன்.]



இந்த மொக்கை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......

 

BLOGKUT.COM