Tuesday, July 29, 2008

இத சொல்லி பாருங்க...

இந்த 'pickup lines' பத்தி கேள்விபட்டிருப்பீங்க... பசங்க போய் பொண்ணுங்க கிட்ட முதன் முதலா பேச முயற்சி எடுப்பாங்க. இல்ல பொண்ணுங்க போய் பசங்ககிட்ட பேச முயற்சி எடுப்பாங்க (இது ரொம்ப குறைவு தான்) இருந்தாலும் அப்படி அவங்க முயற்சி எடுக்கும்போது இது போல சில வரிகளை சொன்னால்...

(இப்படி எதையும் செய்யாமல் நல்ல பிள்ளையா வாழ்ந்திருக்கீங்களா.. அப்படின்னா, இத சொல்லி பாருங்க...)



1) உங்களுக்கு கண்டதும் காதல நம்பிக்கை இருக்கா, இல்ல நான் மறுபடியும் ஒரு தடவ உங்க முன்னாடி நடக்கவா?

2) உங்க பெயரு சித்திரையா? இல்ல.. உங்கள பாத்தவுடனே மனசு சூடா போச்சு.

3) உங்ககிட்ட map இருக்கா? உங்க கண்கள என்னைய தொலைச்சுட்டு நிக்குறேன்.

4) இப்ப ஏன் மேகம் ரொம்ப கருப்பா இருக்குதுன்னு சொல்லுங்க?
எல்லாம் நீலமும் உன் கண்கள கொட்டி கிடக்குதே!

5) என்னைய ஞாபகம் இருக்கா? ஒரு நாள் என் கனவுல உங்கள பாத்தேனே!

6) அட உங்கள பாத்தா என் வருங்கால மனைவி மாதிரியே இருக்குங்க.

7) முகத்தை உற்று பார்த்து,
பொண்ணு: ஏங்க இப்படி பாக்குறீங்க?
பையன்: ஏதாச்சு label இருக்கான்னு பாக்குறேன்.
பொண்ணு: what???
பையன்: உங்கள சொர்க்கத்துல செஞ்சாங்களான்னு பாக்க தான்!

8) பொண்ணு: வழி காட்டுறீங்களா?
பையன்: ஏங்க போக?
பொண்ணு: உங்க மனசுக்குள்ள போகதான்...

இப்படி சொல்ல போக, தர்மடி வாங்கி வந்தீங்கன்னா, வீரசூரன் என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுப்போம். முகத்தில், கை கால்களில் அடி பலமா இருந்தா, ஒரு bandage இலவசமா கொடுப்போம்! இது ஸ்டாக் இருக்கும்வரை தான்! இது ஆடி தள்ளுபடி இல்ல, அடி தள்ளுபடி! :))

Tuesday, July 22, 2008

ஃமை பிரண்ட் பிறந்த நாள் கொண்டாட்டம்

ஒரு five star hotel வெளியில் மிக பிரமாண்டமான 'கட் அவுட்'. மாலை, தோரணம், பெரிய banner என்று திருவிழா போல் காட்சியளித்தது இடம்! 'மை ஃபிரண்ட் பிறந்த நாள் கொண்டாட்டம்' என்று பெரியதாய் ஒரு பலகையில் எழுதியிருந்தது. முக்கியமான பல ஆட்கள், தொழில் அதிபர்கள் என்று ஒவ்வொருவராய் உள்ளே சென்றனர்... நமக்கு தெரிந்த பல ஆட்களும் அங்கே வந்திருந்தனர். என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்!

(பன்னீர் தெளித்து கொண்டிருந்த பெண்களை நோக்கி நடந்தார்)

கவுண்டமணி: ஹாய் லேடீஸ் லேடீஸ், ஐ எம் ஆல் இன் ஆல் அழகுராஜா, எம் எல் ஏ, அஞ்சா சிங்கம்.

செந்தில்: வணக்கம்ண்ணே....

கவுண்டமணி: who is that black sheep? (என்று பின்னாடி பார்க்கிறார்) ஓ, நீயா... என்னடா horlicks bottleக்கு label சுத்துன மாதிரி ஒரு சட்டைய போட்டு வந்திருக்கே..

செந்தில்: நீங்க மட்டும் என்னவாம்...toilet tiles போட்ட சட்டைய போட்டு வந்து இருக்கீங்க...

கவுண்டமணி: என்னடா... நக்கலா...

செந்தில்: சரி வாங்கண்ணே உள்ளே போவோம்...(வாசலில் நின்ற பெண்களிடம் பல்லை காட்டி கொண்டே..)

கவுண்டமணி: சரிடா யாருக்கு இன்னிக்கு பொறந்த நாளாம்?

செந்தில்: மை ஃபிரண்ட்

கவுண்டமணி: சரி இருக்கட்டும்... உன் ஃபிரண்ட் தான். அதான் யாருக்கு?

செந்தில்: மை ஃபிரண்ட் அண்ணே!

கவுண்டமணி: அடே, நான் அத கேட்கல்லடா... யாருக்கு பொறந்த நாளு?

செந்தில்: அதான் அண்ணே மை ஃபிரண்ட்....

கவுண்டமணி: அடே!!! (என்று அடிக்க போகிறார்..)

அரங்கத்தினுள் இருக்கும் மேடையில், சாலமன் பாப்பையா பேச ஆரம்பிக்கிறார்.

கவுண்டமணி: நிகழ்ச்சிய ஆரம்பிச்சுட்டாங்க... நீ தப்பிச்சுட்டே இப்போ..அப்பரம் கவனிச்சுக்கிறேண்டா உன்னைய....
(பாவமாக பார்க்கிறார் செந்தில்)

பாப்பையா: அருமை தாய்மார்களே, அன்பு பெரியோர்களே... வணக்கம்ய்யா! இன்னிக்கு எல்லாரும் நம்ம பொறந்த நாளு பொண்ண வாழ்த்த வந்திருக்கிறோம்ய்யா... நிறைய பேரு வந்திருக்காங்க... ஒவ்வொரு ஆளா வாங்க..வந்து வாழ்த்துங்க... முதல வராரு நம்ம ரஜினிகாந்த்

ரஜினி: எல்லாருக்கும் வணக்கம்(சிரிக்கிறார்) நான் இன்னிக்கு இமயமலைக்கு போறதா இருந்துச்சு.. ஆனா, இன்னிக்கு நம்ம லேடி சூப்பர் ஸ்டார் பொறந்த நாள் விலான்னு கேள்விபட்ட உடனே, எல்லாத்தையும் cancel பண்ணிட்டு வந்துட்டேன்... அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு சொன்ன காலமெல்லாம் மலையேறி போச்சு... இப்ப பொண்ணுங்க எல்லாம் ரொம்ப முன்னேறிகிட்டு வராங்க.. அதுக்கு ஒரு living example தான் நம்ம மை ஃபிரண்ட். எனக்கு ஒரு குட்டி கதை ஒன்னு ஞாபகத்துக்கு வருது.. ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க... அவங்க ரொம்ப ஏழை. அவங்க வீட்டுல ஒரே ஒரு சைக்களில் தான் இருந்துச்சு

(கதைய ஆரம்பித்து பேசி கொண்டிருந்தார்...)

கீழே உட்கார்ந்து இருந்த செந்தில்,

செந்தில்: உங்களுக்கு கதை புரியுதா அண்ணே

கவுண்டமணி: புரியலன்னு சொன்னா... புரிய வைக்கவா போறே.. சும்மா நிகழ்ச்சிய பாருடா...

பாப்பையா: ரொம்ப அருமையா வாழ்த்து சொன்னாரு நம்ம ரஜினிகாந்த். அடுத்து வாங்கய்யா தசாவதார சிங்கம் உலக நாயகன் கமல்.

கமல்: மேடையில் அமிர்ந்து இருக்கும் அனைவருக்கும், இந்த விழாவை கண்டுகளிக்க வந்திருக்கும் ரசிகர்களுக்கும் என் வாழ்த்துகளை முதலில் தெரிவித்து கொள்கிறேன். ஐயா அழைக்கும்போது, தசாவதார சிங்கம் என்று சொன்னார்கள். தசாவதார சிங்கம் நான் இல்லை. இன்று பிறந்த நாள் கொண்டாடும் மை ஃபிரண்ட் தான். என் படத்தை பலவகையில் விமர்சனம் போட்டு, பெரிய அளவில் மக்களிடம் சேர்த்தவளுக்கு நான் என்றென்றும் நன்றிகடன் பட்டிருக்கிறேன். அடுத்த படத்திற்காக நிறைய வேலைகள் உள்ளதால், நான் கிளம்பவேண்டிய சூழலுக்கு தள்ளபட்டிருக்கிறேன். விழா நன்றாக நடக்கட்டும். மை ஃபிரண்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்க தமிழ், வளர்க தமிழ், வாழ்க உன் தமிழ் சேவை!

கவுண்டமணி பக்கத்தில் நம்ம பிரியாமணி வந்து உட்காருகிறார்.

செந்தில் உற்சாகமாகிறார், நான் தான் செந்தில் என்று அறிமுகப்படுத்தி கை குலுக்கி கொள்ள கையை நீட்டுகிறார். அதை தடுத்த கவுண்டமணி,

கவுண்டமணி: ஹாய் ஐ எம் ஆல் இன் ஆல் அழகுராஜ், அஞ்சா சிங்கம்.

பிரியாமணி: hello, hi. glad to meet you. was in caught in a heavy traffic jam. it's so stuffy in here. are the air conditioners working?

(கவுண்டமணி முழிக்க, செந்தில் சிரிக்கிறார்...)

கவுண்டமணி:(செந்தில் காதுகளில் கேட்கும் அளவில் மெல்லிய குரலில்) என்னடா இவ இப்படி பேசுறா.. ஒன்னுமே புரியல்ல... சரி சரி இது நமக்குள்ளே இருக்கட்டும்....

(திடீரென்னு பிரியாமணி அழும் சத்தம் கேட்க...)

பிரியாமணி ஒரு தாளில் வாழ்த்து எழுதுகிறார்,

பிரியாமணி: உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்டி மை ஃபிரண்ட்....

செந்தில்: ஆமா, நீங்க ஏன் அழுவுறீங்க...

பிரியாமணி: பருத்திவீரன் படத்துக்கு அப்பரம் எனக்கு இப்படியே வந்துடுச்சு....

மேடையில் பலரும் வாழ்த்து சொல்கிறார்கள். கைதட்டல்கள் ஒரு புரம் இருக்க... உள்ளே நுழைகிறார் பருத்திவீரன் கார்த்தி. மை ஃபிரண்ட் பக்கத்தில் உட்காருகிறார். மதுரை பாஷையில்,

கார்த்தி: இப்பலாம் ரேடியோவில் ஒரே லவ் சாங்கா தான் கேட்க தோனுது. அதே மாதிரி இப்பலாம் இண்டெர்நெட் பக்கம் போனா ஒரே உங்க ப்ளாக்கா தான் பாக்க தோணுது. நல்லா எழுதுற புள்ள... இந்த புள்ள என் அண்ணி ஜோ கொடுத்துவுட்டாங்க gift. வரட்டா முத்தழகு!

இவர் கொடுத்த giftயை வாங்கி கொண்டு சந்தோஷத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார் மை ஃபிரண்ட்.

மேடை ஏறுகிறார் பார்த்திபன்.

பார்த்திபன்: ஒரு விதைக்கு தண்ணி ஊத்தின்னா, அது செடியா மாறும். அதுக்கு அப்பரம் பூவா மாறும். அந்த பூவ ரசிக்க நிறைய பேர் இருப்பாங்க. அதே மாதிரி, இங்க ஒரு 'பூ' வைச்சுருக்கும் பல வலைப்பூக்களை நாங்கள் ரசித்து கொண்டிருக்கிறோம். இவங்க தேன்கிண்ணத்துல எண்ணங்கள ஊத்துறாங்க. பசங்களுக்கு போட்டியா பயமறியா பாவையர் சங்கத்தலையும் இருக்காங்க. இந்த 'பறவை' ஒரு வேடந்தாங்கல் சொந்தக்காரி. இந்த குழந்தைக்கும் ஒரு குட்டீஸ் கார்னர். ஜில்லுனு ஒரு காதல் பார்த்த நமக்கு ஜில்லுனு ஒரு மலேசியாவையும் காட்டுறாங்க. இந்த வலைப்பூ வசியக்காரிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்!

பார்த்திபன் பேசி முடித்தபிறகு, பயங்கர கைதட்டல். தனஷை அழைக்கிறார் சாலமன் பாப்பையா...

தனஷ்: நான் தான் கொக்கி குமார் பேசுறேன். யாருச்சு இருக்கீங்களா?

கவுண்டமணி: அட கொடுமைக்கு பொறந்த கொடுமையே, கூட்டம் ஜெய் ஜெய்ன்னு இருக்கு. யாருச்சு இருக்கீங்களான்னு கேட்குறான். இந்த வரேண்டா...(என்று கோபத்தில் மேடைக்கு போக, செந்தில் கவுண்டரை தடுக்கிறார்)

செந்தில்: அண்ணே, உட்காருங்கண்ணே. அவர் கொஞ்சம் அப்படிதான்....

தொடர்கிறார் தனஷ்.

கவுண்டமணி: யப்பா...ஒரு வழியா.. காதல் கொண்டேன் தனஷ், புதுப்பேட்டை தனஷ், சுள்ளான் தனஷ்னு எல்லா modulationலையும் பேசி முடிச்சுட்டான். என்னால முடியலடா சாமி.

பக்கத்தில் ஒருவர் வந்து நிற்கிறார். தலையை நிமிர்த்தி பார்க்கிறார் கவுண்டர்.

7ஜி ரவிகிருஷ்ணா: ம்ம்ம்...பசங்கன்னா அப்படிதான் இருப்பாங்க. ஒரே மாதிரியாவா பேசுவாங்க ம்ம்ம்.... நான் எந்த பொறந்த நாள் வாழ்த்தும் சொன்னது இல்ல இதுவரைக்கும்....ம்ம்ம்.. அனிதாகிட்டகூட இப்படிலாம் செஞ்சதில்ல தெரியுமா..ம்ம்ம்....

கவுண்டமணி: மைக் செட் வாயா, அதுக்கு என்னய என்னடா பண்ண சொல்லுற...

ரவிகிருஷ்ணா: நான் போய் மை ஃபிரண்டுகிட்ட ஹாய் சொல்லிட்டு வந்துடுறேன்...(லூசுத்தனமாக சிரித்து கொண்டு மை ஃபிரண்ட் பக்கத்துக்கு செல்கிறார்....)

ஒரு வழியா எல்லாரும் வாழ்த்துகள் சொல்லி முடித்தார்கள். சாப்பாடு வழங்கப்பட்டது. கவுண்டமணியும் செந்திலும் வாழ்த்து சொல்ல மை ஃபிரண்டை பாக்க செல்கிறார்கள். அங்கே ஒருவர் ஒரு மணி நேரமா மை ஃபிரண்ட்கிட்ட பேசாமலேயே அவங்க கண்களை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறார்.

கவுண்டமணி: என்னடா இங்க நடக்குது?

ஜெயம் ரவி: அவர் தான் சார் சித்தார்த். special guest for this show. மை ஃபிரண்டுக்கு ரொம்ப பிடிச்ச ஆளு. அதான் அவங்க கண்ணாலேயே பேசிக்கிறாங்க.

செந்தில்: அது ஏன் காபி குடிச்சிகிட்டே பேசுறாங்க?

ஜெயம் ரவி: அதான்ங்க 'காபி வித் அனு'

கவுண்டமணி: ஓ அனுவா? ஆமா.. நீ என்னடா இவ்வளவு நேரமா இங்க பண்ணிகிட்டு இருக்கே....

ஜெயம் ரவி: சித்தார்த் அநேகமா தெலுங்குலதான் பேசி இருப்பாரு. அத, நான் copyright வாங்கி தமிழ்ல பண்ணலாம்னு தான் வேட்டிங்!!!! (அசட்டு சிரிப்பு சிரிக்கிறார்)

கவுண்டமணி: இந்த விஞ்ஞான உலகத்துல இப்படி ஒரு கொடுமையா?

***முற்றும்***

Thursday, June 26, 2008

பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!

பெண்கள் என்றால் இந்த ஆண்கள் எப்படிக் கணக்கு பண்ணுகிறார்கள் பாருங்கள்!
பெண்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா?
அத்தனை சுலபமாக கணக்குப் பண்ண முடியுமா?
அத்தனை சுலபமாக விடை காணவும் முடியுமா?
கடலின் ஆழம் கூட அறியலாம்..பெண்கள் மனமறிய முடியுமா?
எத்தனை சுலபமாய் பெண்களை கண்டு பிடுத்து விட்டதாக கூறுகிறார்கள்.
பொங்கி எழுங்கள் பூ[பாப்பா]க்களே!......சங்கத்து பெண்சிங்கங்களே...
ஏன் இத்தனை கோபம் ?என்ன மேட்டர்னு கேக்கறீங்களா?
இதைப் பாருங்க புரியும்

Tuesday, June 24, 2008

நான் அனைவரும் பொய் positive!

பொதுவா, நம்மளோட இரத்தம் குரூப் என்னவோ இருக்கும்- O+, A+, AB-..அப்படி இப்படின்னு ஏதாவது ஒன்னு இருக்கும். ஆனால், நாம் அனைவருக்குமே ஓரே இரத்த குரூப் தான். அதான், பொய் positive!

ஏன் சொல்றோம்னா,

சின்ன வயசுல- அம்மா, நிலாவ பாத்து "நிலா நிலா ஓடி வா'ன்னு பாட்டு சொல்லி கொடுத்தாங்க.

பாட்டி வந்து சோறு ஊட்டும்போது, "நிலாவுல ஒரு பாட்டி வடை சுடுறாங்கன்னு" சொன்னாங்க.

நம்ம தப்பு செஞ்ச தாத்தா சொன்னாங்க, "பூச்சாண்டிகிட்ட புடிச்சு கொடுத்துடுவேன்."

இளம் பருவத்தில்- காதலர்கள், " என் உயிர் உன் கையில" என்பார்கள்.
"நீ இல்லாம நான் செத்துடுவேன்." என்பார்கள்.
"நீ ரொம்ப அழகா இருக்க" என்பார்கள்.

பலாப்பழத்தகூட கையில பிடிக்க பலம் இல்லாதவன், "அந்த நிலாவ தான் நான் கையில பிடிச்சேன்." என்பான்.

ஆரஞ்சுப்பழ மாதிரி ஒரு முகத்த வச்சிருக்கும் பொண்ணுகிட்ட போய், "ஆப்பிள் பெண்ணே நீயாரோ?" என்பான்.

கல்லூரி போகும் பருவத்தில்- இருக்கும் இரண்டு தாத்தா, இரண்டு பாட்டிகளை 1008 முறை கொன்று இருப்பான்/ள், லீவு லெட்டர் மேட்டரில்.
ஸ்பெஷ்ல் க்ளாஸ் என்று சொல்லிவிட்டு சினிமாவுக்கு போவோம்.

கல்யாணம் ஆனபிறகு- தேவையில்லாமல் ஒன்னு கேட்போம், "என்னைய உனக்கு பிடிச்சிருக்கா?"

அவனும்/அவளும் வேறு வழியின்றி, "ம்ம்" என்று தலையாட்டுவான்/ள்

தாத்தா, பாட்டி ஆன பிறகு- ஆறு அறிவு கொண்ட ஒரு சிறு பிள்ளையை போய், "வைரமே, தங்கமே, முத்துவே" என்று கொஞ்சுவோம்.

இப்படி சிறு வயது முதல் பெரியவர் ஆகும் வரை, நம்மை சுற்றி பொய்கள், நாம் கேட்பது பொய்கள். நாம் சொல்வது பொய்கள். ஆனால், இது எல்லாமே positive விஷயங்களுக்காக சொல்லும் பொய் என்பதால், நாம் அனைவரின் இரத்தமும் "பொய் positive".

ஒரு தாய் மக்கள் என்பதை ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ, நாம் அனைவரும் 'ஒரு பொய் மக்கள்' என்பதை ஒத்துகொண்டே ஆக வேண்டும்! ஹிஹிஹி...:))

Tuesday, June 17, 2008

பிரியாணி with பிரியாமணி

இன்றைக்கு நாம் பாக்க போக போற நட்சத்திரம், சமீபத்தில் தேசிய விருது பெற்ற பிரியாமணி. ஒரு படத்தில்தான் அவர் உருப்படியாக நடித்தார். முத்தழகு என்று தமிழ்நாட்டு ரசிகர் நெஞ்சில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் நமது பிரியாமணியை இந்த 'பிரியாணி with பிரியாமணி' நிகழ்ச்சி மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

நிருபர்: வணக்கம் பிரியாமணி. நாங்க ப.பா. சங்கத்திலிருந்து வந்து இருக்கிறோம்.

பிரியாமணி: yea hi.

நிருபர்: உங்களுக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. அத பத்தி நினைக்கும்போது எப்படி இருக்கு?

பிரியாமணி: i am really thrilled and excited. i couldn't believe when my father broke the news to me. (சிரித்து கொண்டு) i was actually sleeping at that time..

நிருபர்: கொஞ்ச நிறுத்துங்க. ஏங்க தமிழ் தெரியாதா உங்களுக்கு? தமிழ்ல பேசி தான படத்துல நடிக்கிறீங்க. விருதுலாம் வாங்கியிருக்கீங்க. தமிழ்ல பேசுங்கப்பா.. ஏன்னா, இந்த நிகழ்ச்சிய வெள்ளைக்காரனும் பாக்குறான். அவனுக்கு தமிழ் நல்லா தெரியும்!

பிரியாமணி:( சிரித்து கொண்டே) எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எப்படி என்னைய தேர்வு செஞ்சாங்கன்னு தெரியல்ல. ஆனா இந்த நேரத்துல அமீர் சாருக்கு என்னுடைய நன்றிய சொல்லிக்கிறேன்.

நிருபர்: அப்ப அமீர் சார் தான் உங்க வெற்றிக்கு காரணமா?

பிரியாமணி: ஆமா சொல்ல போனால் அவர் எனக்கு குரு மாதிரி.

நிருபர்: ஆனா நாங்க கேள்விப்பட்டோம் அவர் நடிக்கபோகும் அடுத்த படத்துக்கு உங்கள select பண்ணாரு.. ஆனா நீங்க தான்...(என்று இழுத்தோம்)

பிரியாமணி: அப்படிலாம் ஒன்னுமில்லையே. எனக்கு dates சரிவரல்ல. அதுனால தான் (என்று மழுப்பி கொண்டு சும்மா இருந்த கைப்பேசியில் ஸ்.எம்.ஸ் வந்த மாதிரி சீன் போட..)

நிருபர்: dates? தமிழ்ல பேரிச்சம்பழம் என்போமே அதுவா? சரிவரல்லைன்னா வேற கடையில வாங்கவேண்டியது தானே.

பிரியாமணி: ஹாஹா.. குட் ஜோக்! ஒகே அடுத்த கேள்விக்கு போகலாமா?

நிருபர்: பருத்திவீரன் படத்துல உங்க மொத்த நடிப்பையும் நடிச்சதுனால, அதுக்கு அப்பரம் வந்த தோட்டா, மலைக்கோட்டை படத்துல் சுத்தமா நடிக்க மறந்துட்டீங்களே, ஏங்க?

பிரியாமணி: பருத்திவீரன் படத்துல நடிக்கிறதுக்கு space இருந்துச்சு.. மத்த படம் hero-oriented movies.

நிருபர்: ஆமா ஆமா.. கண்டிப்பா உங்களுக்கு space இருந்திருக்காது.. தோட்டா படத்துல ஜீவன் வச்சிருக்கும் முடிக்கே இடம் இருந்திருக்காது.. அப்பரம் இப்படி உங்களுக்கு.. ச்சே ச்சே.. அப்பரம் இன்னொரு கேள்வி. உங்களுக்கு ஞாபகம் மறதி இருக்கா?

பிரியாமணி: இல்ல. ஏன் இப்படி திடீர்ன்னு ஒரு கேள்வி?

நிருபர்: 'ஏ ஆத்தா ஆத்தோரமா' பாட்டுல நீங்க மறந்துபோய் உங்க அண்ண பொண்ணு dress போட்டுகிட்டு ஆடுனீங்களே. அத வச்சு சொன்னேன்.

பிரியாமணி: மம்மீ(என்று கூச்சலிட்டார். கோபமாக தான் கூப்பிடுகிறார் என்று பயந்துபோய்..)

நிருபர்: ஐயோ ஏங்க?

பிரியாமணி:(சிரித்து கொண்டு) இல்ல, இப்ப ஆப்பிள் ஜூஸ் குடிக்குற நேரம். அதான் அம்மாவ கொண்டுவர சொன்னேன்.

நிருபர்: ஓ.. நாங்க பயந்துபோயிட்டோம்.

பிரியாமணி:(ஆப்பிள் ஜூஸை குடித்து கொண்டு) ம்.. அடுத்த கேள்வி.

நிருபர்: அங்க செவுத்துல மாட்டி இருக்கே படம். அது எப்ப எடுத்தது?

பிரியாமணி: அச்சு birthday partyல.

நிருபர்: அச்சுவா?

பிரியாமணி: அஸ்வீன். ஸ்வீ சேகர் son.

நிருபர்: ஓ.. அவரா!! ஹாஹாஹா..

பிரியாமணி; ஏன் சிரிக்கிறீங்க?

நிருபர்:இல்ல, உங்க ஃபிரண்ட்ஸை பாத்தா சிரிப்பு வருது. வேகம் படத்துல என்னமா நடிச்சாரு? ச்சே.. சான்ஸே இல்ல. தொப்பை அழகனாச்சே!! பக்கத்துல அது பாக்யராஜ் மகன் தானே. அவர் படம் எப்ப வெளிவருதுன்னு அவருக்கே தெரியாது! அதுக்கு பக்கத்துல சந்தியா. காதல் படத்துக்கு அப்பரம், உங்கள மாதிரியே அவங்களும் நடிக்க மறந்துட்டாங்க. ஹாஹஹ..அதான சிரிச்சேன்.

பிரியாமணி: என்ன கிண்டலா?

நிருபர்: இல்ல சுண்டலு!

பிரியாமணி: what?!

நிருபர்: இல்ல.. பசிக்குது. அதான் கேட்டேன்.

பிரியாமணி: பேட்டி முடியட்டும். விருதே கொடுக்குறோம்.

நிருபர்: என்னது விருதா?

பிரியாமணி: சாரி ஐ மின் விருந்து. விருது கிடைச்ச பிறகு வாயிலேந்து விருது விருதுன்னே வருது.

நிருபர்: ம்ஹும் வரும் வரும்!

நி்ருபர்: அப்பரம் அடுத்த கேள்வி. உங்கள நிறைய பேர் mimicry செய்யுறாங்களே, அத பத்தி என்ன நினைக்குறீங்க.

பிரியாமணி: நம்மள ரொம்ப நேசிக்கிறவங்க தான் நம்மள மாதிரியே பண்ண ஆசைப்படுவாங்க. அப்படி நினைக்கும்போது, என் ரசிகர்களை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நிருபர்: அப்படியா! நான்கூட உங்கள மாதிரியே பேசுவேன். பாக்குறீங்களா?

(பிரியாமணி முகத்தில் ஆனந்தம் ஆட...)

நிருபர்:(அழுதுகொண்டே) உன்னைய எனக்கு ரொம்ப புடிக்கும்டா. நீ என் உசுருடா!!

பிரியாமணி: ஹாஹாஹா... நான் சாதாரணமா பேசுற மாதிரி பேசுங்க.

நிருபர்: சாரி அது என்னால முடியாது. அப்படி ஒருத்தருக்கு மட்டும்தான் வரும்.

பிரியாமணி; அப்படியா? who is that?

நிருபர்: நம்ம மன்சூர் அலிகானுக்கு தொண்டை கட்டிக்கிச்சுன்னா.. உங்க குரலே தான்!!!

(நாங்கள் எங்கள் பைகளை எடுத்து கொண்டு ஒரே ஓட்டம்...விடு ஜூட்!!)

Saturday, June 7, 2008

லிப்ஸ்டிக் கறையை எப்படித் துடைப்பது?

ஒரு பள்ளியில் மாணவிகள் லிப்ஸ்டிக் போடக் கூடாதுன்னு தடை விதிச்சாங்க
ஆனாலும் மாணவிகளுக்கு லிப்ஸ்டிக் போட்டுப் பார்க்க ஆசை.
வகுப்பறையில் மட்டும் தானே அனுமதி இல்லை என்பதால் தினமும் பள்ளியின் கழிப்பறைக்குப் போய் லிப்டிக் போட்டுக் கொண்டு கண்ணாடியில் அழகு பார்ப்பார்கள்.
அதோடு நிற்காமல் அந்த பெரிய கண்ணாடியில் அங்கங்கே தங்கள் லிப்ஸ்டிக் பூசிய உதடு்ளைப் பதித்தும் வருவார்கள்.
தினமும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளருக்கு கண்ணாடியில் பதிந்தி்ருக்கும் உதட்டுச் சாயக் கறைகளைத் துடைப்பதே பெரிய பாடாகிப் போனது.
மறுநாள் நன்கு சுத்தம் செய்ய்யப் பட்ட கண்ணாடியைப் பார்த்ததும் மாணவிகள் மேலும் குஷியாகி உதட்டுச் சாயத்தை பதித்து வைப்பார்கள்.
இது தினமும் தொடர் கதையாகிப் போக பணியாளார் பிரின்ஸ்பாலிடம் முறையிட்டார்.
மாணவிகளை அழைத்துப் பேசிய பிரின்ஸ்பால் தினமும் பணியாளர் எவ்வளவு சிரமப்பட்டு அந்தக் கறைகளைத் துடைக்கிறார் என்பதை சொன்னார்.மேலும் அவரை அதைச் செய்து காட்டச் சொல்ல பணியாளர் ஒரு ஸ்பாஞ்சை எடுத்து கழிவறையின் 'பிளஷ் அவுட்டில்' நனைத்துப் பிழிந்து அந்தக் கறைகளைத் துடைத்துக் காட்டினார்..
மறுநாள் முதல் கழிப்பறை கண்ணாடியில் எந்த உதட்டுச் சாயக்கறையும் காணப்பட வில்லை;))

Wednesday, June 4, 2008

நீங்க இப்ப எந்த stage?



நான் ரொம்ப நாளா யோசிச்ச, ஆராய்ச்சி பண்ண ஒரு விஷயத்த பத்தி தான் இன்னிக்கு சொல்ல போறேன். நம்ம போதுவா கார் பார்க் பண்ணற விஷயம் தான். ஒரு சாதாரண விஷயம் தான். ஆனா, அதுக்குள்ளே ஒரு பெரிய ரகசியமே இருக்கு.

காதலர்களாக இருந்தார்கள் என்றால், கார் பார்க் பண்ணிட்டு ரொம்ப நேரமா உள்ளேயே உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பாங்க.

கல்யாணம் ஆனா புதுசு என்றால், பையன் கார் பார்க் பண்ணிட்டு பொண்ண பக்கம் உள்ள கதவை திறந்துவிடுவான்.

கல்யாணம் முடிஞ்சு ஒரு அஞ்சு ஆறு வருஷம் கழிச்சு பார்த்தா, கார் பார்க் பண்ணும்வரை பொண்ணு வெளியே நின்னு வேட் பண்ணி, கார்க் டிக்கியில் வாங்கி வைத்திருந்த பொருட்களை எடுத்து கொண்டு செல்லும்.

கல்யாணம் முடிஞ்சு பத்து இல்ல 12 வருஷம் கழிச்சு பார்த்தா, கார் பார்க் பண்ணும்போதே, பொண்ணு, "ஏங்க, இத்தன வருஷம் கார் ஓட்டுறீங்க, பார்க் கூட சீக்கிரம் பண்ண தெரியாதா?"

கல்யாணம் முடிஞ்சு, 20 வருஷம் கழிச்சு பார்த்தா...
கார் பார்க் முடிஞ்ச அடுத்த வினாடியே, கார் கதவை 'படார்'னு முடிவிட்டு சென்றுவிடுவார் கணவன்.
மனைவி் பாவமா பொருட்களை எடுத்து கொண்டு வீட்டுக்குள் செல்வார்.


நீங்க இப்ப என்ன stage?

கார் விஷயம் மட்டும் இல்ல. நீங்களும் உங்க மனைவி/கணவன் சேர்ந்து செய்த ஏதேனும் ஒரு விஷயம் 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சு, இப்ப எப்படி இருக்குனு உங்க மனம் DVDய சற்று rewind பண்ணி பாருங்க... கண்ணு கலங்கிடும்! :))

 

BLOGKUT.COM