Wednesday, January 16, 2008

கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...

"ஹைய்யா...மை ஃபிரண்ட் காலி.. நான் ஜாலி!"ன்னு குதூகலமாய் ஆட்டம் போடுறீங்களா? விடமாட்டேன் நான்.. இதோ வந்துட்டேன்ல..

ரெண்டு நாள் ஊருல இல்லன்னா என்னென்னவோ கதை கட்டி விட்டுடுறாங்கப்பா.. இனி பதிவே எழுதவே மாட்டா.. காயிலான் கடையில உள்ள பாட்டு சீடி எல்லாம் தீர்ந்துபோச்சுன்னு வெளியில அரசல் புரசலா கோஸ்ஸிப் லீக் ஆச்சு..

ஆனால், எங்க குரு ஒரு விஷயம் சொன்னாரு.. "உன்னை பத்தி ஒரு கோஸ்ஸிப் வருதுன்னா நீயும் வளர்ந்துட்டே வரன்னு அர்த்தம்"ன்னு. இது உண்மையோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனால், இங்க இந்த நிமிடம் அந்த குரு யாருன்னு சொல்லியே ஆகணும்.. அது மட்டுமல்ல.. இவருடைய இண்ட்ரோ இங்கே ரொம்ப ரொம்ப முக்கியம்..

"என்னால் அவள் ரெண்டு மாதம்" என்ற தலைப்புல ஒரு பதிவு. சர்வேசன் போட்டியிலேயே ஒரு கலக்கு கலக்கி கடைசி சுற்று வரை போனது. எழுதுனவரு யாரு? இப்படி கேட்ட உடனே நீங்க சர்வேசன் பதிவுக்கு ஓடுறீங்களா? எதுக்கு அவ்வளவு தூரம் ஓடுறீங்க.. இருங்க.. நானே சொல்றேன்.

டக்ன்னு யாருன்னு சொல்லிட்டா பதிவு டக்ன்னு முடிஞ்சிடாதா? அதனால கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாய்ண்ட் சொல்றேன் இஅவரை பற்றி..

இவரை பற்றி இன்னும் விரிவா சொல்லணும்ன்னா பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவர். கலாய்க்க புகைப்படம் இருந்தால், அதையும் இவருக்கு ஒரு மெயிலில் தட்டி விட்டல் போதும். அடுத்த கலாய்த்தல் உங்களைப்பற்றிதான்.

அசத்த போவது யாரு ஸ்டைல்ல பாபு பிரதர்ஸ் கேட்பாங்கல்ல.. அந்த மாதிரி.. உங்களுக்கு நகைச்சுவையா, மிமிக்ரியா, வெராய்ட்டியா? எந்த மிட்டாய் வேணும்?-ன்னு கேட்டா நாம் ஏதாவது ஒன்னே ஒன்னு கேட்டு அந்த மிட்டாய் மட்டும் போதும்ன்னு சொல்லி வாங்கிக்குவோம்.

ஆனால், இவரு இருக்காரே.. எல்லாமே கொடுங்க.. நகைச்சுவை, ஜொலுல், கதைன்னு எல்லா வெராய்ட்டியும் செய்வாரு. ஆனால், ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்னுல ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருப்பாங்கல்ல.. இவருக்கு குசும்பு மற்றும் கலாய்த்தல். அய்யனாரை வைத்தே இவர் 7 முறை இவருடைய குசும்புத்தனத்தை காட்டியிருப்பார்.

இதுக்கு மேலே சஸ்பென்ஸ்ன்னு சொல்லி கண்டினியூ பண்ண முடியாது. அதான், நீங்க ஏற்கனவே யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே. ஏன் திடீர்ன்னு இவர் இங்கே என்று நீங்க கேட்கமாட்டீங்க.. காரணம்தான் உங்களுக்கு தெரியுமே..

அண்ணாத்தே சங்கம் போட்டியில சேம்பியன் ஆகி ஷ்ரேயா கோஷல் கிட்ட கோப்பை வாங்கினாரே.. அதான் கோட்டு சூட்டு போட்டு போட்டோ கூட எடுத்திருந்தாரே.. பொங்கல் அன்னைக்கே இந்த பதிவை போட்டு அண்ணாத்தே கையில கலப்பை ஒன்னு கொடுத்து எழுதுங்க குருவேன்னு சொல்லியிருக்கணும்.. அதனால என்ன? இன்னையில இருந்து ஒரு மாதம் கொடுத்துடுவோம்..


இந்தாங்க ஈ-கலப்பை..

கலக்(ங்)கட்டும் எட்டு திக்கும்..

வாழ்த்துக்கள் குசும்ன் அவர்களே..

6 Comments:

said...

புரியல எதுக்கு இப்ப குசும்பனுக்கு வாழ்த்து ??

said...

சிரிக்க வைக்க முயற்சித்தது .:: மை ஃபிரண்ட்

ஹிஹிஹிஹிஹிஹி

said...

அப்ப நான் பர்ஸ்ட் இல்லயா

said...

என் குருக்கு வாழ்த்துக்கள்

said...

//
Baby Pavan said...
அப்ப நான் பர்ஸ்ட் இல்லயா
//
இதென்ன கேள்வி மீ த பர்ஸ்ட்

said...

\\அதனால என்ன? இன்னையில இருந்து ஒரு மாதம் கொடுத்துடுவோம்..\\

ஒஒஒஒ...வாழ்த்துக்கள் அண்ணே ;)

 

BLOGKUT.COM