Monday, January 21, 2008

பெண்கள் அழகு நிஜ அழகா? எப்பொழுது?



நான்: சுவாமி பெண்கள் எப்பொழுது மிகவும் அழகாக இருப்பார்கள்? அவர்களுக்கு இருப்பது நிஜமான அழகா?


சுவாமி: குழந்தாய் என்ன இது சின்ன பிள்ளை தனமாக கேள்வி உனக்கு எப்பொழுது அழகா தெரிகிறார்கள் சொல் சரியா இல்லையா என்று நான் சொல்கிறேன்.


நான்: சுவாமி சில சமயம் தொட்டில் குழந்தையாக ஈஈஈ என்று பொக்கை வாய் காட்டி சிரிக்கும் பொழுது அழகாக தெரிகிறது.



சுவாமி: இல்லை, அப்பொழுது நீ கூட அழகாய்தான் இருந்து இருப்பாய்!!!


நான்: (இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்) நடக்க தெரியாமல் தத்தகா பித்தகா என்று நடக்கும் பொழுது?


சுவாமி: இல்லை



நான்: மண் தரையில் சொப்பு சட்டிவைத்து மண் சோறு சமைத்து விளாயாடும் பொழுது?

சுவாமி: இல்லை


நான்: மாமா பச்சை ஓலை கட்டிய பிறகு புதிதாய் போட்ட தாவணியில் வெளியே வரும் பொழுது?


சுவாமி: இல்லை


நான்: 12 வது படிக்கும் பட்டணத்து பெண் குட்டியோண்டு பாவாடை சட்டையில் புத்தக மூட்டை தூக்கி செல்லும் பொழுது?


சுவாமி: இல்லை

நான்: தோட்டத்து மல்லிகையை பறித்து பூ கட்டும் பொழுது?

சுவாமி: இல்லை


நான்: தலை குளித்து நுனியில் ஒரு முடிச்சு போட்டு லேசான ஈரம் படர்ந்து கோவிலுக்கு வரும் பொழுது?


சுவாமி: இல்லை


நான்: வெவ்வெவ்வே என்று பழிப்பு காட்டும் பொழுது?


சுவாமி: இல்லை



நான்: விழி ஓரத்தில் கண்ணீரும் அதை மறைக்க உதட்டு ஓரத்தில் பொய் சிரிப்பும் சிரிக்கும் பொழுது?


சுவாமி: இல்லை


நான்: அழகாய் பட்டு சேலை சர சரக்க மாலை போட்டு மண கோலத்தில்?


சுவாமி: இல்லை


நான்: அழகாய் வயிறு பெருத்து முகம் பூரித்து நிறை மாத கர்பிணியாய் இருக்கும் பொழுது?

சுவாமி: இல்லை




நான்: குழந்தை பெற்று குழந்தையோடு குழந்தையாகி மூக்கோடு மூக்கு உரசி விளையாடும் பொழுது?


சுவாமி: இல்லை


நான்: பொக்கை வாய் தெரிய சிரித்து தோல் சுருங்கி பாட்டியாக இருக்கும் பொழுது?


சுவாமி: இல்லை


நான்: சுவாமி நான் ரொம்ப டயர்ட் ஆகிட்டேன் குழந்தை முதல் பாட்டிவரை எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் இதுக்கு மேல் ஒன்னும் சொல்ல முடியாது நீங்களே சொல்லிவிடுங்கள் குருவே!


சுவாமி: பெண் என்று வந்த பிறகு அவள் எப்பொழுதுமே அழகுதானாட! இப்பொழுது அப்பொழுது என்று எல்லாம் பிரித்து சொல்ல முடியாது! எப்பொழுதுமே அழகாய் தான் இருக்கிறாள் பெண் உன் பார்வை தானடா வித்தியாசபடுகிறது.



குறிப்பு: 1) இந்த பதிவை சுயநினைவோடும், யாருரைய மிரட்டலும் இல்லாமல் நானே எழுதியது.

2) அருகில் பா.பா சங்கத்து ஆட்கள் யாரும் இல்லை அவர்கள் கையில் கத்தி, தூக்கு கயிறு, விசம், கவிதாயினி கவிதை, அய்யனார் கவிதை தொகுப்பு புத்தகம் எல்லாம் வைத்து என்னை மிரட்டவில்லை நானே சொந்தமாக எழுதியது அவ்வ்வ்வ்வ்:(

Thursday, January 17, 2008

பபாச...புதிர்களுக்கான விடைகள் இங்கே

பபாச போட்ட புதிர்

புதிர்களுக்கான விடைகள் இங்கே:

1.பால்;தயிர்;நெய்

2.முருங்கை [இலை;முருங்கைப் பூ;முருங்கைக்காய்]

3.மீன்;மீன் பிடிப்பவன்;தூண்டில் புழு

4.கோழி [முட்டை]

5.தேங்காய்;[நெத்துக் காயில் இருக்கும் பூ] எலுமிச்சை பழம் [ஊறுகாயாவது]

6.வெற்றிலை

7.எலுமிச்சைபழம் [கொடியில்]

Wednesday, January 16, 2008

கலாய் கலாய் கலக்கலாய் கலாய்...

"ஹைய்யா...மை ஃபிரண்ட் காலி.. நான் ஜாலி!"ன்னு குதூகலமாய் ஆட்டம் போடுறீங்களா? விடமாட்டேன் நான்.. இதோ வந்துட்டேன்ல..

ரெண்டு நாள் ஊருல இல்லன்னா என்னென்னவோ கதை கட்டி விட்டுடுறாங்கப்பா.. இனி பதிவே எழுதவே மாட்டா.. காயிலான் கடையில உள்ள பாட்டு சீடி எல்லாம் தீர்ந்துபோச்சுன்னு வெளியில அரசல் புரசலா கோஸ்ஸிப் லீக் ஆச்சு..

ஆனால், எங்க குரு ஒரு விஷயம் சொன்னாரு.. "உன்னை பத்தி ஒரு கோஸ்ஸிப் வருதுன்னா நீயும் வளர்ந்துட்டே வரன்னு அர்த்தம்"ன்னு. இது உண்மையோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனால், இங்க இந்த நிமிடம் அந்த குரு யாருன்னு சொல்லியே ஆகணும்.. அது மட்டுமல்ல.. இவருடைய இண்ட்ரோ இங்கே ரொம்ப ரொம்ப முக்கியம்..

"என்னால் அவள் ரெண்டு மாதம்" என்ற தலைப்புல ஒரு பதிவு. சர்வேசன் போட்டியிலேயே ஒரு கலக்கு கலக்கி கடைசி சுற்று வரை போனது. எழுதுனவரு யாரு? இப்படி கேட்ட உடனே நீங்க சர்வேசன் பதிவுக்கு ஓடுறீங்களா? எதுக்கு அவ்வளவு தூரம் ஓடுறீங்க.. இருங்க.. நானே சொல்றேன்.

டக்ன்னு யாருன்னு சொல்லிட்டா பதிவு டக்ன்னு முடிஞ்சிடாதா? அதனால கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாய்ண்ட் சொல்றேன் இஅவரை பற்றி..

இவரை பற்றி இன்னும் விரிவா சொல்லணும்ன்னா பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று பாகுபாடு இன்றி எப்பொழுதும் கலாய்ப்பவர். கலாய்க்க புகைப்படம் இருந்தால், அதையும் இவருக்கு ஒரு மெயிலில் தட்டி விட்டல் போதும். அடுத்த கலாய்த்தல் உங்களைப்பற்றிதான்.

அசத்த போவது யாரு ஸ்டைல்ல பாபு பிரதர்ஸ் கேட்பாங்கல்ல.. அந்த மாதிரி.. உங்களுக்கு நகைச்சுவையா, மிமிக்ரியா, வெராய்ட்டியா? எந்த மிட்டாய் வேணும்?-ன்னு கேட்டா நாம் ஏதாவது ஒன்னே ஒன்னு கேட்டு அந்த மிட்டாய் மட்டும் போதும்ன்னு சொல்லி வாங்கிக்குவோம்.

ஆனால், இவரு இருக்காரே.. எல்லாமே கொடுங்க.. நகைச்சுவை, ஜொலுல், கதைன்னு எல்லா வெராய்ட்டியும் செய்வாரு. ஆனால், ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒன்னுல ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா இருப்பாங்கல்ல.. இவருக்கு குசும்பு மற்றும் கலாய்த்தல். அய்யனாரை வைத்தே இவர் 7 முறை இவருடைய குசும்புத்தனத்தை காட்டியிருப்பார்.

இதுக்கு மேலே சஸ்பென்ஸ்ன்னு சொல்லி கண்டினியூ பண்ண முடியாது. அதான், நீங்க ஏற்கனவே யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களே. ஏன் திடீர்ன்னு இவர் இங்கே என்று நீங்க கேட்கமாட்டீங்க.. காரணம்தான் உங்களுக்கு தெரியுமே..

அண்ணாத்தே சங்கம் போட்டியில சேம்பியன் ஆகி ஷ்ரேயா கோஷல் கிட்ட கோப்பை வாங்கினாரே.. அதான் கோட்டு சூட்டு போட்டு போட்டோ கூட எடுத்திருந்தாரே.. பொங்கல் அன்னைக்கே இந்த பதிவை போட்டு அண்ணாத்தே கையில கலப்பை ஒன்னு கொடுத்து எழுதுங்க குருவேன்னு சொல்லியிருக்கணும்.. அதனால என்ன? இன்னையில இருந்து ஒரு மாதம் கொடுத்துடுவோம்..


இந்தாங்க ஈ-கலப்பை..

கலக்(ங்)கட்டும் எட்டு திக்கும்..

வாழ்த்துக்கள் குசும்ன் அவர்களே..

Tuesday, January 15, 2008

புதிர் போடும் பாப்பா சங்கம்...

மக்கள்ஸ்!!!!
எல்லோருக்கும் பாப்பா சங்கத்து சார்பாக

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்



அப்பப்ப யாராச்சும் சங்கம் தூங்குது இழுத்து மூடியாச்சுன்னு புரளி கெளப்பறாங்க.
தூங்குற சிங்கத்தை சாரி...சங்கத்தை சீண்டாதீங்கப்பூ
சரி இந்த முறை மொக்கைக்கு பதில் கொஞ்சம் விடுகதை சொல்றேன்..பதில் சொல்லுங்க.

1.சாயந்திரம் கை சேர்த்து
சாமத்தில கருத்தரிச்சி
விடிஞ்சதும் தாயும் புள்ளயும்
பிரிச்சி விட்டாச்சி

அவர்கள் யார்?

2.பொட்டு பொட்டா இலை இருக்கும்
பொறி போல பூப் பூக்கும்
தின்னக் காய் கொடுக்கும்
திங்காத பழம் கொடுக்கும்

அது என்ன?

3.வாரீரே போறீரே கீழாலே
வந்திருக்கான் உன் பாட்டன் மேலாலே
செத்துக் கிடக்கேன் நான் உன்னாலே
சாகப் போறே நீ என்னலே

யார் அவர்கள்?

4.அரியலூர் சீமாட்டி
அதிக புள்ளைக்காரி
பால் கொடுக்காது
புள்ளை வளர்ப்பதில் கெட்டிக்காரி

யார் அவள்?

5.காயான பிறகு பூவாகும்
கனியான பிறகு காயாகும்

அவை என்ன?

6.பொறந்த வீட்டில் ஒரு கிள்ளு
புகுந்த வீட்டில் ரெண்டு கிள்ளு

அவன் யார்?

7.பாட்டி வீட்டுத் தோட்டத்தில்
ஊஞ்சலாடும் மஞ்சக் குருவி

அது என்ன?

அப்பாடா....ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு போட்டாச்சு..[இல்லாட்டி சங்கத்துல இருந்து தூக்கிடுவாங்களே;)...தூக்குறது பத்தி மேட்டரு இல்ல.பாப்பா னு சொல்லிக்க முடியாதே:))

விடை கண்டு புடிச்சி பின்னூட்டம் போடுங்க மக்கள்ஸ்!!!!

சரியான பதிலை அடுத்த பதிவுல சொல்றேன்.

Saturday, January 12, 2008

முகமூடி கொள்ளை

கணவன் : பக்கத்து வீட்டு மாமி ரொம்ப நல்லவங்களாச்சே! நீ ஏன் வீணா அவங்களோட அடிக்கடி சண்டைக்குப் போறே?

மனைவி: அவங்க அசப்பில் பார்த்தா உங்கம்மா மாதிரி இருக்காங்களே, அதான்!
_________________

நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"
_________________

வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
_________________

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?

மற்றவர் : தெரியலைங்களே! முகமூடி போட்டிருந்தாரு!
_________________

ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :

"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."



நன்றி: தமிழ் ஜோக்ஸ்



பி.கு: டாக்டர் டெல்பின் மேடம், இதை படிச்சு அடிக்க வர்றாதீங்க. மீ தி எஸ்கேப்..

 

BLOGKUT.COM